குறள் எண் 1
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
அகரம் முதல, எழுத்து எல்லாம்;-ஆதி-
பகவன் முதற்றே உலகு.
குறள் எண் 2
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
கற்றதனால் ஆய பயன் என்கொல்-வால்-அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்.
குறள் எண் 3
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
குறள் எண் 4
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
குறள் எண் 5
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
குறள் எண் 6
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.
குறள் எண் 7
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.
குறள் எண் 8
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
பிற ஆழி நீந்தல் அரிது.
குறள் எண் 9
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
கோள் இல் பொறியில் குணம் இலவே-எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
குறள் எண் 10
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து
பிறவிப் பெருங் கடல் நீந்துவர்; நீந்தார்,
இறைவன் அடி சேராதார்.
குறள் எண் 11
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
அஃதாவது, இறைவனருட்கு அடுத்தபடியாக, அவன் ஏற்பாட்டின்படி, உலக நடப்பிற்கும் அறம் பொருளின்பப் பேற்றிற்கும் இன்றியமையாத துணைக்கரணமாகிய மழையின் சிறப்பைக் கூறுதல்.
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்,
தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று.
குறள் எண் 12
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி, துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை.
குறள் எண் 13
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
விண் இன்று பொய்ப்பின், விரிநீர் வியன் உலகத்து-
உள் நின்று உடற்றும் பசி.
குறள் எண் 14
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
ஏரின் உழாஅர் உழவர், புயல் என்னும்
வாரி வளம் குன்றிக்கால்.
குறள் எண் 15
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.
குறள் எண் 16
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
விசும்பின் துளி வீழின் அல்லால், மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது.
குறள் எண் 17
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும், தடிந்து எழிலி-
தான் நல்காது ஆகிவிடின்.
குறள் எண் 18
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
சிறப்பொடு பூசனை செல்லாது- வானம்
வறக்குமேல், வானோர்க்கும், ஈண்டு.
குறள் எண் 19
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
தானம் தவம் இரண்டும் தங்கா, வியன் உலகம்
வானம் வழங்காது எனின்.
குறள் எண் 20
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 2. வான் சிறப்பு
நீர் இன்று அமையாது உலகுஎனின், யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு.
குறள் எண் 21
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
அஃதாவது, இறைவன் திருவருளைப் பெற்றவரும், மழைபெயற்கு ஓரளவு கரணியமாகக் கருதப் பெறுபவரும், பேரரசர்க்கும் பெருந்துணையாகும் அறிவாற்றல் மிக்கவரும், மழைக்கு அடுத்தபடியாக நாட்டு நல்வாழ்விற்கு வேண்டியவருமான, முற்றத்துறந்த முழு முனிவரின் பெருமை கூறுதல்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும்- பனுவல் துணிவு.
குறள் எண் 22
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டற்று.
குறள் எண் 23
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று, உலகு.
குறள் எண் 24
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
உரன் என்னும் தோட்டியான், ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து.
குறள் எண் 25
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும், கரி.
குறள் எண் 26
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
செயற்கு அரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்.
குறள் எண் 27
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
சுவை, ஔத, ஊறு, ஓசை, நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்கட்டே-உலகு.
குறள் எண் 28
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்.
குறள் எண் 29
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும், காத்தல் அரிது.
குறள் எண் 30
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 3. நீத்தார் பெருமை
அந்தணர் என்போர் அறவோர்-மற்று எவ் உயிர்க்கும்
செந் தண்மை பூண்டு ஒழுகலான்.
குறள் எண் 31
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அஃதாவது, முனிவரால் கூறப்படும் மூன்றனுள் முதன்மையானதும், மக்கள் இருவகை யின்பமும் அடைதற்கும் உலகம் இனிது நடைபெறற்கும் எல்லாராலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதுமான, அறத்தின் இன்றிமையாமையை வலியுறுத்திக் கூறுதல்.
சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ, உயிர்க்கு.
குறள் எண் 32
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை; அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.
குறள் எண் 33
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்.
குறள் எண் 34
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர, பிற.
குறள் எண் 35
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல், நான்கும்
இழுக்கா இயன்றது-அறம்.
குறள் எண் 36
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அன்று அறிவாம் என்னாது, அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
குறள் எண் 37
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை.
குறள் எண் 38
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல்.
குறள் எண் 39
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
அறத்தான் வருவதே இன்பம்; மற்று எல்லாம்
புறத்த; புகழும் இல.
குறள் எண் 40
அறத்துப் பால்
பாயிரம்
அதிகாரம் 4. அறன்வலியுறுத்தல்
செயற்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி.
குறள் எண் 41
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
அறநூற் பாகுபாட்டின்படி அறம் பொருளின்பம் வீடென வரிசைப் படுத்தப்பட்ட உறுதிப்பொருள் நான்கனுள், முதலதான அறத்தைக் கடைப்பிடிக்கும் இருவகை வாழ்க்கை முறைகளையுங் கூறும் பெறும் பகுதி ,அறத்துப்பால் எனப்பட்டது. இது பாயிரத்தின் இறுதி அதிகாரமான அறன் வலியுறுத்தலோடு பொருள்தொடர்புங் கொண்டதாயிற்று. பகு-பகல்-பால்=பகுதி, நூற்பெரும் பகுதி.
2. இல்லற வியல்
இருவகை அறவாழ்க்கைகளுள், இயல்பானதும் பெரும்பான்மையானதும் உலகநடப்பிற்கு இன்றியமையாததும், துறவறத்திற்கும் இன்றியமையாத துணையாவதும், உலகிலுள்ள ஐம்புலவின்பமும் நுகர்வதும், முறைப்படி கடைப்பிடிக்கப்பெறின் வீடுபேற்றையுந் தருவதும், நல்லறமென்று உயர்ந்தோராற் சிறப்பிக்கப் பெறுவதுமான இல்லற வாழ்க்கையின் இயல்பைக் கூறும் சிறு பகுதி இல்லறவியல் எனப்பட்டது.
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
அஃதாவது, ஒருவன் தன் கற்புடை மனைவியொடு கூடி இல்லத்தின்கண் இருந்து இன்பந்துய்த்து வாழும் அறவாழ்க்கையின் இன்றியமையாமையையும் சிறப்பையும் எடுத்துக் கூறுவது.
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
குறள் எண் 42
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்,
இல்வாழ்வான் என்பான் துணை.
குறள் எண் 43
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
குறள் எண் 44
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின், வாழ்க்கை
வழி எஞ்சல், எஞ்ஞான்றும், இல்.
குறள் எண் 45
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
அன்பும் அறனும் உடைத்துஆயின், இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
குறள் எண் 46
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்.
குறள் எண் 47
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
குறள் எண் 48
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
குறள் எண் 49
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.
குறள் எண் 50
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 5. இல்வாழ்க்கை
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்.
குறள் எண் 51
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
அஃதாவது,இல்லறத்தானின் வாழ்க்கைத் துணையாகிய கற்புடை மனைவியின் நலங்களை எடுத்துக்கூறுதல்.
மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.
குறள் எண் 52
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
மனை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின், வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும், இல்.
குறள் எண் 53
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
இல்லது என், இல்லவள் மாண்புஆனால்? உள்ளது என்,
இல்லவள் மாணாக்கடை.
குறள் எண் 54
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
பெண்ணின் பெருந்தக்க யா உள-கற்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்.
குறள் எண் 55
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
பெய்ஒ என, பெய்யும் மழை.
குறள் எண் 56
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
தற்காத்து, தற் கொண்டாற் பேணி, தகை சான்ற
சொற்காத்து, சோர்வு இலாள்-பெண்.
குறள் எண் 57
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை.
குறள் எண் 58
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
பெற்றாற் பெறின் பெறுவர், பெண்டிர், பெருஞ் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
குறள் எண் 59
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை-இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
குறள் எண் 60
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்
மங்கலம் என்ப, மனைமாட்சி; மற்று அதன்
நன்கலம் நன் மக்கட் பேறு.
குறள் எண் 61
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
அஃதாவது, இனப்பெருக்கத்திற்கும் உலக நடப்புத் தொடர்ச்சிக்கும் இறைவன் வகுத்த இயற்கையான ஏற்பாட்டின்படியும், தத்தம் தொழிலில் தமக்கு உதவி செய்தற்பொருட்டும், உழைக்க இயலாத முதுமைக்காலத்தில் தம்மைப் பேணும் பொருட்டும், தாம் இறந்தபின் தம் பெயரால் அறஞ்செய்தற் பொருட்டும், தம் பெயரை இவ்வுலகில் நிலவச்செய்தற் பொருட்டும், பிள்ளைகளைப் பெறுதல்.
பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை-அறிவு அறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
குறள் எண் 62
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
எழுபிறப்பும் தீயவை தீண்டா-பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
குறள் எண் 63
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
தம் பொருள் என்ப தம் மக்கள்; அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்.
குறள் எண் 64
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
அமிழ்தினும் ஆற்ற இனிதே-தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்.
குறள் எண் 65
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம்; மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம், செவிக்கு.
குறள் எண் 66
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
குழல் இனிது; யாழ் இனிது என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.
குறள் எண் 67
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
குறள் எண் 68
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
தம்மின், தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது.
குறள் எண் 69
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.
குறள் எண் 70
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 7. மக்கட்பேறு
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, இவன் தந்தை
என் நோற்றான்கொல்!ஒ எனும் சொல்.
குறள் எண் 71
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அஃதாவது, இல்லறத்தானும் அவன் வாழ்க்கைத் துணையுமாகிய, கணவனும் மனைவியும் தாம் பெற்ற மக்களிடத்துக் காட்டிய அன்பை, துறவோர்ப் போற்றல், விருந்தோம்பல், ஒப்புரவொழுகல், இல்லார்க் கீதல், இரப்போர்க்கிடுதல் முதலிய இல்லறவினைகள் நடைபெறற்கேற்ப பிறரிடத்தும் உடையராயிருத்தல். பிள்ளைகளைப் பெற்றவர்க்கே பிறரிடத்து அன்புண்டாகும் என்பது பொதுவான உலகக் கொள்கை.
அன்பிற்கும் உண்டோ , அடைக்கும் தாழ்?ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்.
குறள் எண் 72
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்பு உடையார்
என்பும் உரியர், பிறர்க்கு.
குறள் எண் 73
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்போடு இயைந்த வழக்கு என்ப-'ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு'.
குறள் எண் 74
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்புஒ என்னும் நாடாச் சிறப்பு.
குறள் எண் 75
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப-'வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு'.
குறள் எண் 76
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை.
குறள் எண் 77
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
என்பு இலதனை வெயில் போலக் காயுமே-
அன்பு இலதனை அறம்.
குறள் எண் 78
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல்மரம் தளிர்த்தற்று.
குறள் எண் 79
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்-யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு.
குறள் எண் 80
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 8. அன்புடைமை
அன்பின் வழியது உயிர்நிலை; அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு.
குறள் எண் 81
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
அஃதாவது, இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும், அன்புடையவராயிருந்து, தம் இல்லறத்திற்கேனும் ஊருக்கேனும் புதிதாக வந்த உயர்ந்தோரையும், அவர் தங்கும் சில பல நாட்கட்கு அவர் தகுதிக்கும் தம் நிலைமைக்கும் ஏற்ப, உறையுளும் சிறந்தவூணும் உதவிப் பேணுதல்.
வேற்றூரிலிருந்து வந்த உறவினர்க்கும் நண்பர்க்கும் இங்ஙனமே சிறப்பு நடக்குமேனும், அது அறத்தின்பாற் படாது வழக்கமும் கடமையும் பற்றியதாகும். அதனால், அதை உறவாடல் என்றும் நட்பாடல் என்றும் பிரித்துக் கூறல் வேண்டும்.
விருந்தோம்பல் என்னும் சிறந்த அறம், ஆரியர் தென்னாடு வந்த பிறப்பொடு தொடர்புற்ற குலப் பிரிவினையால் தமிழரின் ஒற்றுமையைச் சிதைத்தபின், தமிழகத்து அடியோடு நின்றுவிட்டது.
விரும்புவது என்னும் வேர்ப் பொருளைக் கொண்ட விருந்து என்னுஞ் சொல், பின்பு விரும்பப் பெற்ற புதியவரையும் அவர் நிலைமையான புதுமையையும் அவர்க்களிக்கும் சிறந்த வுணவையும் முறையே குறித்து, இன்று உறவினர்க்கும் நண்பர்க்கும் படைக்கும் சிறந்த வுணவையே குறிக்கும் இழிபடைந்துள்ளது. பண்டைவிருந்தினர் புதியவராயிருந்ததினால் புதுவர் எனவும் பட்டார்.
"புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்" (மலைபடு.412)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தற்பொருட்டு.
குறள் எண் 82
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று.
குறள் எண் 83
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
குறள் எண் 84
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
அகன் அமர்ந்து செய்யாள் உறையும்-முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்.
குறள் எண் 85
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ-விருந்து ஓம்பி,
மிச்சில் மிசைவான் புலம்.
குறள் எண் 86
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
செல் விருந்து ஓம்பி, வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து, வானத்தவர்க்கு.
குறள் எண் 87
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை; விருந்தின்
துணைத் துணை-வேள்விப் பயன்.
குறள் எண் 88
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
பரிந்து ஓம்பி, பற்று அற்றேம் என்பர்-விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார்.
குறள் எண் 89
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை; மடவார்கண் உண்டு.
குறள் எண் 90
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 9. விருந்தோம்பல்
மோப்பக் குழையும் அனிச்சம்;- முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
குறள் எண் 91
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
அஃதாவது, பொதுவாக எல்லார்க்கும் சிறப்பாக விருந்தினர்க்கும், இன்முகங் காட்டியபின் இன்சொற் சொல்லுதல்.
இன் சொல்-ஆல் ஈரம் அளைஇ, படிறு இலஆம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்.
குறள் எண் 92
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே-முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப்பெறின்.
குறள் எண் 93
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி, அகத்தான் ஆம்
இன் சொலினதே-அறம்.
குறள் எண் 94
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்-யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொலவர்க்கு.
குறள் எண் 95
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
பணிவு உடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி; அல்ல மற்றுப் பிற.
குறள் எண் 96
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
அல்லவை தேய அறம் பெருகும்-நல்லவை
நாடி இனிய சொலின்.
குறள் எண் 97
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
நயன் ஈன்று நன்றி பயக்கும்-பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
குறள் எண் 98
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
குறள் எண் 99
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான், எவன்கொலோ-
வன் சொல் வழங்குவது.
குறள் எண் 100
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 10. இனியவை கூறல்
இனிய உளவாக இன்னாத கூறல்-
கனி இருப்ப, காய் கவர்ந்தற்று.
குறள் எண் 101
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
அஃதாவது, இன்முகதோடும் இன்சொல்லோடும் விருந்தோம்பி வேளாண்மை
செய்தவர்க்கும் வேறு வகையில் உதவினவர்க்கும் நன்றியறிவுடையராயிருத்தல்.
" உப்பிட்டவரை உள்ளளவும் நினை." " உண்ட வீட்டிற்கு இரண்டகம் பண்ணுகிறதா?
" என்னும் பழமொழிகள் இங்கு நினைக்கத் தக்கன.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
குறள் எண் 102
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது.
குறள் எண் 103
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
குறள் எண் 104
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்.
குறள் எண் 105
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
உதவி வரைத்து அன்று உதவி; உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
குறள் எண் 106
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
மறவற்க, மாசு அற்றார் கேண்மை! துறவற்க,
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு.
குறள் எண் 107
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்-தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.
குறள் எண் 108
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
நன்றி மறப்பது நன்று அன்று; நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று.
குறள் எண் 109
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
கொன்றன்ன இன்னா செயினும், அவர் செய்த
ஒன்று நன்று உள்ள, கெடும்.
குறள் எண் 110
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 11. செய்ந்நன்றி யறிதல்
எந் நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்; உய்வு இல்லை,
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
குறள் எண் 111
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
அஃதாவது, தகுதி பற்றி ஒருவரை ஒருவினைக்கு அமர்த்தும் போதும், திறமை பற்றி ஒரு துறையிற் சிறந்தவர்க்குப் பரிசளிக்கும் போதும், விலைக்குக் கொள்ளும் பொருட்டுப் பண்டங்களுள் நல்லனவற்றைத் தெரிந் தெடுக்கும்போதும், குற்றச்சாட்டுப் பற்றி ஒருவர் நடத்தையை ஆய்ந்து தீர்ப்புக் கூறும் போதும் பகை நட்பு நொதுமல் (அயல்) என்னும் முத்திறத்தும் ஒத்திருந்து உண்மைப்படி ஒழுகுதல் நன்றி செய்தவரித்துங் கண்ணோடி நடுநிலை திறம்பக் கூடாதென்பதற்கு இது செய்ந்நன்றியறிதலின் பின் வைக் கப்பட்டது.
நடுநிலை என்னும் சொல், சமன் செய்து சீர்தூக்குந் துலைக் கோலில் நடுநின்று ஒருபாற் கோடாத நாவின் நிலைமையினின்று எழுந்தது.
தகுதி என ஒன்றும் நன்றே-பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின்.
குறள் எண் 112
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி,
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 113
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
நன்றே தரினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்.
குறள் எண் 114
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப்படும்.
குறள் எண் 115
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.
குறள் எண் 116
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
கெடுவல் யான் என்பது அறிக-தன் நெஞ்சம்
நடுவு ஓரீஇ அல்ல செயின்.
குறள் எண் 117
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
கெடுவாக வையாது உலகம்-நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
குறள் எண் 118
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து, ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
குறள் எண் 119
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
சொற் கோட்டம் இல்லது செப்பம்-ஒருதலையா
உட் கோட்டம் இன்மை பெறின்.
குறள் எண் 120
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 12. நடுவு நிலைமை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
குறள் எண் 121
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
அஃதாவது, செருக்கின்றியும் வரம்பிறந்தொழுகாதும் முக்கரணத்தாலும் அடங்கிநடத்தல். இது தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருதும் நடுநிலை மனப்பான்மை வழியதாகலின், நடுவுநிலைமையின் பின் வைக்கப்பட்டது.
அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.
குறள் எண் 122
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
காக்க, பொருளா அடக்கத்தை-ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு.
குறள் எண் 123
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
குறள் எண் 124
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
குறள் எண் 125
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
குறள் எண் 126
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
ஒருமையுள் ஆமைபோல் ஐந்து அடக்கல் ஆற்றின்,
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 127
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
யா காவார் ஆயினும் நா காக்க; காவாக்கால்,
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
குறள் எண் 128
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
ஒன்றானும் தீச்சொற் பொருட் பயன் உண்டாயின்,
நன்று ஆகாது ஆகிவிடும்.
குறள் எண் 129
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்;- ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
குறள் எண் 130
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 13. அடக்கமுடைமை
கதம் காத்து, கற்று, அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
குறள் எண் 131
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
அஃதாவது , அறத்திலும் , கடமையிலும் வழுவாதொழுகுதல் . முக்கரணமும் அடங்கிய வழி இஃது எளிதாகலின் , அடக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது .
ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.
குறள் எண் 132
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம்-தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை.
குறள் எண் 133
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்.
குறள் எண் 134
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
மறப்பினும், ஒத்துக் கொளல் ஆகும்; பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.
குறள் எண் 135
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை-
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
குறள் எண் 136
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்-இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
குறள் எண் 137
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின் எய்துவர், மேன்மை; இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
குறள் எண் 138
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்; தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
குறள் எண் 139
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே-தீய
வழுக்கியும் வாயால் சொலல்.
குறள் எண் 140
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 14. ஒழுக்கமுடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்.
குறள் எண் 141
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
அஃதாவது காமமயக்கத்தாலும் , அழகுள்ள பெண்டிர் பலரொடு கூடி இன்பம் நுகரவேண்டுமென்னும் ஆசையாலும் , பிறன் மனைவியை விரும்பாமை . இஃது ஒழுக்கத்திற் சிறந்தாரிடத்திலேயே நிகழ்வதாகலின் , ஒழுக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது .
பிறன் பொருளாள்-பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்கண் இல்.
குறள் எண் 142
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
குறள் எண் 143
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற-தௌதந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்.
குறள் எண் 144
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
எனைத் துணையர் ஆயினும் என்னாம்-தினைத் துணையும்
தேரான் பிறன் இல் புகல்.
குறள் எண் 145
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
எளிது என இல் இறப்பான் எய்தும்-எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
குறள் எண் 146
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
பகை, பாவம், அச்சம், பழி என நான்கும்
இகவா ஆம்-இல் இறப்பான்கண்.
குறள் எண் 147
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
அறன் இயலான் இல்வாழ்வான் என்பான்-பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்.
குறள் எண் 148
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ?ஆன்ற ஒழுக்கு.
குறள் எண் 149
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
நலக்கு உரியார் யார்? எனின், நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதார்.
குறள் எண் 150
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 15. பிறனில்விழையாமை
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
குறள் எண் 151
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
அஃதாவது, தெரிந்தோ தெரியாமலோ பிறர் தமக்குச் செய்த சிறியவும் பெரியவுமான தீங்குகளை யெல்லாம் திருப்பிச் செய்யாதும், அவற்றிற்காக அவரைத் தண்டியாதும், பொறுத்துக் கொள்ளுதல். பெருங்குற்றமாயினும் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்றற்கு, இது பிறனில் விழையாமையின் பின் வைக்கப்பட்டது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல, தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
குறள் எண் 152
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று.
குறள் எண் 153
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
குறள் எண் 154
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
நிறை உடைமை நீங்காமை வேண்டின், பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும்.
குறள் எண் 155
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர்,
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.
குறள் எண் 156
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்.
குறள் எண் 157
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
திறன் அல்ல தன்-பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று.
குறள் எண் 158
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்றுவிடல்.
குறள் எண் 159
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
துறந்தாரின் தூய்மை உடையர்-இறந்தார்வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்.
குறள் எண் 160
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 16. பொறையுடைமை
உண்ணாது நோற்பார் பெரியர்-பிறர் சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின்.
குறள் எண் 161
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அஃதாவது, பிறராக்கங் கண்டு பொறாமை படாமை. பொறாமை என்பது பொறுத்தலின் மறுதலையாதலால், அதை விலக்குதற்கு இவ்வதிகாரம் பொறையுடைமையின் பின் வைக்கப்பட்டது.
அழுங்குதல் வருந்துதல் அல்லது துன்புறுதல். அழுங்குவது அழுக்கு. அது உறு என்னும் துணைவினை பெற்று அழுக்குறு எனநிற்கும். அழுக்குறுதல் பிறராக்கங் கண்டு பொறாது வருந்துதல். நாசமுறு என்னும் வினை நாசமுறு என்று உலக வழக்கில் திரிந்தாற்போன்று, அழுக்குறு என்பதும் அழுக்கறு என இலக்கிய வழக்கில் திரிந்தது. "அழுக்கற் றகன்றாருமில்லை" (170) என வள்ளுவரே கூறுதல் காண்க. நாசமுற்றுப் போவான் என்பது நாசமற்றுப் போவான் என்றே வழங்குதல் காண்க.
அழுக்கறு என்னும் கூட்டுவினை அழுக்காறு என நீண்டு தொழிற் பெயராகும். அது முதனிலை திரிந்த தொழிற்பெயர். அழுக்காறு கடும் பொறாமை. அழுக்கறாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயர் அழுக்காறாமை என நீண்டு வழங்குகின்றது. இது வராமை தராமை என்பன வாராமை தாராமை என நீண்டது போன்றது.
ஒழுக்கு ஆறாக் கொள்க-ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
குறள் எண் 162
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை-யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
குறள் எண் 163
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அறன், ஆக்கம், வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்.
குறள் எண் 164
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அழுக்காற்றின் அல்லவை செய்யார்-இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
குறள் எண் 165
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அழுக்காறு உடையார்க்கு அது சாலும்- ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது.
குறள் எண் 166
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
குறள் எண் 167
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
குறள் எண் 168
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.
குறள் எண் 169
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான்
கேடும், நினைக்கப்படும்.
குறள் எண் 170
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 17. அழுக்காறாமை
அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
குறள் எண் 171
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
அஃதாவது, பிறர் பொருள்மேல் ஆசைகொள்ளாமை. பொறாமையினாற் பிறர் பொருளைக் கவர விரும்புவது இயல்பாதலால், இது கூடாதென்பதற்கு அழுக்காறாமையின் பின் வைக்கப்பட்டது. வௌ-வௌகு-வெஃகு. வௌளுதல் விரும்புதல்.
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின், குடி பொன்றி,
குற்றமும் ஆங்கே தரும்.
குறள் எண் 172
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
படு பயன் வெஃகி, பழிப்படுவ செய்யார்-
நடுவு அன்மை நாணுபவர்.
குறள் எண் 173
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
சிற்றின்பம் வெஃகி, அறன் அல்ல செய்யாரே-
மற்று இன்பம் வேண்டுபவர்.
குறள் எண் 174
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
இலம் என்று வெஃகுதல் செய்யார்-புலம் வென்ற
புன்மை இல் காட்சியவர்.
குறள் எண் 175
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
அஃகி அகன்ற அறிவு என் ஆம்-யார்மாட்டும்
வெஃகி, வெறிய செயின்.
குறள் எண் 176
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
அருள் வெஃகி, ஆற்றின்கண் நின்றான், பொருள் வெஃகிப்
பொல்லாத சூழ, கெடும்.
குறள் எண் 177
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
வேண்டற்க, வெஃகி ஆம் ஆக்கம்-விளைவயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன்.
குறள் எண் 178
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
அஃகாமை செல்வத்திற்கு யாது? எனின், வெஃகாமை
வேண்டும் பிறன் கைப் பொருள்.
குறள் எண் 179
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார்ச் சேரும்-
திறன் அறிந்து ஆங்கே திரு.
குறள் எண் 180
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 18. வெஃகாமை
இறல் ஈனும், எண்ணாது வெஃகின்; விறல் ஈனும்,
வேண்டாமை என்னும் செருக்கு.
குறள் எண் 181
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
அஃதாவது, ஒருவரில்லாதவிடத்து அவரைப் பற்றித் தீதாகப் பேசுதல். புறம் முதுகு அல்லது பின்பக்கம். ஒருவரில்லாத இடம் அவருக்குத் தெரியாத முதுகுப் பக்கம் போன்றிருத்தலால் புறம் எனப்பட்டது. புறத்திற் கூறுவது புறங்கூறுதல். அது புறம் எனவும்படும். அன்று அது இடவாகு பெயர்.
புறங்கூறுதல், கோட் சொல்லுவதும் குண்டுணி பேசுவதும் என இரு வகைத்து. ஓர் அதிகாரியினிடத்தில் ஒரு பணியாளனைப் பற்றித தீதாகச் சொல்வது கோள். சோம்பேறிகள் பலர், சிறப்பாக வேலையொழிந்த பெண்டிர், ஒருவரைப் பற்றித் தீதாகப்பேசி மகிழ்வது குண்டுணி. கோள் குறளை யெனவும்படும்.
இலக்கிய வழக்கிற் பெரும்பாலும் கோட் சொல்லுவதைக் குறிக்கும் புறங்கூற்று, ஒருவரின் பதவியை அல்லது வேலையைப் பொறாமையால் அல்லது தன்னலத்தால் வெஃகி அதைப் பறிப்பதற்கு நிகழ்வதாயிருத்தலால், அதைக் கண்டித்தற்குப் புறங்கூறாமை வெஃகாமையின் பின் வைக்கப்பட்டது.
அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.
குறள் எண் 182
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே-
புறன் அழீஇப் பொய்த்து நகை.
குறள் எண் 183
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
புறம் கூறி, பொய்த்து, உயிர் வாழ்தலின், சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்.
குறள் எண் 184
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
கண் நின்று, கண் அறச் சொல்லினும், சொல்லற்க-
முன் இன்று பின் நோக்காச் சொல்.
குறள் எண் 185
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்.
குறள் எண் 186
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்.
குறள் எண் 187
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்-நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்.
குறள் எண் 188
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்,
என்னைகொல், ஏதிலார்மாட்டு.
குறள் எண் 189
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
அறன் நோக்கி ஆற்றும் கொல் வையம்-புறன் நோக்கிப்
புன் சொல் உரைப்பான் பொறை.
குறள் எண் 190
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 19. புறங்கூறாமை.
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்,
தீது உண்டோ , மன்னும் உயிர்க்கு.
குறள் எண் 191
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
அஃதாவது, வேலை செய்யாத ஓய்வு நேரத்திலும் தனக்கேனும் பிறர்க்கேனும் அறம் பொருளின்பங்களுள் ஒன்றும் பயவாத வீண் சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல் , பயனில் சொல் என்னும் நால்வகைச் சொற்குற்றங்களுள் , பொய் இல்லறத்தார்க்குப் பயன்படுமாறும் துறவறவியலிற் கண்டிக்கப்படுவதனாலும், கடுஞ்சொல் இனியவை கூறலானும் குறளை புறங்கூறாமையானும் விலக்கப்பட்டமையாலும் , எஞ்சி நின்ற பயனில் சொல்லை கடிவது இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒன்றைச் சொல்வதற்குக் கேட்பாரும் வேண்டியிருத்தலின் , இருவர்க்குக் குறைந்து சொல்லாட்டு நிகழ்த்த முடியாது. இருவரோ பலரோ கூடி வீண் பேச்சுப் பேசும் போது, நகையாடி மகிழ்தற் கேனும் பிறரைப் பற்றிப் புறங்கூற்றாகப் பேச நேருமாதலின் , அத்தொடர்பு பற்றி இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.
பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்.
குறள் எண் 192
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
பயன் இல பல்லார்முன் சொல்லல், நயன் இல
நட்டார்கண் செய்தலின் தீது.
குறள் எண் 193
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
நயன் இலன் என்பது சொல்லும்-பயன் இல
பாரித்து உரைக்கும் உரை.
குறள் எண் 194
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
நயன் சாரா நன்மையின் நீக்கும்-பயன் சாராப்
பண்பு இல் சொல் பல்லாரகத்து.
குறள் எண் 195
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
சீர்மை சிறப்பொடு நீங்கும்-பயன் இல
நீர்மை உடையார் சொலின்.
குறள் எண் 196
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்!
மக்கட் பதடி எனல்.
குறள் எண் 197
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
நயன் இல சொல்லினும் சொல்லுக! சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று.
குறள் எண் 198
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்-
பெரும் பயன் இல்லாத சொல்.
குறள் எண் 199
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்-மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர்.
குறள் எண் 200
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 20. பயனில சொல்லாமை
சொல்லுக, சொல்லில் பயன் உடைய! சொல்லற்க,
சொல்லில் பயன் இலாச் சொல்.
குறள் எண் 201
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
அஃதாவது, இம்மையிலும் மறுமையிலும் துன்பம் விளைவிக்கும் தீவினைகட்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல். பயனில் சொல்லையும் தீச்சொல் என விலக்கியமையால், தீவினை விலக்கப்பட்டமை சொல்லாமலே பெறப்படும். முக்கரணத்துட் சொல்லிற் கடுத்தது செயலாலாமதலால், இது பயனில சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.
தீச்சொல்லினும் தீச்செயல் கொடியது என்னாது தீவினையச்சம் என்றார்.
தீவினையார் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-
தீவினை என்னும் செருக்கு.
குறள் எண் 202
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
தீயவை தீய பயத்தலான், தீயவை
தீயினும் அஞ்சப்படும்.
குறள் எண் 203
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
அறிவினுள் எல்லாம் தலை என்ப-தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
குறள் எண் 204
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
மறந்தும் பிறன் கேடு சூழற்க! சூழின்,
அறம் சூழும், சூழ்ந்தவன் கேடு.
குறள் எண் 205
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
இலன் என்று தீயவை செய்யற்க! செய்யின்,
இலன் ஆகும், மற்றும் பெயர்த்து.
குறள் எண் 206
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
தீப் பால தான் பிறர்கண் செய்யற்க-நோய்ப் பால
தன்னை அடல் வேண்டாதான்.
குறள் எண் 207
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்.
குறள் எண் 208
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்தற்று.
குறள் எண் 209
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்.
குறள் எண் 210
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 21. தீவினையச்சம்
அருங் கேடன் என்பது அறிக-மருங்கு ஓடித்
தீவினை செய்யான் எனின்.
குறள் எண் 211
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
அஃதாவது இல்லறத்தாருட் பெருஞ் செல்வரானவர் செல்வருள் உயர்ந்தோரான வள்ளல்களைப் பின்பற்றியொழுகுதலின் கண், வளவனாயினும் அளவறிந்தளித்துண். என்ற நெறிமுறைப்படி தத்தம் அளவறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுதல், உயர்ந்தோரான வள்ளல்களை யொத்தொழுகுதலும் அவரவர் செல்வத்தின் அளவறிதலும் பற்றி ஒப்புரவறிதல் எனப்பட்டது. இது பெருஞ்செல்வர்க்குரிய உலக நடையாம்.
"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்றவன் கைவண்மையே".
என்று (புறம் 139). உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியிருத்தல் காண்க.
தீவினைக்கு எதிரானதும் அதைப் போக்க வல்லதும் நல்வினையாதலானும், நல்வினையிற் சிறந்தது ஈகையாதலானும், ஈகையிற் சிறந்த வகையான ஒப்புரவறிதல் தீவினையச்சத்தின் பின் வைக்கப்பட்டது. தீவினையாகிய மறத்திற்கு மாறும் மாற்றும் அறம். அறத்தின் சிறந்த வகை ஈகை 'ஈதலறம்' என்றார் ஔவையாரும்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு
என் ஆற்றும் கொல்லோ, உலகு.
குறள் எண் 212
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற்பொருட்டு.
குறள் எண் 213
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல் அரிதே-
ஒப்புரவின் நல்ல பிற.
குறள் எண் 214
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்; மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.
குறள் எண் 215
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
ஊருணி நீர் நிறைந்தற்றே-உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு.
குறள் எண் 216
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்-செல்வம்
நயன் உடையான்கண் படின்.
குறள் எண் 217
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
மருந்து ஆகித் தப்பா மரத்தற்றால்-செல்வம்
பெருந்தகையான்கண் படின்.
குறள் எண் 218
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
இடன் இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார்-
கடன் அறி காட்சியவர்.
குறள் எண் 219
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு.
குறள் எண் 220
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 22. ஒப்புரவறிதல்
ஒப்புரவினால் வரும், கேடு எனின், அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து.
குறள் எண் 221
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
அஃதாவது, செல்வர் வறியோரான இல்லார்க் கீதலும் இரப்போர்க்கிடுதலுமாம். மூவகையான ஈதல்வகையுள், ஒப்புரவு முன்னர்க் கூறப்பட்டமையால் அடுத்த இரண்டையுந் தழுவும் ஈகை அதன்பின் இங்கு வைக்கப்பட்டது.
இல்லார் புலவர் உறவினர் முதலியோர்; இரப்போர் குருடர் முடவர் முதலியோர்.
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
குறள் எண் 222
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
நல்லாறு எனினும், கொளல் தீது; மேல் உலகம்
இல்ஒ எனினும், ஈதலே நன்று.
குறள் எண் 223
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்கண்ணே உள.
குறள் எண் 224
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
இன்னாது, இரக்கப்படுதல்-இரந்தவர்
இன் முகம் காணும் அளவு.
குறள் எண் 225
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப் பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
குறள் எண் 226
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
அற்றார் அழி பசி தீர்த்தல்! அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி.
குறள் எண் 227
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
பாத்து ஊண் மரீஇயவனைப் பசி என்னும்
தீப் பிணி தீண்டல் அரிது.
குறள் எண் 228
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்-தாம் உடைமை
வைத்து இழக்கும் வன் கணவர்.
குறள் எண் 229
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
இரத்தலின் இன்னாது மன்ற-நிரப்பிய
தாமே தமியர் உணல்.
குறள் எண் 230
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 23. ஈகை
சாதலின் இன்னாதது இல்லை; இனிது, அதூஉம்
ஈதல் இயையாக் கடை.
குறள் எண் 231
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
அஃதாவது, ஒருவர்க்கு உலகமுள்ள அளவும் அழியாது நிற்குங்கீர்த்தி. இது ஈகையால் நிகழ்வதால் அதன்பின் வைக்கப்பட்டது.
ஈதல்! இசைபட வாழ்தல்! அது அல்லது
ஊதியம் இல்லை, உயிர்க்கு.
குறள் எண் 232
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
குறள் எண் 233
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,
பொன்றாது நிற்பது ஒன்று இல்.
குறள் எண் 234
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
நில வரை நீள் புகழ் ஆற்றின், புலவரைப்
போற்றாது, புத்தேள் உலகு.
குறள் எண் 235
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும்,
வித்தகர்க்கு அல்லால் அரிது.
குறள் எண் 236
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
தோன்றின், புகழொடு தோன்றுக! அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
குறள் எண் 237
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
புகழ்பட வாழாதார் தம் நோவார், தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
குறள் எண் 238
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
வசை என்ப, வையத்தார்க்கு எல்லாம்-ஒஇசைஒ என்னும்
எச்சம் பெறாஅவிடின்.
குறள் எண் 239
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
வசை இலா வண் பயன் குன்றும்-இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்.
குறள் எண் 240
அறத்துப் பால்
இல்லறவியல்
அதிகாரம் 24. புகழ்
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்.
குறள் எண் 241
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
இல்லறவின்பத்தைத் துய்த்தறியாதும் துய்த்தும், உலக வாழ்க்கையில் அல்லது பிறவித் துன்பத்தில் வெறுப்பும் வீடுபேற்றில் அல்லது பேரின்பத்துய்ப்பில் வேட்கையுங் கொண்டு, மாணிய (பிரமசாரிய)ப் பருவத்திலேனும் மனையற நிலையிலேனும் முறியன் (தபுதாரன்) நிலைமையிலேனும் மூப்பிலேனும் துறவு பூண்டு அதற்குறிய அறங்களைக் கடைப்பிடித்து, நான் எனது என்னும் இருவகைப்பற்றையும் விட்டுப் பிறவியினின்று விடுதலை பெறுதலைக் கூறும் சிறு பகுதி, துறவறவியல் எனப்பட்டது.
இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமேனும், அதற்குறிய பொறுப்பு மிகுதியாதலானும், அது ஆசை வளர்தற்கு இடந்தரலானும், அப்பொறுப்பைத் தாங்கவும் ஆசையை அடக்கவும் ஆற்றலில்லார் தனி வாழ்க்கையை விரும்பித் துறவறத்தை மேற்கொள்வர் என அறிக.
துறவறத்திற்குறியனவாகத் திருக்குறளிற் சொல்லப்பட்டுள்ள அறங்கள். அருளுடைமை, புலால் மறுத்தல், கூடா ஒழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, துறவு, அவாவறுத்தல் என்பனவாம்; பயிற்சிகள் தவம், மெய்யுணர்தல் என்பனவாம். இவையெல்லாம் அருள், தவம், துறவு, ஓகம் (யோகம்) என்னும் நான்கனுள் அடங்கும் ஆதலால் இவற்றை நால்வாயில் எனலாம்.
அருளுடைமை, புலால் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை என்னும் அறங்களும் தவம் என்னும் பயிற்சியும், இல்லறத்திற்கும் ஏற்குமேனும்; அவற்றை முற்றக் கைக் கொள்வதும் நெடுகக் கடைப்பிடிப்பதும் இல்லறத்தில் இயலாமையின், அவை துறவறத்திற்கே முற்றளவாகவுரியனவும் இன்றியமையாதனவுமாகக் கொள்ளப்பட்டன.
ஊர்காவலர் மாறுகோலம் பூண்டு மறைவாகச் சென்று குற்றவாளியரைப் பிடிப்பதும், ஒற்றர் வேறு கோலத்திற் சென்று பகைவர் நிலைமையையும் மருமங்களையும் அறிவதும், அரசன் உருமாறிச் சென்று நகர நோட்டம் செய்வதும், காதலர் தொடக்க நிலையில் மறைவாக ஒழுகுவதும், தற்கொலை செய்யத் துணிந்த ஒருவர் உண்ண வைத்திருந்த நஞ்சை மறைவாக நீக்குவதும், அரசியலிலும் இல்வாழ்க்கையிலும் குற்றமாகாத களவுவினைகளாம்.
போரிற் பகைவரையும் செங்கோலாட்சியிற் கொலைஞரையும் கொல்வது, அரசனுக்குக் கடமை மட்டுமின்றி அறவினையுமாம்.
இங்ஙனமே ஏனையவற்றையும் உணர்ந்து கொள்க.
நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாத கணவன் மனைவியர் இறைவனை நோக்கித் தவங்கிடப்பினும், வாழ்நாள் முழுதும் அதைத் தொடர்வது மரபன்மை காண்க. இதை,
மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
என்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.
என்னும் குறளை நோக்கி யுணர்க.
தமிழர் வாழ்க்கை முறை இல்லறம் துறவறம் என இருவகைப்பட்டதே. இல்லறம் போன்றே துறவறமும் எல்லார்க்கும் பொதுவாம். அதற்குப் பருவ வரம்போ அகவை வரம்போ இல்லை. ஆயின், ஆடவனாயினும் பெண்டாயினும் தனியாகவே அல்லது தன் பாலார் இருக்குமிடத்திலேயே தங்கல் வேண்டும். ஆரியர் மனைவியொடு கூடி மேற்கொள்ளும் காடுறைவு (வானப் பிரத்தம்) என்னும் மூன்றாம் நிலையும், தம்மை முனிவர் என்று கூறிக் கொண்டே இல்லற இன்பத்தை நுகர்ந்து மனைவி மக்களொடு கூடி வாழும் வீடுறைவும், தமிழரும் திரவிடருமான பழங்குடி மக்களை ஏமாற்றித் தாம் என்றும் இன்பமாய் வாழ வகுத்த சூழ்ச்சியாதலால், கூடாவொழுக்கத்தின் பாற்பட்ட போலித் துறவே யென வுணர்க.
இனி, வீடுபேறு இறைவனை வழிபட்டு அவன் திருவருளாலேயே அடையக் கூடியதாயிருப்பதால், கடவுட் கொள்கையில்லா மதத்தினர் துறவறம் ஒழுகுவது பயனில் முயற்சியும் அவர் வீடு பெறுவது கானல்நீர் குடிப்பதும் ஆகும்; (கானல் - பேய்த்தேர்).
"பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவ னடிசேரா தார்".(குறள். 10)
என்று திருவள்ளுவரும்,
"ஈதலற் தீவினைவிட் டீட்டல் பொருளென்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு".
என்று ஔவையாருங் கூறியிருத்தல் காண்க.
இனி, கடவுட் கொள்கை யுடையாரும் செல்வத் தொடர்பு கொண்டவராயின் துறவியராகார்.
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை.(குறள். 345)
செல்வத் தொடர்பால் ஊட்டம் மிகும். அது கூடா வொழுக்கத்திற்குத் தூண்டும். அதனால் ஒரு பற்றுந் துறக்க முடியாது. ஆசையும் அறாது மிகும். கூடா வொழுக்க மின்றேனும், செல்வத் தொடர்பினர் மணமிலியர் (Celibates) அல்லது மணத் துறவியரே யன்றி முழுத் துறவியராகார். ஆதலால் அடியார் அல்லது நாயனார் என்றே அழைக்கப்படற்குரியர். இனி மணவெறுப்பாளரும் (Misogamists) பெண்வெறுப்பாளரும் (Misogynists) உளர்.
முற்றத் துறந்தவரே துறவியர் என்றும் முனிவர் என்றும் அடிகள் என்றும் சொல்லப்படத் தக்கவர்.
செல்வத் தொடர்பிருந்தும் சிறிதும் பற்றின்றிச் செல்வத்தைத் திருத்தொண்டிற்கும் பொதுநலத்திற்கும் பயன்படுத்தி, தவத்திருக் குன்றக்குடியடிகள் போல் இடையறாது எழுத்தாலும் சொல்லாலும் மக்கட்கு அறிவுறுத்தி வரும் துறவியர் ஒரு சிலரே.
துவராடை யணிந்து இரந்து பிழைப்பவர் ஆண்டியரேயன்றித் துறவியராகார்.
வீடுபேறு, தீவினை யொன்றுமின்றி நல்வினையே செய்யும் இல்லறத்தாலும், கண்ணப்ப நாயனார் கண்ணப்பியது போன்ற சிறப்புப் பத்தி வினையாலும், துறவறத்தினாலும், கிட்டுவதாம். அவற்றுள் இறுதியது இனி இங்குக் கூறப்பெறும்.
அருளுடைமை
அஃதாவது, தொடர்பு கருதாது அறுவகைப்பட்ட எல்லா வுயிர்களிடத்தும் ஒப்பக் கொள்ளும் இரக்கம். இல்லறத்திற்கு அன்புடைமைபோல் துறவறத்திற்கு அருளுடைமை அடிப்படை யறமாம். அதனால் இது முதற்கண் கூறப்பட்டது. இதனால், அன்புபோன்றே அடைக்குந் தாழின்றிச் செயலாக வௌதப்படும் அருளறம் வீடுபேற்றிற்கு இன்றியமையாத தென்பதும், அறிவு மட்டும் போதா தென்பதும், பெறப்படும்.
அருட் செல்வம், செல்வத்துள் செல்வம்; பொருட் செல்வம்
பூரியார்கண்ணும் உள.
குறள் எண் 242
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க! பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை.
குறள் எண் 243
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை-இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
குறள் எண் 244
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
மன் உயிர் ஓம்பி, அருள் ஆள்வாற்கு இல் என்ப-
தன் உயிர் அஞ்சும் வினை'.
குறள் எண் 245
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
அல்லல், அருள் ஆள்வார்க்கு இல்லை; வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி.
குறள் எண் 246
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர்-'அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவர்'.
குறள் எண் 247
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை-பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகியாங்கு.
குறள் எண் 248
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால்; அருள் அற்றார்
அற்றார்; மற்று ஆதல் அரிது.
குறள் எண் 249
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்-தேரின்,
அருளாதான் செய்யும் அறம்.
குறள் எண் 250
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 25. அருளுடைமை
வலியார் முன் தன்னை நினைக்க-தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
குறள் எண் 251
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
அஃதாவது, அருளுடைமைக்கு மாறானதும் முரட்டுக் குணத்தை உண்டாக்குவதுமான ஊனுணவைத் தவிர்த்தல். ஊனுணவு உயிர்க்கொலையால் வருவதாலும் கொலைவினை துறவறத்திற்கு மாறான தாதலாலும் கொலையைத் தவிர்க்கக் கூடிய குணம் அருளுடைமையேயாதலாலும், இது அதன்பின் வைக்கப்பட்டது.
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
குறள் எண் 252
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள் ஆட்சி
ஆங்கு இல்லை, ஊன் தின்பவர்க்கு.
குறள் எண் 253
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.
குறள் எண் 254
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
அருள், அல்லது, யாது? எனின்,-கொல்லாமை, கோறல்:
பொருள் அல்லது, அவ் ஊன் தினல்.
குறள் எண் 255
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை; ஊன் உண்ண,
அண்ணாத்தல் செய்யாது, அளறு.
குறள் எண் 256
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்.
குறள் எண் 257
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
உண்ணாமை வேண்டும், புலாஅல்-பிறிது ஒன்றன்
புண்; அது உணர்வார்ப் பெறின்.
குறள் எண் 258
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
செயிரின் தலைப் பிரிந்த காட்சியார் உண்ணார்,
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குறள் எண் 259
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
குறள் எண் 260
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 26. புலான் மறுத்தல்
கொல்லான், புலாலை மறுத்தானைக் கைகூப்பி,
எல்லா உயிரும் தொழும்.
குறள் எண் 261
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
அஃதாவது , உடம்பு கொழுத்தால் மனம் ஐம்புல வின்பத்தையே நாடுமாதலாலும் , மத யானை போல் அடங்கா தாதலாலும் , அதையடக்கி இறைவன்மேற் செலுத்துவதற்குத் தோதாக உண்ணா நோன்பாலும் தட்ப வெப்பம் பொறுத்தல் முதலிய கடும் பயிற்சிகளாலும் உடம்பை வாட்டுதல். உடம்பை யொடுக்கி யடக்குவதில் புலான்மறுத்தல் மென்மையானதாகவும் தவம் வன்மையானதாகவு மிருத்தலால் , இஃது அதன் பின் வைக்கப்பட்டது.
தவம் என்ற சொற்கே எரித்தல் என்றுதான் பொருள். துலங்குதல்=விளங்குதல். துலங்கு - துளங்கு=திகழ். துள -தள. தளதளத்தல்=திகழ்தல். தள -தழல்-தணல். தழ-தக. தகதக வெனல்=ஔத வீசுதல். தக -தகம் - தங்கம் -விளங்கும் பொன். தக - திக -திகழ் -திங்கள் =இரவில் ஔத தரும் சுடர். தகம்=எரிவு சூடு. தகம் -தவம்==உடலை எரித்தல் போல் வருத்துந் துறவறப் பயிற்சி. க-வ, போலி: குழை-குகை. குவை-தக-தஹ் (வ.) தவம் -தபஸ்(வ.) தக -தகை=தாகம். தகம் -தாகம் = உடற்சூட்டால் உண்டாகும் நீர் வேட்கை. தக-தவ-தவி. தவித்தல்=நீர் வேட்கையுண்டாதல். தாகம் - தாஹ (வ.) தவி - தப் (வ.). தவம் -தவன் -தவத்தோன். இதற்கு ஒத்த வடிவம் சமற்கிருதத்தில் இல்லை. தபஸ்வின் என்ற வடிவந்தான் உண்டு.
தவம் இல்லறத்தார்க் குரியதும் துறவறத்தார்க் குரியதும் எனி இரு வகைப்படும். அவற்றுள் முன்னது எண்வகை யுறுப்புகளைக் கொண்டு தவம் அல்லது நோன்பு என்று பெயர் பெறுவது;பின்னது ஒகத்தின் (யோகத்தின்) எண்வகை யுறுப்புக்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுவது.
இல்லறத்தார் பிள்ளைப்பேறும் உடல்நலமுங் கருதி உண்டி சுருக்கி நாடு நகரங்களிலுள்ள கோவில்களில் வழிபடுவது நோன்பு என்றும், காட்டில் தங்கிக் கடுமையாக வாழ்ந்து சிறிது காலம் வழிபடுவது தவம் என்றும், சொல்லப்படும்.
கணவனும் மனைவியும் காட்டிலுள்ள முனிவரை யடுத்துத் தொண்டு செய்தபின், அவர் தந்த கனியை யுண்டு மனைவி கருவுற்றுப் பிள்ளை பெற்றதாகச் சொல்லப்படுவதெல்லாம் , கூடா வொழுக்கத்தினரான ஆரியர் செய்த சூழ்ச்சிகளே என அறிக.
மறுமையில் விண்ணுலக வின்பம் நுகரும் பொருட்டு இம்மையிற் காட்டில் வாழ்ந்து செய்யும் எண்வகை யுறுப்புத் தவம்,
நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
சோர்சடை தாழச் சுடரோம்பி-யூரடையார்
கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
வானகத் துய்க்கும் வழி.
என்னும் புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுளால் (வாகை.14) அறியப்படும். இதையே நாலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் என்று தொல்காப்பியங் கூறும் (புறத் 20) இது பிறவிக்குட்படுவதால் துறவற மாகாது.
கணைவனை யிழந்த கற்புடை மனைவியர் நோற்கும் கைம்மை நோன்பு இல்லறத்தின் பாற்படுவதே. இறைவனல்லாச் சிறு தெய்வங்களை நோக்கிச் செய்யும் தவம் பயனில் முயற்சியம். அத் தெய்வங்களை நோக்கித் தவஞ் செய்து பலர் பேறுகளைப் பெற்றதாகக் கதைகளெல்லாங் கட்டுக்கதைகளே. இனி , ஊழினாலும் உழைப்பினாலுமே பெறக்கூடிய கல்வி அரசப் பதவி முதலிய பேறுகளையும் , பகைவரைக் கொல்லும் வலிமை, தெய்வத்தையுங் கொல்லுந்திறம் முதலிய ஈவுகளையும் , தவஞ் செய்து பெற்றதாகக் கூறுங் கதைகளும் நம்பத்தக்கன வல்ல.
துவறத்திற்குரிய தவம், படிப்படியாக வுண்டி சூருக்கிப் பின்பு காய்கனி கிழங்குகளையே வுண்டு இறுதியல் அவையுமின்றி உதிர்ந்த இலைகளையே உட்கொள்வதும், கடுங் கோடையில் நண்பகல் வெயிலிலும் கூதற் காலத்திலும் பனிக் காலத்திலும் குளிந்த நீர் நிலையிலும் நிற்றலும் , முதலில் மரவுரி அல்லது நீர்ச்சீலை யுடுத்து இறுதியில் அதுவுமின்றியிருப்பதும், உள்ளத் தூய்மையைப் பேணுவதும், ஓரறிவுயிர்க்குந்துன்பஞ் செய்யாமையும் , பிறவுமாம். இதனொடு சேர்ந்த ஏனையே ழுறுப்புக்களும் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்திற் கூறப்படும்.
நாற்றிசையும் மூட்டிய விறகுத் தீயும் தலைக்கு மேற்பட்ட வெயில் தீயுமாகிய ஐந்தீ நாப்பண் நிற்றல் , ஆரிய வழக்கமாகத் தோன்றுகின்றது.
உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை,
அற்றே-தவத்திற்கு உரு.
குறள் எண் 262
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம், அதனை
அஃது இலார் மேற்கொள்வது.
குறள் எண் 263
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்-
மற்றையவர்கள், தவம்.
குறள் எண் 264
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்,
எண்ணின், தவத்தான் வரும்.
குறள் எண் 265
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான், செய் தவம்
ஈண்டு முயலப்படும்.
குறள் எண் 266
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
தவம் செய்வார் தம் கருமம் செய்வார்; மற்று அல்லார்
அவம் செய்வார், ஆசையுள் பட்டு.
குறள் எண் 267
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
சுடச் சுடரும் பொன்போல் ஔதவிடும்-துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு.
குறள் எண் 268
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும்.
குறள் எண் 269
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
கூற்றம் குதித்தலும் கைகூடும்-நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.
குறள் எண் 270
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 27. தவம்
இலர் பலர் ஆகிய காரணம்-நோற்பார்
சிலர்; பலர் நோலாதவர்.
குறள் எண் 271
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
அஃதாவது, துறவறத்தொடும் தவக் கோலத்தொடும் பொருந்தாத தீய வொழுக்கும். அது பெண்ணின்பத்தை மறைவாக நுகர்தலும் அதற்குத்தக ஊட்டம் மிக்க உணவுண்ணுதலுமாம். உள்ளத்தில் உரனில்லாது சுடலையுணர்ச்சியினாலும் சொற்பொழிவுணர்ச்சியினாலும் திடுமென்று தூண்டப்பட்டுத் துறவுக் கோலம் பூண்டோ ர், பின்பு அதைக் கடைப்பிடிக்கும் ஆற்றலின்மையால் தாம் சிறிது போழ்துவிட்ட சிற்றின்பத்தை மீண்டும் (மறைவாக) நுகர்வர். இது தவத்தொடு பொருந்தாமையின் தவத்தின்பின் வைக்கப்பட்டது.
ஊட்டம் மிக்க உணவும் உடலைக் கொழுக்க வைத்துக் கூடாவொழுக்கத்திற்குத் தூண்டுமாதலின், அதுவுந்துறவறத்திற் கடியத்தக்கதே.
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
குறள் எண் 272
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
வான் உயர் தோற்றம் எவன் செய்யும்-தன் நெஞ்சம்
தான் அறி குற்றபடின்.
குறள் எண் 273
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று.
குறள் எண் 274
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
தவம் மறைந்து, அல்லவை செய்தல்-புதல்மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்தற்று.
குறள் எண் 275
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம். எற்று! எற்று! என்று
ஏதம் பலவும் தரும்.
குறள் எண் 276
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
நெஞ்சின் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து,
வாழ்வாரின் வன்கணார் இல்.
குறள் எண் 277
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
புறம் குன்றி கண்டனையரேனும், அகம் குன்றி
மூக்கில் கரியார் உடைத்து.
குறள் எண் 278
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
மனத்தது மாசு ஆக, மாண்டார் நீர் ஆடி,
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்.
குறள் எண் 279
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
கணை கொடிது; யாழ் கோடு செவ்விது; ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
குறள் எண் 280
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 28. கூடாவொழுக்கம்
மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம்
பழித்தது ஒழித்துவிடின்.
குறள் எண் 281
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
அஃதாவது , பிறர் பொருளை மறைவாகக் கவராமை. இது கவர்தலும் மறைவிற் செய்தலுமாகிய இருமடிக் குற்றம். ஒரு தீவினையை ஆசையொடு கருதுதலும் அதைச் செய்தலோ டொக்கு மாதலின், கள்ளாமை என்பது களவு செய்யாமையும் களவு செய்யக் கருதாமையும் என இருதிறப்படும். களவு செய்யாமை இல்லறத்திலும் கடியப்படுவதே. ஆயின் , துறவறம் தூய்மை நிலையில் இல்லறத்தினும் உயர்ந்ததாதலின் , களவு செய்யக் கருதுதலும் அதிற் குற்றமாம். இவ்விரு திறத்தையும் ஒரே யிடத்திற் கூறுவதே தக்கதாகலின் , இரண்டையுங் கூறுதற்கேற்ற துறவறவியலிற் கூறினார் . ஆயினும் , களவு செய்யாமை ஈரறத்திற்கும் பொதுவாம்.
களவு செய்தலும் கூடா வொழுக்கத்தைச் சேர்ந்ததினாலும் , காமம் பற்றிய கூடா வொழுக்கமும் களவாய் நிகழ்தலானும் , இவ்வகை யொற்றுமை பற்றி உயர்திணைப் பொருள் பற்றிய களவை விலக்கும் கூடா வொழுக்கத்தின் பின் அஃறிணைப் பொருள் பற்றிய களவு விலக்கும் வைக்கப்பட்டது.
கள் என்னும் முதனிலை முதற்காலத்திற் களவு செய்தலைக் குறித்ததே. கள்ளம் , கள்ளத்தனம் , கள்ளன் , கள்வு , களவு என்னும் சொற்களை நோக்குக. பிற்காலத்திற் கள் என்னும் முதனிலை தன் பொருளை யிழந்தபின், தொழிற் பெயரொடு துணைவினை சேர்ந்த களவுசெய் என்னும் கூட்டுச்சொல் முதனிலை தோன்றிற்று. "கட்குவான் பரிக்கில் ஞேலுவான் பரிக்கேணம்" . என்னும் மலையாளப் பழமொழியையும் நோக்குக.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க, தன் நெஞ்சு.
குறள் எண் 282
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம்ஒ எனல்.
குறள் எண் 283
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
களவினால் ஆகிய ஆக்கம், அளவு இறந்து,
ஆவது போல, கெடும்.
குறள் எண் 284
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
குறள் எண் 285
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
அருள் கருதி அன்புடையர் ஆதல் பொருள் கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
குறள் எண் 286
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார்-களவின்கண்
கன்றிய காதலவர்.
குறள் எண் 287
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
குறள் எண் 288
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல, நிற்கும்,
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு.
குறள் எண் 289
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
அளவு அல்ல செய்து, ஆங்கே வீவர்-களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்.
குறள் எண் 290
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 29. கள்ளாமை
கள்வார்க்குத் தள்ளும், உயிர்நிலை; கள்ளார்க்குத்
தள்ளாது, புத்தேள் உலகு.
குறள் எண் 291
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
அஃதாவது, பொய்மைக்கு மறுதலையான மெய்ம்மை. கூடாஒழுக்கத்திலும் களவிலும் பொய்ம்மை கலந்திருத்தலாலும், பொய்ம்மை நீக்கப்பெறின் அவ்விரண்டும் நிகழா வாதலாலும், இது கூடாவொழுக்கங் கள்ளாமைகளின்பின் வைக்கப்பட்டது.
வாய்மை எனப்படுவது யாது? எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல்.
குறள் எண் 292
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
பொய்ம்மையும் வாய்மை இடத்த-புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
குறள் எண் 293
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்,
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
குறள் எண் 294
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
குறள் எண் 295
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு
தானம் செய்வாரின் தலை.
குறள் எண் 296
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை,
எல்லா அறமும் தரும்.
குறள் எண் 297
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று.
குறள் எண் 298
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
புறம் தூய்மை நீரால் அமையும்;- அகம் தூய்மை
வாய்மையால் காணப்படும்.
குறள் எண் 299
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
குறள் எண் 300
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 30. வாய்மை
யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை-எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.
குறள் எண் 301
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
அஃதாவது, ஒருவன்மேற் சினங்கொள்வதற்குக் கரணகம் (காரணம்) இருப்பினும் அதைக்கொள்ளாமை. "உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்", என்னும் பழமொழிப்படி, வெகுளி பொய்ம்மை பற்றியும் நிகழ்வதால் , வெகுளாமை வாய்மையின் பின் வைக்கப்பட்டது.
செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்து,
காக்கின் என்? காவாக்கால் என்.
குறள் எண் 302
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும்,
இல், அதனின் தீய பிற.
குறள் எண் 303
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
மறத்தல், வெகுளியை யார்மாட்டும்-தீய
பிறத்தல் அதனான் வரும்.
குறள் எண் 304
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ, பிற.
குறள் எண் 305
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
தன்னைத் தான் காக்கின், சினம் காக்க! காவாக்கால்,
தன்னையே கொல்லும், சினம்.
குறள் எண் 306
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
குறள் எண் 307
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று.
குறள் எண் 308
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும்,
புணரின் வெகுளாமை நன்று.
குறள் எண் 309
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
குறள் எண் 310
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 31. வெகுளாமை
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
குறள் எண் 311
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
அஃதாவது பகைபற்றியாவது ஒரு பயனோக்கியாவது விளையாட்டாகவாவது கவனமின்மையாலாவது ஓருயிர்க்கும் ஒருதீங்கும் செய்யாமை. சினமில்லாத போதும் இன்னாசெய்தல் நிகழுமாயினும், பகைபற்றி நிகழ்வதே பெரும்பான்மை யாதலாலும், பகை வெகுளியின் நீட்சியாதலாலும், அதை விலக்குதற்கு இது வெகுளாமையின் பின் வைக்கப்பட்டது.
இன்னுதல் இனித்தல் அல்லது இன்பமாதல், இன்- இன்பு- இன்பம். இன்- இனி. இன்னா இனிய என்பதன் எதிர்மறையான பலவின்பால் வினையாலனையும் பெயர்.
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும், பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்.
குறள் எண் 312
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும், மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள்.
குறள் எண் 313
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்,
உய்யா விழுமம் தரும்.
குறள் எண் 314
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நல் நயம் செய்து, விடல்.
குறள் எண் 315
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
அறிவினான் ஆகுவது உண்டோ -பிறிதின் நோய்
தம் நோய்போல் போற்றாக்கடை.
குறள் எண் 316
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
இன்னா எனத் தான் உணர்ந்தவை, துன்னாமை
வேண்டும், பிறன்கண் செயல்.
குறள் எண் 317
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை.
குறள் எண் 318
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ,
மன் உயிர்க்கு இன்னா செயல்.
குறள் எண் 319
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.
குறள் எண் 320
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 32. இன்னா செய்யாமை
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்; நோய் செய்யார்,
நோய் இன்மை வேண்டுபவர்.
குறள் எண் 321
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
அஃதாவது இல்லறத்தில் அரசன் கொலைத்தண்டனையும் போர்த்தொழிலுந்தவிர மற்ற வகைகளில் ஈரறிவுயிர் முரல் ஆறறிவுயிர் வரை எவ்வுரையுங் கொல்லாமையும், துறவறத்தில், சிறப்பாக இறுதிநிலையில், ஓரறிவுயிரையுங் கொல்லாமையும் ஆம்.
இன்னாதவற்றுள் மிகக்கொடியது கொலையாதலாலும் ஓரறிவுயிர்க்கொலை துறவறத்தின் இறுதி நிலையிலேயே ஒழிக்கக் கூடிய தாதலாலும், இது இன்னா செய்யாமையின் பின் வைக்கப்பட்டது.
மரக்கறியுணவும் ஓரறிவுயிர்க்கொலையால் வருவதாலும், முளைக்கவுந் துளிர்க்கவும் கூடிய ஒவ்வொரு விதையும் நிலைத்திணையுறுப்பும் முட்டை போன்றிருத்தலாலும், பிறர் சமைத்த மரக்கறி யுணவுண்பதும், பிறர் கொன்ற வுரியின் ஊனைத்தின்பது போலா மாதலாலும், துறவியர் விரும்புவது வீட்டுலக வாழ்க்கையேயன்றி இவ்வுலக வாழ்க்கையன்றதலாலும், முற்றத் துறந்த முழு முனிவர்.
"கனியேனும் வறிய செங்கா யேனு முதிர்சருகு கந்தமூலங்களேனும்
கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்து" ப்
பின்பு இலை சருகுகளையேயுண்டு, இறுதியில் அதுவுமின்றி ஓகத்திலமர்ந்து உடம்பு துறப்பர் என அறிக.
அறவினை யாது? எனின், கொல்லாமை; கோறல்
பிற வினை எல்லாம் தரும்.
குறள் எண் 322
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
குறள் எண் 323
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
குறள் எண் 324
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
நல்லாறு எனப்படுவது யாது? எனின், யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
குறள் எண் 325
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான், தலை.
குறள் எண் 326
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது, உயிர் உண்ணும் கூற்று.
குறள் எண் 327
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
தன் உயிர் நீப்பினும் செய்யற்க-தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை.
குறள் எண் 328
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக்
கொன்று ஆகும் ஆக்கம் கடை.
குறள் எண் 329
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்,
புன்மை தெரிவார் அகத்து.
குறள் எண் 330
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 33. கொல்லாமை
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப-'செயிர் உடம்பின்
செல்லாத் தீ வாழ்க்கையவர்'.
குறள் எண் 331
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
அஃதாவது , நிலவுலகத்தில் தோன்றும் அறுவகை யுயிர்களும் பிறிதோருயிராற் கொல்லப்படா விடத்தும், எப்பருவத்தும் பிணியாலும், பிணியில்லாது வாழ்நாள் நீடினும் தத்தம் இனத்திற்குரிய கால வெல்லையில் மூப்பாலும், ஒருவகையானும் தடுக்கப்பெறாது தம் முடம்பி னின்று நீங்கி நிலையாமற் போதல்.
இந்நிலையாமை நொடிப்பொழுதில் ஆயிரக்கணக்கான மறவர் போர்க்களத்திற் கொலையுண்பதால் விளங்கித் தோன்றுவதாலும், கொல்லாமையில் லாவிடத்தும் தப்பாது நிகழும் என்பதை யுணர்த்தற்கும் , கொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.
துன்பமிக்க உலக வாழ்வும் நிலையாது நீங்குவதாலும் , அந்நீக்கமும் நிலையாது மீண்டு மீண்டும் எல்லையில்லாது பிறவி தோன்றும் என்னும் அறிவினாலும், அப்பிறவிகளுள் கீழ்ப்பிறவியொடு எரியுல கத்துன்பமும் இடையிடும் என்னும் அச்சத்தாலும், உலகவாழ்க்கையில் வெறுப்புற்று இறைவன் திருவடியடைந்து துன்பமற்றதும் என்று முள்ளதுமான பேரின்பத்தைப்பெறும் முயற்சியை விரைந்து செய்யத் தூண்டுவது, நிலையாமையுணர்ச்சியே.
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை.
குறள் எண் 332
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ் செல்வம்;
போக்கும், அது விளிந்தற்று.
குறள் எண் 333
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால்,
அற்குப ஆங்கே செயல்.
குறள் எண் 334
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாளது-உணர்வார்ப் பெறின்.
குறள் எண் 335
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
நாச் செற்று, விக்குள் மேல்வாராமுன், நல் வினை
மேற்சென்று செய்யப்படும்.
குறள் எண் 336
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
நெருநல் உளன், ஒருவன்; இன்று இல்லை! என்னும்
பெருமை உடைத்து, இவ் உலகு.
குறள் எண் 337
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
ஒரு பொழுதும் வாழ்வது அறியார், கருதுப-
கோடியும் அல்ல, பல.
குறள் எண் 338
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே-
உடம்பொடு உயிரிடை நட்பு.
குறள் எண் 339
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
உறங்குவது போலும், சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும், பிறப்பு.
குறள் எண் 340
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 34. நிலையாமை
புக்கில் அமைந்தின்றுகொல்லோ-உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
குறள் எண் 341
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
அஃதாவது, இளமை, செல்வம், உடம் நலம், யாக்கை முதலியவற்றின் நிலையாமையும், எல்லையில்லாது தொடரும் பிறவித்துன்பமும் நோக்கி, துன்பமற்ற நிலையான வீடுபெறும் பொருட்டு, புறமாகிய செல்வம் என்னும் பிறிதின் கிழமைப் பொருளின் கண்ணும் அகமாகிய உடம்பு என்னும் தற்திழமைப் பொருளின் கண்ணும் உள்ள பற்றை விடுதல். அதிகார முறையும் இதனான் விளங்கும்.
யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்
அதனின் அதனின் இலன்.
குறள் எண் 342
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின்,
ஈண்டு இயற்பால பல.
குறள் எண் 343
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
அடல் வேண்டும், ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும்,
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
குறள் எண் 344
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
இயல்பு ஆகும், நோன்பிற்கு ஒன்று இன்மை; உடைமை
மயல் ஆகும், மற்றும் பெயர்த்து.
குறள் எண் 345
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
குறள் எண் 346
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
யான், எனதுஒ, என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
குறள் எண் 347
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
பற்றி விடாஅ, இடும்பைகள்-பற்றினைப்
பற்றி, விடாஅதவர்க்கு.
குறள் எண் 348
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
தலைப்பட்டார், தீரத் துறந்தார்; மயங்கி
வலைப்பட்டார், மற்றையவர்.
குறள் எண் 349
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும்; மற்றும்
நிலையாமை காணப்படும்.
குறள் எண் 350
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 35. துறவு
பற்றுக, பற்று அற்றான் பற்றினை! அப் பற்றைப்
பற்றுக, பற்று விடற்கு.
குறள் எண் 351
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
அஃதாவது, கடவுள், உயிர், தளை ஆகிய மூன்றன் இயல்புகளையும், உயிருக்குக் கடவுளொடும் உலகத்தொடுமுள்ள தொடர்பு வகைகளையும், ஐம்பூதக் கூறுபாடுகளையும், உடலின் அமைப்பையும், பிறப்பும் வீடும் ஆகிய நிலைமைகளையும், இறைவன் திருவருளாலும் ஓகத்தாலும் உண்மையாக உள்ளபடி யுணர்தல், இது, சமயக் கொண்முடிபு ( சித்தாந்தம் ) கண்டவர் தாமாகவுணர்தலும், பிறர் அவர் உணர்ந்ததை யுணர்தலும், என இரு திறப்படும்.
ஆராய்ந்து கண்ட ஒவ்வோர் உண்மைப் பொருளும் மெய்ப்பொருள் ( தத்துவம்) எனப்படும். இறைவனுண்மையை நம்பாத சாங்கியமதம், ஆத மெய்ப்பொருள் ( ஆன்ம தத்துவம்) இருபத்து நாலொடு ஆதனை ( புருடனை)ச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தைந்தெனக் கூறும். திருமாலியம் ( வைணவம் ) அவற்றொடு பரவாசுதேவன் என்னும் இறைவனைச் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் இருபத்தாறெனக் கூறும், ஆரியச் சார்பான இற்றைச் சிவனியம், ஆதமெய்ப் பொருளொடு சிவமெய்ப் பொருளென்று ஐந்தும், அறிவுமெய்ப்பொருள் ( வித்தியா தத்துவம் ) என்று ஏழும் சேர்த்து, மெய்ப்பொருள் மொத்தம் முப்பத்தாறெனக் கொள்ளும். உலகிலுள்ள நம்பு (ஆத்திக ) மதங்களெல்லாவற்றிற்கும் பொதுவான மெய்ப்பொருள்கள் , பூத மெய்ப்பொருள்கள் இருபதுடன் உயிர் மனம் மதி இறைவன் என்னும் நான்குஞ் சேர்ந்த இருபத்து நான்காகவே முடியும். சமணம், பவுத்தம் முதலிய நம்பா ( நாத்திக ) மதங்களைப் பற்றி இங்கு ஆராய்ச்சியில்லை.
திருவள்ளுவர் ஆரியர் வகுத்த முத்திருமேனி ( திரிமூர்த்தி )க்கொள்கையைக் கொண்டவரல்லர். அவர் காலத்தில் அது தோன்றியிருக்கலாம். பிற்காலத்திலேயே அது வேரூன்றியதாக,
"தொடங்கற்கட் டோ ன்றிய முதியவன் முதலாக"<div align=right>(கலி. 2)</div>
"உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்"<div align=right>(6)</div>
முதலிய கடைக்கழக இலக்கியச் சான்றுகளால் தெரியவருகின்றது. இறைவன் முத்தொழிலையும் முறையே பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் மூவரைக் கொண்டு செய்விக்காமல், தானே செய்கின்றான் என்பதே திருவள்ளுவர் கொள்கை. இனி, இறைவனை அவர் ஐங்கூறாகப் பகுத்திருக்கவும் முடியாது. இதன் விரிவையும் விளக்கத்தையம் என் 'தமிழர் மதம்' என்னும் நூலுட் கண்டு கொள்க. சிவன் என்பதும் திருமால் ( மாயோன் ) என்பதும் இருசார்த் தமிழர் இறைவனுக்கு இட்ட பெயர்களே.
ஓகத்தின் ( யோகத்தின் ) எண்ணுறுப்புக்களாவன : -
(1) தன்னடக்கம் ( இயமம் ) -பொய், கொலை, களவு, காமம், பொருளாசை ஆகிய ஐந்தையுங் கடிதல்.
(2) தவம் ( நியமம்) - உடலை வருத்துதல், உள்ளத் தூய்மை, மெய்ப் பொருளாராய்ச்சி, பொந்திகை ( திருப்தி), கடவுள் வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ளல்.
(3) இருக்கை (ஆசனம் ) - மங்கலம் ( சுவஸ்திக ), கோமுகம் ( கோமுக), தாமரை ( பத்ம ), மறம், ( வீர ) , மடங்கல் ( கேசரி), வீறு (பத்திர) , முத்தம் (முக்த), மயில் (மயூர) ஏமம் (சுக) முதலிய 108 இருக்கை வகைகள்.
(4) வளிநிலை (பிராணாயாமம்) - இழுக்கை ( பூரகம்) , விடுகை ( இரேசகம்), நிறுத்தம் ( கும்பகம்) என்னும் மூவகையால் மூச்சையடக்கி யாள்கை.
(5) ஒருக்கம் (பிரத்தியாகாரம்) - மனத்தைப் புலன்கள் மேற் செல்லாவாறு மடக்குதல்.
(6) நிறை (தாரணை) - மனத்தை ஒருவழி நிறுத்துகை.
(7) ஊழ்கம் (தியானம்) - மனத்தை இறைவன் மேற் செலுத்துகை.
(8) ஒன்றுகை (சமாதி) - மனம் இறைவனொடு ஒன்றாகப் பொருந்துகை.
ஒருக்கம், நிறை, ஊழ்கம் என்னும் மூன்றும் முறையே தொகைநிலை, பொறைநிலை, நினைவு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும்.
இருவகைப் பற்றையுந் துறந்தபின் இறைவன் பற்றையே இறுகப்பற்றல் வேண்டுமாதலின், இம்மெய்யுணர்தல் துறவின் பின் வைக்கப்பட்டது. இது பற்றியே, துறவதிகாரத்தின் இறுதியிலும் 'பற்றற்றான் பற்றினைப் பற்றுக' என்று இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம், மாணாப் பிறப்பு.
குறள் எண் 352
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
இருள் நீங்கி இன்பம் பயக்கும்-மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு.
குறள் எண் 353
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
ஐயத்தின் நீங்கித் தௌதந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
குறள் எண் 354
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே-
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.
குறள் எண் 355
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
எப் பொருள் எத் தன்மைத்துஆயினும், அப் பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள் எண் 356
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்,
மற்று ஈண்டு வாரா நெறி.
குறள் எண் 357
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையா,
பேர்த்து உள்ளவேண்டா பிறப்பு.
குறள் எண் 358
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
குறள் எண் 359
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச்
சார்தரா, சார்தரும் நோய்.
குறள் எண் 360
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 36. மெய்யுணர்தல்
காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றன்
நாமம் கெட, கெடும் நோய்.
குறள் எண் 361
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
அஃதாவது, "மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை".
என்றதற்கேற்ப, காமவெகுளி மயக்கங்களைக் கெடுத்தார்க்கும் பூதவுடம்புநிற்கும் வரை முன் துறக்கப்பட்ட புலன்கள்மேற் பயிற்சிவயத்தால் ஒரோவழி நினைவு செல்லுதற்கு இடமிருத்தலால் , அங்ஙனம் நேராவாறு பூதவுடம்பு நீங்கும் வரை என்றும் விழிப்பாயிருத்தற் பொருட்டு , எல்லா ஆசைகட்கும் பொது அடிப்படையாகிய அவாவை இடைவிடாது செம்பொருளுணர்வால் விலக்குதல். இது காமவெகுளி மயக்கக்கேட்டின் தொடர்ச்சியாம்.
அவா என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'.
குறள் எண் 362
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
வேண்டுங்கால், வேண்டும் பிறவாமை; மற்று அது
வேண்டாமை வேண்ட, வரும்.
குறள் எண் 363
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை;
யாண்டும் அஃது ஒப்பது இல்.
குறள் எண் 364
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
தூஉய்மை என்பது அவா இன்மை; மற்று அது
வா அய்மை வேண்ட, வரும்.
குறள் எண் 365
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
அற்றவர் என்பார் அவா அற்றார்; மற்றையார்
அற்று ஆக அற்றது இலர்.
குறள் எண் 366
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
குறள் எண் 367
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
அவாவினை ஆற்ற அறுப்பின், தவா வினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.
குறள் எண் 368
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல்,
தவாஅது மேன்மேல் வரும்.
குறள் எண் 369
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
இன்பம் இடையறாது, ஈண்டும்-அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
குறள் எண் 370
அறத்துப் பால்
துறவறவியல்
அதிகாரம் 37. அவாவறுத்தல்
ஆரா இயற்கை அவா நீப்பின், அந் நிலையே
பேரா இயற்கை தரும்.
குறள் எண் 371
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
அஃதாவது, பழம்பிறப்புக்களிற் செய்யப்பட்ட இருவினைப்பயன் செய்தவனையே செய்த முறைப்படி சென்றடையும் இயற்கை யொழுங்கு. இது முறைப்படி வருவதால் முறையென்றும் ஊழ் என்றும், அவரவர்க்குரிய இன்ப துன்பப்பகுதிகளை வகுப்பதால் பால் என்றும் வகுத்தான் என்றும், தெய்வ ஏற்பாடு போலிருப்பதால் தெய்வம் என்றும் பால்வரை தெய்வம் என்றும், பெயர் பெறும். இனி மாறாவியல்பாயிருப்பதால் இயற்கையென்றும் பெயர் பெறுவதாம்.
இதுஅறம் பொருளின்பம் மூன்றற்கும் பொதுவேனும், இருவினைப் பயனாயிருப்பதாலும், இனிமேலேனும் நல்லூழைத் தோற்றுவித்தற்கு இன்று முதல் நல்வினையே செய்க என்று ஏவும் வகையிலும், அறத்துப்பாலொடு சேர்க்கப்பட்டு, அதே சமையத்தில் பொருளோடிதற்குள்ள நெருங்கிய தொடர்பை யுணர்த்தற்குப் பொருட்பாலின் முன்பும் துறவற வியலின் இறுதியிலும் வைக்கப் பெற்றதென அறிக.
ஆகு ஊழால் தோன்றும், அசைவு இன்மை; கைப்பொருள்
போகு ஊழால் தோன்றும், மடி.
குறள் எண் 372
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
பேதைப் படுக்கும், இழவு ஊழ்; அறிவு அகற்றும்,
ஆகல் ஊழ் உற்றக்கடை.
குறள் எண் 373
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்.
குறள் எண் 374
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
இரு வேறு, உலகத்து இயற்கை; திரு வேறு;
தௌளியர் ஆதலும் வேறு.
குறள் எண் 375
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
நல்லவை எல்லாஅம் தீய ஆம்; தீயவும்
நல்ல ஆம்;-செல்வம் செயற்கு.
குறள் எண் 376
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச்
சொரியினும் போகா, தம.
குறள் எண் 377
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
குறள் எண் 378
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
துறப்பார்மன், துப்புரவு இல்லார்-உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
குறள் எண் 379
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம் கால்
அல்லற்படுவது எவன்.
குறள் எண் 380
அறத்துப் பால்
ஊழியல்
அதிகாரம் 38. ஊழ்
ஊழின் பெருவலி யா உள-மற்று ஒன்று
சூழினும், தான் முந்துறும்.
குறள் எண் 381
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
இன்பமுள்ளிட்ட இல்லற வாழ்க்கைக்கும் உலகநடப்பிற்கும் இன்றியமையாததும் அறவழியில் ஈட்டப்பட வேண்டியதுமான, பொருளைப் பற்றிக் கூறும் பெரும் பகுதி பொருட்பாலாகும். அறம் பொருளின்பம் என்னும் முறைப்படியும் இது அறத்திற்கு அடுத்த தாகும்.
1.அரசியல்
பொருளீட்ட வேண்டிய மக்களெல்லாருள்ளும் அரசன் தலை சிறந்தவனாதலாலும், மக்களெல்லாரும் தத்தம் தொழில் செய்து பொருளீட்டுதற்கு அரசனது காவல் இன்றியமையாததாதலாலும் அரசாட்சி கூறவே அரசனுங் குடிகளும் பொருளீட்டுதல் அதனுள் ஒருங்கே யடங்கும்.
அரசாட்சி அரசியல், உறுப்பியல் என இருபாற்படும். அவற்றுள் அரசியலை இருபத்தைந் ததிகாரத்தாலும் எழதிறப்பட்ட உறுப்பியலை நாற்பத்தைந் ததிகாரத்தாலும் அமைத்து, முதற்கண் அரசியல் கூறுகின்றார்.
பரிமேலழகர் வகுத்த ஒழிபியல் என்பது குடியென்னும் உறுப்பா யடங்குவதை, போக்கியார் பெயரிலுள்ள
"அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துரைநா டரண்பொரு ளொவ்வொன் -றுரைசால்
படையிரண்டு நட்புப் பதினேழ்பன் மூன்று
குடியெழுபான் றொக்கபொருட் கூறு"
என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுளாலறிக.
இறைமாட்சி
அஃதாவது, அரசாளுந் தலைவனாகிய இறைவனுக்கு இருக்க வேண்டிய மாண்புடைய அறிவாற்றலும் நற்குண நற்செய்கைகளுமாம். இறுத்தல் (எங்குந்) தங்குதல். இறுப்பது இறை. இத்தொழிற் பெயர் ஆகுபெயராய்த்தன் நாடுமுழுதும் அதிகாரத்தால் தங்கியிருக்கின்ற அரசனைக் குறிக்கும். இறைவன் என்பது ஆண்பாலீறு பெற்ற பெயர். இவ்விருவடிவும் எங்கும் நிறைந்திருக்கின்ற கடவுளையுங் குறிக்கும். இப்பெயர்ப் பொதுமையால், அரசன் முதற்காலத்தில் கண்கண்ட தெய்வமாகக் கருதப்பெற்றமை அறியப்படும்.
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
குறள் எண் 382
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு.
குறள் எண் 383
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்றும்
நீங்கா-நிலன் ஆள்பவற்கு.
குறள் எண் 384
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா
மானம் உடையது-அரசு.
குறள் எண் 385
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.
குறள் எண் 386
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
காட்சிக்கு எளியன், கடுஞ் சொல்லன் அல்லனேல்,
மீக்கூறும், மன்னன் நிலம்.
குறள் எண் 387
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
இன் சொலால் ஈத்து, அளிக்க வல்லாற்குத் தன் சொலால்
தான் கண்டனைத்து, இவ் உலகு.
குறள் எண் 388
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
முறை செய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு
இறைஒ என்று வைக்கப்படும்.
குறள் எண் 389
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும், உலகு.
குறள் எண் 390
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 39. இறைமாட்சி
கொடை, அளி, செங்கோல், குடி-ஓம்பல், நான்கும்
உடையான் ஆம், வேந்தர்க்கு ஔத.
குறள் எண் 391
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
அஃதாவது, அரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல் அவை இலக்கணநூல், கணிதநூல், வனப்பியல், வரலாறு, அறநூல் அரசியல்நூல், போர்நூல் முதலியன. இவற்றுள் அரசியல் நூலும் போர்நூலுந்தவிர ஏனையவெல்லாம் எல்லார்க்கும் பொதுவாம். அரசியல் நூல் அமைச்சர்க்கும் போர்நூல் படைமறவர்க்கும் அரசர்க்குப் போன்றே சிறப்பாக வுரியனவாம்.
திருவள்ளுவர் வேத்தியலை அடிப்படையாகவைத்தே பொதுவியற்கும் பொருந்துமாறு பொருளீட்டு முறையைக் கூறுவதால், இங்குக் கல்வியென்று எல்லார்க்கும் பொதுவாம். எல்லார்க்குமுரிய பொதுக்கல்வியும் சில தொழில்கட்குரிய சிறப்புக்கல்வியும் கற்றபின்பே நாகரிக மக்கள் பொருளீட்டு தலை மேற்கொள்ள வேண்டுமென்பது கருத்து. பொருளீட்டுதலாவது தத்தம் தொழிலை செய்தல். முந்தின அதிகாரத்தில் தூங்காமை கல்வி என்னுங் குறளிலுள்ள 'கல்வி' என்னுஞ்சொல்லால், இவ்வதிகாரத்திற்குத் தோற்று வாய் செய்யப்பட்டது.
கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின்,
நிற்க, அதற்குத் தக.
குறள் எண் 392
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
எண் என்ப, ஏனை எழுத்துஒ என்ப, இவ் இரண்டும்
கண்ஒ என்ப, வாழும் உயிர்க்கு.
குறள் எண் 393
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு
புண் உடையர், கல்லாதவர்.
குறள் எண் 394
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்
அனைத்தே-புலவர் தொழில்.
குறள் எண் 395
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்;
கடையரே, கல்லாதவர்.
குறள் எண் 396
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும், அறிவு.
குறள் எண் 397
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு.
குறள் எண் 398
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 399
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு,
காமுறுவர், கற்று அறிந்தார்.
குறள் எண் 400
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40. கல்வி
கேடு இல் விழுச் செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடு அல்ல, மற்றையவை.
குறள் எண் 401
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
அஃதாவது, கல்லாதிருத்தல். இது க ல் வி யின்மையின் தீமையை எடுத்துக் கூறுவதால் கல்வியின் பின் வைக்கப்பட்டது. கல்விச்சிறப்பு உடன்பாட்டு முகத்தாற் கூறிய அளவில் முற்றுப் பெறாமையால், இங்கு எதிர்மறை முகத்தாலுங் கூறவேண்டிய தாயிற்று.
அரங்கு இன்றி வட்டு ஆடியற்றே-நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்.
குறள் எண் 402
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
கல்லாதான் சொல் காமுறுதல், முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று.
குறள் எண் 403
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
கல்லாதவரும் நனி நல்லர்-கற்றார்முன்
சொல்லாது இருக்கப்பெறின்.
குறள் எண் 404
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும்,
கொள்ளார், அறிவு உடையார்.
குறள் எண் 405
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து
சொல்லாட, சோர்வுபடும்.
குறள் எண் 406
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
உளர் என்னும் மாத்திரையர் அல்லால், பயவாக்
களர் அனையர்-கல்லாதவர்.
குறள் எண் 407
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று.
குறள் எண் 408
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே-
கல்லார்கண் பட்ட திரு.
குறள் எண் 409
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு.
குறள் எண் 410
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41. கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர்-இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர்.
குறள் எண் 411
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
அஃதாவது ,ஒர் அசிரியனிடத் தமர்ந்து ஒரு நூலை அல்லது கல்வித்துறையைக் கற்றவன், அத்துறையில் தேர்ச்சி பெற்ற பேரறிஞரையடுத்துத் தான் அறியாதவற்றைக் கேட்டறிதல். இது கல்வியின் தொடர்ச்சியாதலாலும் கல்லாமையால் நேர்ந்தகுறையை நீக்குதலாலும், கல்வி கல்லாமைகளின் பின் வைக்கப்பட்டது.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
குறள் எண் 412
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது,
வயிற்றுக்கும் ஈயப்படும்.
குறள் எண் 413
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
செவியுணவின் கேள்வி உடையார், அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர், நிலத்து.
குறள் எண் 414
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
கற்றிலன் ஆயினும் கேட்க; அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை.
குறள் எண் 415
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே-
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்.
குறள் எண் 416
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
எனைத்தானும் நல்லவை கேட்க! அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
குறள் எண் 417
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார்-இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர்.
குறள் எண் 418
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
கேட்பினும் கேளாத் தகையவே-கேள்வியால்
தோட்கப் படாத செவி.
குறள் எண் 419
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
குறள் எண் 420
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 42. கேள்வி
செவியின் சுவை உணரா, வாய் உணர்வின், மாக்கள்
அவியினும் வாழினும் என்.
குறள் எண் 421
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
அஃதாவது, கல்வி கேள்விகளாலாய தௌளிய அறிவும் மதியுமுடைமை. அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும். அறிவு என்னும் சொல், அறிதல் (perception, knowing, understanding), அறிந்தசெய்தி (knowledge), ஓதி (wisdom), மதி (intelligence) என்னும் நாற்பொருளுணர்த்தும். அவற்றின் சேர்கை இங்கு அறிவெனப்பட்டது.
அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்.
குறள் எண் 422
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ,
நன்றின் பால் உய்ப்பது-அறிவு.
குறள் எண் 423
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது-அறிவு.
குறள் எண் 424
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது-அறிவு.
குறள் எண் 425
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்
கூம்பலும் இல்லது-அறிவு.
குறள் எண் 426
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
எவ்வது உறைவது உலகம், உலகத்தொடு
அவ்வது உறைவது-அறிவு.
குறள் எண் 427
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார்
அஃது அறிகல்லாதவர்.
குறள் எண் 428
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது
அஞ்சல், அறிவார் தொழில்.
குறள் எண் 429
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை-
அதிர வருவதோர் நோய்.
குறள் எண் 430
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 43. அறிவுடைமை
அறிவு உடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார்
என் உடையரேனும் இலர்.
குறள் எண் 431
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
அஃதாவது, ஐம்பெருங் குற்றமென்றும் அறுவகை உட்பகையென்றும் சொல்லப்படும் குற்றங்களையெல்லாம், அரசனும் பிறரும் தங்கண், நிகழாதவாறு விலக்குதல். கொலை,களவு, பொய், வெகுளி. கடும்பற்றுள்ளம், மானம்; உவகை, செருக்கு என்பன அறுவகையுட்பகை.
வடநூலார் இவற்றை சிறிது வேறுபடவுங் கூறுவர். ஆயின், அவ்விருவேறு பாகுபாட்டிற்கும் மூலம் தமிழ் என்பது தேற்றம். எனினும், அரசியற்பாகுபாடு தன் துறைக்கேற்ப மதவியற் பாகு பாட்னின்றும், சிறிது வேறுபடும்.
அறிவுடையார்க் கல்லது இக்குற்றங்களைக் கடிதல் கூடாமையின், இது அறிவுடைமையின் பின் வைக்கப்பட்டது.
செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
குறள் எண் 432
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
இவறலும், மாண்பு இறந்த மானமும், மாணா
உவகையும்,- ஏதம், இறைக்கு.
குறள் எண் 433
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
தினைத் துணையாம் குற்றம் வரினும், பனைத் துணையாக்
கொள்வர், பழி நாணுவார்.
குறள் எண் 434
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
குற்றமே காக்க, பொருளாக-குற்றமே,
அற்றம் தரூஉம் பகை.
குறள் எண் 435
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை, எரி முன்னர்
வைத்தூறு போல, கெடும்.
குறள் எண் 436
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
தன் குற்றம் நீக்கி, பிறர் குற்றம் காண்கிற்பின்,
என் குற்றம் ஆகும் இறைக்கு.
குறள் எண் 437
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்.
குறள் எண் 438
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
பற்று உள்ளம் என்னும் இவறன்மை, எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று.
குறள் எண் 439
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
வியவற்க, எஞ்ஞான்றும் தன்னை! நயவற்க,
நன்றி பயவா வினை.
குறள் எண் 440
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 44. குற்றங்கடிதல்
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்,
ஏதில, ஏதிலார் நூல்.
குறள் எண் 441
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
அஃதாவது,
கொண்டபே-ராற்ற லுடையார்க்கு மாகா தளவின்றி
யேற்ற கருமஞ் செயல். (மூதுரை, 19)
ஆதலின், ஐவகையும் அறுவகையுமான குற்றங்களைத் தன்கண் நீக்கிய அரசன், தன் ஆட்சியைக் குற்றமின்றிச் செவ்வையாக நடாத்துதற்கு, இயற்கை மதிநுட்பத்தோடு நூலறிவும் சூழ்ச்சித் திறனும் தூயவொழுக்கமு முடைய பெரியாரைத் தன் அமைச்சராகத் துணைக்கொள்ளுதல். அதிகார, முறைமையும் இதனால் அறியப்படும்.
பரிமேலழகர் "பேரறிவுடையராவார் அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமற் காத்தற் குரிய ---------------- புரோகிதர்" என்று இங்கும் தம் ஆரியநஞ்சு நிறைந்த நெஞ்சைக் காட்டியுள்ளார்.
அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை
திறன் அறிந்து, தேர்ந்து, கொளல்.
குறள் எண் 442
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
குறள் எண் 443
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
அரியவற்றுள் எல்லாம் அரிதே-பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
குறள் எண் 444
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்,
வன்மையுள் எல்லாம் தலை.
குறள் எண் 445
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
சூழ்வார் கண் ஆக ஒழுகலான், மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
குறள் எண் 446
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
தக்கார் இனத்தனாய், தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
குறள் எண் 447
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே,
கெடுக்கும் தகைமையவர்.
குறள் எண் 448
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும், கெடும்.
குறள் எண் 449
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை;-மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை, நிலை.
குறள் எண் 450
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே-
நல்லார் தொடர் கைவிடல்.
குறள் எண் 451
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
அஃதாவது சிறியோர் கூட்டத்தொடு கூடாமை. சிறியோராவார், கயவரும் ஐங்குற்றவாளியரும் (காமுகரும் கட்குடியரும் கவறாடுவோரும் கரவடரும் கொலைஞரும்) தன்னலக்காரரும் கல்வி நிரம்பாதவரும் உயர்ந்தோர் உண்டென்பதை இல்லையென மறுப்போருமாவர். சிறியோர் சேர்க்கையால் அறிவும் ஒழுக்கமும்திரிந்து இம்மையும் மறுமையுங் கெடுவதால், பெரியார்துணை இல்லாதுபோகு மென்பதையும், இருப்பினும் பயன்படா தென்பதையும் , உணர்த்தற்கு இது பெரியாரைத் துணைக்கோடல் என்பதன் பின் வைக்கப்பட்டது.
சிற்றினம் அஞ்சும், பெருமை; சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்.
குறள் எண் 452
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
நிலத்து இயல்பான் நீர் திரிந்து, அற்று ஆகும்;- மாந்தர்க்கு
இனத்துஒ இயல்பது ஆகும், அறிவு.
குறள் எண் 453
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மனத்தான் ஆம், மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான் ஆம்,
இன்னான்ஒ எனப்படும் சொல்.
குறள் எண் 454
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மனத்து உளது போலக் காட்டி, ஒருவற்கு
இனத்து உளது ஆகும்-அறிவு.
குறள் எண் 455
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மனம் தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்.
குறள் எண் 456
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும்; இனம் தூயார்க்கு
இல்லை, நன்று ஆகா வினை.
குறள் எண் 457
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம்; இன நலம்
எல்லாப் புகழும் தரும்.
குறள் எண் 458
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மன நலம் நன்கு உடையர் ஆயினும், சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 459
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
மன நலத்தின் ஆகும், மறுமை; மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 460
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமை
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை; தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்.
குறள் எண் 461
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
அஃதாவது, அரசன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந்திறம். அது பெரியாரைத் துணைக்கொண்டும் சிற்றினஞ் சேராதும் செய்யப்படுவதாகலின், அவற்றின்பின் வைக்கப்பட்டது.
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து, செயல்.
குறள் எண் 462
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல்.
குறள் எண் 463
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
ஆக்கம் கருதி, முதல் இழக்கும் செய்வினை
ஊக்கார், அறிவு உடையார்.
குறள் எண் 464
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
தௌதவு இலதனைத் தொடங்கார்-இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்.
குறள் எண் 465
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
வகை அறச் சூழாது எழுதல், பகைவரைப்
பாத்திப் படுப்பது ஓர் ஆறு.
குறள் எண் 466
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க
செய்யாமையானும் கெடும்.
குறள் எண் 467
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின்,
எண்ணுவம் என்பது இழுக்கு.
குறள் எண் 468
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று
போற்றினும், பொத்துப்படும்.
குறள் எண் 469
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு-அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை.
குறள் எண் 470
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்-தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
குறள் எண் 471
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
அஃதாவது , ஆம்புடை நான்கனுள் தண்டமாகிய போரையே துணிந்த அரசன் , வினை வலி முதலிய நால்வகை வலியையும் ஒப்பு நோக்கி அளந்தறிதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் .
வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும்,
துணை வலியும், தூக்கிச் செயல்.
குறள் எண் 472
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
ஒல்வது அறிவது அறிந்து, அதன்கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
குறள் எண் 473
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
உடைத் தம் வலி அறியார், ஊக்கத்தின் ஊக்கி,
இடைக்கண் முரிந்தார் பலர்.
குறள் எண் 474
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
அமைந்து ஆங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை
வியந்தான், விரைந்து கெடும்.
குறள் எண் 475
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
பீலி பெய் சாகாடும் அச்சு இறும்-அப் பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
குறள் எண் 476
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்.
குறள் எண் 477
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
ஆற்றின் அளவு அறிந்து ஈக; அது பொருள்
போற்றி வழங்கும் நெறி.
குறள் எண் 478
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும், கேடு இல்லை-
போகு ஆறு அகலாக்கடை.
குறள் எண் 479
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகி, தோன்றாக் கெடும்.
குறள் எண் 480
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 48. வலியறிதல்
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை,
வள வரை வல்லைக் கெடும்.
குறள் எண் 481
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
அஃதாவது வலிமிக்கவனாய்ப் பகைமேற் செல்லும் அரசன் , அச்செலவிற்கும் போருக்கும் ஏற்ற காலத்தை அறிதல் . அதிகார வொழுங்கும் இதனால் விளங்கும் .
பகல் வெல்லும், கூகையைக் காக்கை;- இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும், பொழுது.
குறள் எண் 482
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
பருவத்தொடு ஒட்ட ஒழுகல்-திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
குறள் எண் 483
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
அரு வினை என்ப உளவோ-கருவியான்
காலம் அறிந்து செயின்.
குறள் எண் 484
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
ஞாலம் கருதினும், கைகூடும்-காலம்
கருதி, இடத்தான் செயின்.
குறள் எண் 485
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
காலம் கருதி இருப்பர்-கலங்காது
ஞாலம் கருதுபவர்.
குறள் எண் 486
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
குறள் எண் 487
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
பொள்ளென ஆங்கே புறம் வேரார்; காலம் பார்த்து,
உள் வேர்ப்பர், ஔளியவர்.
குறள் எண் 488
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்காம் தலை.
குறள் எண் 489
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
எய்தற்கு அரியது இயைந்தக்கால், அந் நிலையே
செய்தற்கு அரிய செயல்.
குறள் எண் 490
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 49. காலம் அறிதல்
கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க, சீர்த்த இடத்து.
குறள் எண் 491
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
அஃதாவது , வலியுங் காலமுமறிந்து பகைமேற் செல்லும் அரசன் தான் வெல்லுதற் கேற்ற இடத்தை யறிதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் . இடம் - இடன் . அது நிலமாகவோ அரணாகவோ இருக்கலாம் .
தொடங்கற்க எவ் வினையும்; எள்ளற்க-முற்றும்
இடம் கண்டபின் அல்லது.<a name='1'></a>
குறள் எண் 492
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும்.
குறள் எண் 493
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
ஆற்றாரும் ஆற்றி அடுப-இடன் அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
குறள் எண் 494
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
எண்ணியார் எண்ணம் இழப்பர்-இடன் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
குறள் எண் 495
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
நெடும் புனலுள் வெல்லும் முதலை; அடும், புனலின்
நீங்கின், அதனைப் பிற.
குறள் எண் 496
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
கடல் ஓடா, கால் வல் நெடுந் தேர்; கடல் ஓடும்
நாவாயும் ஓடா, நிலத்து.
குறள் எண் 497
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
அஞ்சாமை அல்லால், துணை வேண்டா-எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின்.
குறள் எண் 498
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
சிறு படையான் செல் இடம் சேரின், உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும்.
குறள் எண் 499
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
சிறை நலனும் சீரும் இலர் எனினும், மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது.
குறள் எண் 500
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 50. இடனறிதல்
கால் ஆழ் களரில் நரி அடும், கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு.
குறள் எண் 501
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
அஃதாவது , அரசன் தன் ஆட்சி பற்றிய எல்லா வினைகளிலும் சிறப்பாகப் போர்வினையில் , தனக்கு உதவி செய்யும் பொருட்டு அமைச்சர் படைத்தலைவர் தூதர் முதலிய துணையதிகாரிகளை அவர் குடிப்பிறப்புக் குணம் அறிவாற்றல் செயல் பற்றி , காட்சி கருத்து உரை ஆகிய அளவைகளாலும் நூலுத்தி பட்டறிவாலும் ஆராய்ந்து தௌததல் . அதிகார முறையும் இதனால் விளங்கும் .
அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்.
குறள் எண் 502
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
குடிப் பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப் பரியும்
நாண் உடையான்கட்டே தௌதவு.
குறள் எண் 503
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
அரிய கற்று, ஆசு அற்றார்கண்ணும், தெரியுங்கால்
இன்மை அரிதே, வௌதறு.
குறள் எண் 504
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்.
குறள் எண் 505
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
குறள் எண் 506
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர்
பற்று இலர்; நாணார் பழி.
குறள் எண் 507
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
காதன்மை கந்தா, அறிவு அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
குறள் எண் 508
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
தேரான், பிறனைத் தௌதந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
குறள் எண் 509
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின்,
தேறுக, தேறும் பொருள்.
குறள் எண் 510
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 51. தெரிந்து தௌததல்
தேரான் தௌதவும், தௌதந்தான்கண் ஐயுறவும்,
தீரா இடும்பை தரும்.
குறள் எண் 511
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
அஃதாவது , ஆராய்ந்து தௌதயப்பட்ட வினைத்தலைவரை , அவரவர் திறமறிந்து அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவதன்கண் அவரை ஆண்டு நடத்துதல் . அதிகார முறையும் இதனால் விளங்கும்.
நன்மையும் தீமையும் நாடி, நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும்.
குறள் எண் 512
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
குறள் எண் 513
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
அன்பு, அறிவு, தேற்றம், அவா இன்மை, இந் நான்கும்
நன்கு உடையான்கட்டே தௌதவு.
குறள் எண் 514
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
எனை வகையான் தேறியக்கண்ணும், வினை வகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
குறள் எண் 515
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
அறிந்து, ஆற்றி, செய்கிற்பாற்கு அல்லால், வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.
குறள் எண் 516
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு
எய்த உணர்ந்து, செயல்.
குறள் எண் 517
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
இதனை இதனால், இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்.
குறள் எண் 518
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
வினைக்கு உரிமை நாடிய பின்றை, அவனை
அதற்கு உரியன் ஆகச் செயல்.
குறள் எண் 519
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும், திரு.
குறள் எண் 520
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 52. தெரிந்து வினையாடல்
நாள்தோறும் நாடுக, மன்னன்-வினைசெய்வான்
கோடாமைக் கோடாது உலகு.
குறள் எண் 521
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
அஃதாவது , அரசன் தன் உறவினரைத் தன்னினின்று நீங்காமல் அணைத்துக் கொள்ளுதல் . வினைச்சுற்றத்திற்கு அடுத்து இனச்சுற்றமும் அரசன் ஆட்சிக்கும் வாழ்விற்கும் உதவுதலின் , இது தெரிந்து வினையாடலின் பின்வைக்கப்பட்டது . சுற்றியிருப்பது சுற்றம் , தழுவல் - தழால் . 'ஆல்' தொழிற் பெயரீறு . 'செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.' (வெற்றி - 3) . செல்வருட் செல்வன் அரசன்.
பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்கண்ணே உள.
குறள் எண் 522
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
விருப்பு அறாச் சுற்றம் இயையின், அறுப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்.
குறள் எண் 523
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை-குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று.
குறள் எண் 524
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
குறள் எண் 525
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின், அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும்.
குறள் எண் 526
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
பெருங் கொடையான், பேணான் வெகுளி, அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல்.
குறள் எண் 527
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
காக்கை கரவா கரைந்து உண்ணும்; ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.
குறள் எண் 528
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
பொது நோக்கான், வேந்தன் வரிசையா நோக்கின்,
அது நோக்கி வாழ்வார் பலர்.
குறள் எண் 529
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
தமர் ஆகி, தன்-துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
குறள் எண் 530
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 53. சுற்றந் தழால்
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை, வேந்தன்
இழைத்து இருந்து, எண்ணிக் கொளல்.
குறள் எண் 531
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
அஃதாவது , அறிவாற்றல் படையரண் பொருள் புகழ் முதலியவற்றால் மகிழ்ந்து , நாடுகாத்தல் பகையழித்தல் முதலிய கடமைகளை மறந்து சோர்ந்திராமை . பொச்சாப்பினாற் சுற்றந்தழுவுதல் கூடாமையின் , இது சுற்றந்தழாலின் பின் வைக்கப்பட்டது.
இறந்த வெகுளியின் தீதே-சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு.
குறள் எண் 532
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
பொச்சாப்புக் கொல்லும் புகழை-அறிவினை
நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு.
குறள் எண் 533
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து
எப் பால் நூலோர்க்கும் துணிவு.
குறள் எண் 534
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை,
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.
குறள் எண் 535
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
முன்னுறக் காவாது இழுக்கியான், தன் பிழை,
பின் ஊறு, இரங்கிவிடும்.
குறள் எண் 536
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
இழுக்காமை யார்மாட்டும், என்றும், வழுக்காமை
வாயின், அஃது ஒப்பது இல்.
குறள் எண் 537
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
அரிய என்று ஆகாத இல்லை-பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின்.
குறள் எண் 538
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
குறள் எண் 539
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
குறள் எண் 540
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 54. பொச்சாவாமை
உள்ளியது எய்தல் எளிதுமன்-மற்றும் தான்
உள்ளியது உள்ளப்பெறின்.
குறள் எண் 541
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
அஃதாவது , அரசனாற் கையாளப்பெறும் நேர்மையான ஆட்சி முறை . நேர்மையான ஆட்சி நேரான கோல்போலிருத்தலால் செங்கோல் எனப் பட்டது . குடிகள் ஆக்கள் போலவும் அரசன் ஆயன் போலவுமிருத்தலால் , அரசன் கோன் எனப்பட்டான் . கோ = ஆ (பசு) . கோவன் = (க) ஆயன்.
"கோவனிரை மீட்டனன்" (சீவக. 455)
(உ) அரசன், "கோவனும் மக்களும" (சீவக . 1843)
கோவன் - கோன் - கோ = அரசன் . கோன் = ஆயன் , அரசன் , தலைவன் . அரசன் கையிலுள்ள கோல் ஆடுமாடு மேய்க்கும் இடையன் கையிலுள்ள கோல் போன்றது . அச்சின்னத்தின் பெயர் அரசனையாவது அவனாட்சியையாவது குறிக்கும் போது சின்னவாகு பெயராம் . கோலின் தன்மை கோன்மை . செங்கோலின் தன்மை செங்கோன்மை . செம்மை = நேர்மை . கோணாமை , நெறியினின்றும் விலகாமை .
"வடநூலாரும் தண்டமென்றார்" , என்றார் பரிமேலழகர் . வடநூலில் தண்டம் என்பது தண்டிக்கும் அதிகாரத்தை குறிக்குமேயன்றி , தமிழிற்போல் அரசாட்சியைக் குறிக்காது . மேலும் , அச்சொல்லும் தென்சொல்லே.
செங்கோன்மை சோர்வில்லாத அரசனாலேயே கையாளப்படத் தக்கதாதலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது .
ஓர்ந்து, கண்ணோடாது, இறை புரிந்து, யார்மாட்டும்
தேர்ந்து, செய்வஃதே முறை.
குறள் எண் 542
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம்;-மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி.
குறள் எண் 543
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய்
நின்றது-மன்னவன் கோல்.
குறள் எண் 544
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
குடி தழீஇக் கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும், உலகு.
குறள் எண் 545
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட-
பெயலும் விளையுளும் தொக்கு.
குறள் எண் 546
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
வேல் அன்று, வென்றி தருவது; மன்னவன்
கோல்; அதூஉம், கோடாது எனின்.
குறள் எண் 547
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
இறை காக்கும், வையகம் எல்லாம்; அவனை
முறை காக்கும், முட்டாச் செயின்.
குறள் எண் 548
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
எண் பதத்தான் ஓரா, முறை செய்யா, மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும்.
குறள் எண் 549
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
குடி புறங்காத்து, ஓம்பி, குற்றம் கடிதல்
வடு அன்று; வேந்தன் தொழில்.
குறள் எண் 550
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 55. செங்கோன்மை
கொலையில், கொடியாரை, வேந்து ஒறுத்தல் பைங்கூழ்
களை கட்டதனொடு நேர்.
குறள் எண் 551
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
அஃதாவது , அரசனாற் கையாளப்படும் நேர்மை யில்லா ஆட்சி முறைமை, நேர்மையில்லா ஆட்சி வளைந்த கோல் போலிருத்தலால் கொடுங்கோல் எனப்பட்டது . கொடுங்கோலின் தன்மை கொடுக் கோன்மை . இது செங்கோன்மைக்கு மாறாகலின் , அது கூடாதென்பதற்கு அதன்பின் வைக்கப்பட்டது.
கொலை மேற்கொண்டாரின் கொடிதே-அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து.
குறள் எண் 552
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
வேலொடு நின்றான், இடுஒ என்றது போலும்-
கோலொடு நின்றான் இரவு.
குறள் எண் 553
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
நாள்தொறும் நாடி, முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.
குறள் எண் 554
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி,
சூழாது, செய்யும் அரசு.
குறள் எண் 555
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
அல்லற்பட்டு, ஆற்றாது, அழுத கண்ணீர் அன்றே-
செல்வத்தைத் தேய்க்கும் படை.
குறள் எண் 556
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை; அஃது இன்றேல்,
மன்னாவாம், மன்னர்க்கு ஔத.
குறள் எண் 557
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு.
குறள் எண் 558
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
இன்மையின் இன்னாது, உடைமை-முறை செய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
குறள் எண் 559
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
முறை கோடி மன்னவன் செய்யின், உறை கோடி
ஒல்லாது, வானம் பெயல்.
குறள் எண் 560
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56. கொடுங் கோன்மை
ஆ பயன் குன்றும்; அறுதொழிலோர் நூல் மறப்பர்;-
காவலன் காவான் எனின்.
குறள் எண் 561
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
அஃதாவது, குடிகளும் வினைச் சுற்றமும் தானும் அஞ்சத்தக்க செயல்களைச் செய்யாமை. வெரு-அச்சம். வெருவருதல்-அஞ்சுதல். வெருவந்த செய்தல் கொடுச்கோன்மையின் பாற்படுதலின், இது அதன்பான் வைக்கப்பட்டது.
தக்காங்கு நாடி, தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
குறள் எண் 562
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
கடிது ஓச்சி, மெல்ல எறிக-நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர்.
குறள் எண் 563
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
வெருவந்த செய்து ஒழுகும் வெங்கோலன் ஆயின்,
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
குறள் எண் 564
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லைக் கெடும்.
குறள் எண் 565
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
அருஞ் செவ்வி, இன்னா முகத்தான் பெருஞ் செல்வம்
பேஎய் கண்டன்னது உடைத்து.
குறள் எண் 566
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
கடுஞ் சொல்லன், கண் இலன் ஆயின், நெடுஞ் செல்வம்
நீடு இன்றி, ஆங்கே கெடும்.
குறள் எண் 567
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
கடு மொழியும், கையிகந்த தண்டமும், வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம்.
குறள் எண் 568
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
இனத்து ஆற்றி, எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச்
சீறின், சிறுகும் திரு.
குறள் எண் 569
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
செரு வந்த போழ்தில், சிறை செய்யா வேந்தன்,
வெருவந்து, வெய்து கெடும்.
குறள் எண் 570
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை
கல்லார்ப் பிணிக்கும், கடுங்கோல்; அது அல்லது
இல்லை, நிலக்குப் பொறை.
குறள் எண் 571
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
அஃதாவது, தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளியவரும் ஆனவருக்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு. இது அவரைக் கண்டவுடன் அவர்மீது மனம் விரைந்தோடுவது பற்றிக் கண்ணோட்டம் எனப்பட்டது.வெருவந்த செய்தற்கு நேர்மாறான பண்பாதலின், இது வெருவந்த செய்யாமையின்பின் வைக்கப் பட்டது.
கண்ணோட்டம் நடுநிலை திறம்பியதும் திறம்பாததும் என இருவகைத்தாம்."ஓர்ந்துகண்ணோடாது" (குறள்.541) என்பதிற் சொல்லப்பட்டது திறம்பியது;இங்குச் சொல்லப்படுவது திறம்பாதது.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான், உண்டு இவ் உலகு.
குறள் எண் 572
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃது இலார்
உண்மை நிலக்குப் பொறை.
குறள் எண் 573
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
பண் என் ஆம், பாடற்கு இயைபு இன்றேல்?-கண் என் ஆம்,
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் எண் 574
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
உளபோல் முகத்து எவன் செய்யும்-அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் எண் 575
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல்,
புண் என்று உணரப்படும்.
குறள் எண் 576
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
மண்ணொடு இயைந்த மரத்து அனையர்-கண்ணொடு
இயைந்து, கண்ணோடாதவர்.
குறள் எண் 577
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்; கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
குறள் எண் 578
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து, இவ் உலகு.
குறள் எண் 579
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும், கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
குறள் எண் 580
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58. கண்ணோட்டம்
பெயக் கண்டும், நஞ்சு உண்டு அமைவர்-நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.
குறள் எண் 581
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
அஃதாவது ,அரசன் தன் நாட்டிலும் தன் நாட்டைச் சூழ்ந்த பிறநாடுகளிலும் தனக்கு நட்பாகவோ பகையாகவோ வுள்ள சேய்மைநாடுகளிலும் , பகை ,நட்பு , நொதுமல் என்னும் முத்திறத்தாரிடத்தும் நிகழ்பவற்றை மறைவக அறிதற்கு ஒற்றரை ஆளுதர். ஒற்றராவர், அவ்வக்காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுகோலம் பூண்டு பகையரசர் உவளகமும் புகுந்து ,பிறர் ஐயுறாவாறு அங்குள்ள அருமறைகளையும் மருமங்களையும் திறமையாக அறிந்து , ஐயுற்றும் அறிந்தும் பகைவராற் கைப்பற்றப் பட்டு உயிர்க்கிறுதி நேரினும் வாய் சோர்ந்து உண்மை வௌதயிடாதவராய் ,செய்திகளை யெல்லாம் உடனுடன் அரசனுக்கு மறைவாக வந்து உரைக்கும் மாபெருந் திறவோரும் மறவோரும் ஆவர்.ஒற்று ,வேய் என்பன ஒருபொருட் சொற்கள் ; 39-ஆம் அதிகாரம் முதல் இதுவரை கூறப்பட்டுள்ள இலக்கணங்களை யெல்லாங் கொண்ட அரசன், தன் நாடு காவற்கும் வேற்று நாடு கைப்பற்றற்கும் ஒற்றாடல் இன்றியமையாதலின் ,இது அவற்றின் பின் வைக்கத்தட்டது.
ஒற்றும், உரை சான்ற நூலும், இவை இரண்டும்
தெற்றென்க, மன்னவன் கண்.
குறள் எண் 582
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல், வேந்தன் தொழில்.
குறள் எண் 583
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்.
குறள் எண் 584
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
வினைசெய்வார், தம் சுற்றம், வேண்டாதார், என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது-ஒற்று.
குறள் எண் 585
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
கடாஅ உருவொடு கண் அஞ்சாது, யாண்டும்
உகா அமை வல்லதே-ஒற்று.
குறள் எண் 586
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து, ஆராய்ந்து,
என் செயினும் சோர்வு இலது-ஒற்று.
குறள் எண் 587
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
மறைந்தவை கேட்க வற்று ஆகி, அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே-ஒற்று.
குறள் எண் 588
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி, கொளல்.
குறள் எண் 589
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
ஒற்று ஒற்று உணராமை ஆள்க; உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்.
குறள் எண் 590
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 59. ஒற்றாடல்
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்,
புறப்படுத்தான் ஆகும், மறை.
குறள் எண் 591
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
அஃதாவது ,வினைசெய்வதில் தளர்ச்சியின்றி மேன்மேலுங் கிளர்ச்சி பெறுதல்.ஒற்றரால் நிகழ்ந்தவற்றை யறிந்து அவற்றிற் கேற்ப வினைசெய்யும் அரசனுக்கு இது இன்றியமையாயின், ஒற்றாடலின் பின் வைக்கப்பட்டது. ஊ- ஊங்கு = முன். ஊங்குதல் = முன்செல்லுதல். ஊக்குதல்=முற்செலுத்துதல், உள்ளத்தை வினையில் முன்செல்லத்தூண்டுதல்.ஊங்கு-ஊக்கு -ஊக்கம்.
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃது இல்லார்
உடையது உடையரோ, மற்று.
குறள் எண் 592
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும்.
குறள் எண் 593
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
ஆக்கம் இழந்தேம்! என்று அல்லாவார்-ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்.
குறள் எண் 594
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்-அசைவு இலா
ஊக்கம் உடையானுழை.
குறள் எண் 595
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
வௌளத்து அனைய, மலர் நீட்டம்;-மாந்தர்தம்
உள்ளத்து அனையது, உயர்வு.
குறள் எண் 596
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்! மற்று அது
தள்ளினும், தள்ளாமை நீர்த்து.
குறள் எண் 597
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
சிதைவிடத்து ஒல்கார், உரவோர்;-புதை அம்பின்
பட்டுப் பாடு ஊன்றும் களிறு.
குறள் எண் 598
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
உள்ளம் இலாதவர் எய்தார்-'உலகத்து
வள்ளியம்' என்னும் செருக்கு.
குறள் எண் 599
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
பரியது கூர்ங் கோட்டது ஆயினும், யானை
வெரூஉம், புலி தாக்குறின்.
குறள் எண் 600
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 60. ஊக்கமுடைமை
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார்
மரம்; மக்கள் ஆதலே வேறு.
குறள் எண் 601
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
அஃதாவது, வினைமுயற்சியிற் சோம்புதலின்மை. ஊக்கமுடையார்க்கும் வெப்பம் மிக்க வானிலையாலேனும் ,உணவின் தன்மையாலேனும் , சேம்பேறிகளின் கூட்டுறவாலேனும் , நெஞ்சுரக்குறைவினாலேனும் ,சிற்றின்ப ஈடுபாட்டாலேனும் , ஒவ்வொரு சமையத்தில் மடிநேர்தலின் ,அதை விலக்குதற்கு இது ஊக்கமுடைமையின் பின் வைக்கப்பட்டது.
குடி என்னும் குன்றா விளக்கம், மடி என்னும்
மாசு ஊர, மாய்ந்து கெடும்.
குறள் எண் 602
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
மடியை மடியா ஒழுகல்-குடியைக்
குடியாக வேண்டுபவர்.
குறள் எண் 603
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
மடி மடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும், தன்னினும் முந்து.
குறள் எண் 604
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
குடி மடிந்து, குற்றம் பெருகும்-மடி மடிந்து,
மாண்ட உஞற்று இலவர்க்கு.
குறள் எண் 605
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
நெடு நீர், மறவி, மடி, துயில், நான்கும்
கெடும் நீரார் காமக் கலன்.
குறள் எண் 606
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும், மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது.
குறள் எண் 607
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
இடிபுரிந்து எள்ளம் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றில் அவர்.
குறள் எண் 608
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
மடிமை குடிமைக்கண் தங்கின், தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்.
குறள் எண் 609
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
குடி, ஆண்மையுள் வந்த குற்றம், ஒருவன்
மடி ஆண்மை மாற்ற, கெடும்.
குறள் எண் 610
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 61. மடியின்மை
மடி இலா மன்னவன் எய்தும்-அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
குறள் எண் 611
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
அஃதாவது, இடைவிடாது கருமத்தை ஆண்டு நடத்துந்திறம்.இது மடியின்மையால் நேர்வதாகலின் அதன்பின் வைக்கப்பட்டது.
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்;
பெருமை முயற்சி தரும்.
குறள் எண் 612
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
வினைக்கண் வினைகெடல் ஓம்பல்-வினைக் குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று, உலகு.
குறள் எண் 613
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே-
வேளாண்மை என்னும் செருக்கு.
குறள் எண் 614
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடி கை
வாள் ஆண்மை போல, கெடும்.
குறள் எண் 615
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
இன்பம் விழையான், வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்.
குறள் எண் 616
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
முயற்சி-திருவினை ஆக்கும்; முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும்.
குறள் எண் 617
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
மடி உளாள், மா முகடி என்ப; மடி இலான்
தாள் உளாள், தாமரையினாள்.
குறள் எண் 618
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று; அறிவு அறிந்து,
ஆள்வினை இன்மை பழி.
குறள் எண் 619
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
தெய்வத்தான் ஆகாதுஎனினும், முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்.
குறள் எண் 620
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 62. ஆள்வினையுடைமை
ஊழையும் உப்பக்கம் காண்பர்-உலைவு இன்றித்
தாழாது உஞற்றுபவர்.
குறள் எண் 621
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
அஃதாவது, ஆள்வினையில் ஈடுபட்டவன், இயற்கையாலேனும் தெய்வத்தாலேனும் இருவகைப்பகைவராலேனும் வினைக்கு இடையூறாகத் துன்பங்கள் நேர்ந்த விடத்து, அவற்றால் மனங் கலங்காமை. அதிகார முறையும் இதனால் விளங்கும்.
இடுக்கண் வருங்கால் நகுக! அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.
குறள் எண் 622
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
வௌளத்து அனைய இடும்பை, அறிவு உடையான்
உள்ளத்தின் உள்ள, கெடும்.
குறள் எண் 623
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
இடும்பைக்கு இடும்பை படுப்பர்-இடும்பைக்கு
இடும்பை படாஅதவர்.
குறள் எண் 624
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
குறள் எண் 625
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.
குறள் எண் 626
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
அற்றேம்! என்று அல்லற்படுபவோ-'பெற்றேம்!' என்று
ஓம்புதல் தேற்றாதவர்.
குறள் எண் 627
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
இலக்கம், உடம்பு இடும்பைக்கு என்று, கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம், மேல்.
குறள் எண் 628
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
இன்பம் விழையான், இடும்பை இயல்புஒ என்பான்,
துன்பம் உறுதல் இலன்.
குறள் எண் 629
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
குறள் எண் 630
பொருட்பால்
அரசியல்
அதிகாரம். 63. இடுக்கணழியாமை
இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
குறள் எண் 631
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
இது காறும் அரசன் இலக்கணங்களையும் கடமைளையும் வினை செய்யும் முறைகளையும் கூறியவர், இனி அரசியலின் ஏழுறுப்புக் களையும் 45 அதிகாரத்தால் கூறுமாறு எடுத்துக்கொண்டு, அவற்றுள் ஆட்சிக்கு இன்றியமையாத் துணையும் அரசனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தவனுமான அமைச்சன் இயலையுஞ் செயலையும் பத்ததிகாரத்தாற் கூறத் தொடங்கி,முதற்கண் அமைச்சிலக் கணங் கூறுகின்றார்.
அமைச்சு
அஃதாவது, அமைச்சனின் இலக்கணமுங் கடமையும்.
கருவியும், காலமும், செய்கையும், செய்யும்
அருவினையும், மாண்டது-அமைச்சு.
குறள் எண் 632
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
வன்கண், குடிகாத்தல், கற்று அறிதல், ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது-அமைச்சு.
குறள் எண் 633
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
பிரித்தலும், பேணிக்கொளலும், பிரிந்தார்ப்
பொருத்தலும், வல்லது-அமைச்சு.
குறள் எண் 634
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச்
சொல்லலும் வல்லது-அமைச்சு.
குறள் எண் 635
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
அறன் அறிந்து, ஆன்று அமைந்த சொல்லான், எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான், தேர்ச்சித் துணை.
குறள் எண் 636
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள, முன் நிற்பவை.
குறள் எண் 637
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
செயற்கை அறிந்தக்கடைத்தும், உலகத்து
இயற்கை அறிந்து, செயல்.
குறள் எண் 638
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
அறி கொன்று, அறியான் எனினும், உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
குறள் எண் 639
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
பழுது எண்ணும் மந்திரியின், பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும்.
குறள் எண் 640
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 64. அமைச்சு
முறைப்படச் சூழ்ந்தும், முடிவிலவே செய்வர்-
திறப்பாடு இலாஅதவர்.
குறள் எண் 641
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
அஃதாவதுர அமைச்சன் தன் சூழ்ச்சியை அரசனுக்கு எடுத்துச் சொல்வதில் வல்லவனாதல். மேற்கூறிய அமைச்சிலக்கணங்களுள் ஒன்றான 'ஒருதலையாச் சொல்லலும் வல்லது' (634) என்றதனை விரித்துக் கூறுவதால், இது அமைச்சின் பின் வைக்கப் பட்டது.
நா நலம் என்னும் நலன் உடைமை; அந் நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று.
குறள் எண் 642
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
ஆக்கமும், கேடும், அதனால் வருதலால்,
காத்து ஓம்பல், சொல்லின்கண் சோர்வு.
குறள் எண் 643
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும்
வேட்ப, மொழிவது ஆம்-சொல்.
குறள் எண் 644
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
திறன் அறிந்து சொல்லுக, சொல்லை; அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல்.
குறள் எண் 645
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
குறள் எண் 646
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
வேட்பத் தாம் சொல்லி, பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசு அற்றார் கோள்.
குறள் எண் 647
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
சொலல் வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது.
குறள் எண் 648
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம்-நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
குறள் எண் 649
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
பல சொல்லக் காமுறுவர் மன்ற- மாசு அற்ற
சில சொல்லல் தேற்றாதவர்.
குறள் எண் 650
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 65. சொல்வன்மை
இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர்-கற்றது
உணர விரித்து உரையாதார்.
குறள் எண் 651
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
அஃதாவது, அறநூல் முறையிலும் அரசியல் முறையிலும் அமைச்சர் செயல் குற்றமில்லாததாயிருத்தல். சொல்வன்மை போன்றே செயல் நன்மையும் அமைச்சர்க்கு இருத்தல் வேண்டுமென்பதுபற்றி , இது சொல்வன்மையின் பின் வைக்கப்பட்டது.
துணை நலம் ஆக்கம் தரூஉம்; வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்.
குறள் எண் 652
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
என்றும் ஒருவுதல் வேண்டும்-புகழொடு
நன்றி பயவா வினை.
குறள் எண் 653
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
ஓஒதல் வேண்டும், ஔத மாழ்கும் செய்வினை-
ஆஅதும்!ஒ என்னுமவர்.
குறள் எண் 654
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
இடுக்கண் படினும், இளிவந்த செய்யார்-
நடுக்கு அற்ற காட்சியவர்.
குறள் எண் 655
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
எற்று! என்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்,
மற்று அன்ன செய்யாமை நன்று.
குறள் எண் 656
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும், செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
குறள் எண் 657
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர்
கழி நல்குரவே தலை.
குறள் எண் 658
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும், பீழை தரும்.
குறள் எண் 659
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
அழக் கொண்ட எல்லாம் அழப் போம்; இழப்பினும்,
பிற்பயக்கும், நற்பாலவை.
குறள் எண் 660
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 66. வினைத்தூய்மை
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்-பசு மண்
கலத்துள் நீர் பெய்து, இரீஇயற்று.
குறள் எண் 661
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
அஃதாவது, தூயவினை செய்வானுக்கு வேண்டிய மனத்திண்மை. அதிகார முறையும் இதனால் விளங்கும். திண்- திண்பு-திட்பு-திட்பம். திண்மை திணுக்கத்தால் (செறிவால்) ஏற்படும் உறுதி.
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்;
மற்றைய எல்லாம் பிற.
குறள் எண் 662
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ் இரண்டின்
ஆறு என்பர்-ஆய்ந்தவர் கோள்.
குறள் எண் 663
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின்,
எற்றா விழுமம் தரும்.
குறள் எண் 664
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரிய ஆம்,
சொல்லிய வண்ணம் செயல்.
குறள் எண் 665
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம், வேந்தன்கண்
ஊறு எய்தி, உள்ளப்படும்.
குறள் எண் 666
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
எண்ணிய எண்ணியாங்கு எய்துப-எண்ணியார்
திண்ணியர் ஆகப்பெறின்.
குறள் எண் 667
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-உருள் பெருந் தேர்க்கு
அச்சு ஆணி அன்னார் உடைத்து.
குறள் எண் 668
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
கலங்காது கண்ட வினைக்கண், துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
குறள் எண் 669
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
துன்பம் உறவரினும் செய்க, துணிவு ஆற்றி-
இன்பம் பயக்கும் வினை.
குறள் எண் 670
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 67. வினைத்திட்பம்
எனைத் திட்பம் எய்தியக்கண்ணும், வினைத் திட்பம்
வேண்டாரை வேண்டாது, உலகு.
குறள் எண் 671
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
அஃதாவது, வினைத்திண்மையுடைய அமைச்சன் வினை செய்யும் வகை. அதிகார முறையும் இதனால் விளங்கும்.
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்; அத் துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
குறள் எண் 672
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
தூங்குக, தூங்கிச் செயற்பால; தூங்கற்க,
தூங்காது செய்யும் வினை.
குறள் எண் 673
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே; ஒல்லாக்கால்,
செல்லும் வாய் நோக்கிச் செயல்.
குறள் எண் 674
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
வினை, பகை என்று இரண்டின் எச்சம், நினையுங்கால்,
தீ எச்சம் போலத் தெறும்.
குறள் எண் 675
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்.
குறள் எண் 676
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
முடிவும், இடையூறும், முற்றியாங்கு எய்தும்
படுபயனும், பார்த்துச் செயல்.
குறள் எண் 677
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
செய்வினை செய்வான் செயல்முறை, அவ் வினை
உள் அறிவான் உள்ளம் கொளல்.
குறள் எண் 678
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
வினையால் வினை ஆக்கிக் கோடல்-நனை கவுள்
யானையால் யானை யாத்தற்று.
குறள் எண் 679
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே-
ஒட்டாரை ஒட்டிக்கொளல்.
குறள் எண் 680
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 68. வினைசெயல்வகை
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி, குறை பெறின்,
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
குறள் எண் 681
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
அஃதாவது அரசரைப் பொருத்தலும் பிரித்தலும் பேணலும் பற்றி வேற்றரசரிடம் அரசரும் அமைச்சரும் முனிவரும் புலவரும் சென்று கூறம் செய்தி. அமைச்சர் செல்வதே பெரும்பான்மை. புலவர் சென்றதற்கு, ஓளவையார் அதிகமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதை எடுத்துக் காட்டாகக்கொள்க.
தூது என்னும் சொல் தூதுச் செய்தியையும் அதனைச் சொல்வாரையுங் குறிக்கும். வகுத்துரைப்பார், வழியுரைப்பார் எனத்தூதர் இருவகையர். வேற்றரசன் வினாக்கட் கெல்லாம் விடையிறுக்கும் அறிவாற்றலும் உரிமையும் பெற்றவர் வகுத்துரைப்பார்; அவ்வாற்றலின்றிச் சொல்லிவிடுத்த செய்தியை மட்டுஞ் சொல்பவர் வழியுரைப்பார்.
பிரித்தல் பொருத்தல் பேணல் முதலிய சூழ்ச்சிவன்மையும், அவற்றிற்கேற்ற சொல்வன்மையும் உடைய அமைச்சர்க்கும், அவர் போன்ற பிறருக்கும், தூதுரைத்தல் பொதுவினையாதலின், இது அமைச்சர்க்குரிய வினைசெயல் வகையின் பின் வைக்கப்பட்டது.
காதல் வாழ்க்கையில், தலைவனுந் தலைவியும் ஒருவர்க் கொருவர் தூது விடுப்பது, இன்பத்துப்பாற் கன்றிப் பொருட்பாற் குரியதன்றென அறிக.
அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம்
பண்பு உடைமை,- தூது உரைப்பான் பண்பு.
குறள் எண் 682
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை-தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று.
குறள் எண் 683
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
நூலாருள் நூல் வல்லன் ஆகுதல்-வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு.
குறள் எண் 684
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி, இம் மூன்றன்
செறிவு உடையான் செல்க, வினைக்கு.
குறள் எண் 685
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி,
நன்றி பயப்பது ஆம்-தூது.
குறள் எண் 686
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
கற்று, கண் அஞ்சான், செலச் சொல்லி, காலத்தால்
தக்கது அறிவது ஆம்-தூது.
குறள் எண் 687
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
கடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து,
எண்ணி, உரைப்பான் தலை.
குறள் எண் 688
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
தூய்மை, துணைமை, துணிவு உடைமை, இம் மூன்றின்
வாய்மை-வழி உரைப்பான் பண்பு.
குறள் எண் 689
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்-வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன்.
குறள் எண் 690
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 69. தூது
இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு
உறுதி பயப்பது ஆம்-தூது.
குறள் எண் 691
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
அஃதாவது, அமைச்சர், குருக்கள் , படைத்தலைவர், தூதர், ஒற்றர் ஆகிய ஐம்பெருங் குழுவினர் அரசனையடுத்து ஒழுகும் முறை. முந்தின அதிகார முதற்குறளில் 'வேந்தவாம் பண்புடைமை 'யென்று குறிக்கப்பட்டது இதுவேயாதலின், இது தூதின்பின் வைக்கப்பட்டது.
அகலாது, அணுகாது, தீக் காய்வார் போல்க-
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்.
குறள் எண் 692
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
மன்னர் விழைப விழையாமை, மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்.
குறள் எண் 693
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
போற்றின் அரியவை போற்றல்-கடுத்தபின்,
தேற்றுதல் யார்க்கும் அரிது.
குறள் எண் 694
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
செவிச் சொல்லும், சேர்ந்த நகையும், அவித்து ஒழுகல்-
ஆன்ற பெரியார் அகத்து.
குறள் எண் 695
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
எப் பொருளும் ஓரார், தொடரார், மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க, மறை.
குறள் எண் 696
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
குறிப்பு அறிந்து, காலம் கருதி, வெறுப்பு இல
வேண்டுப, வேட்பச் சொலல்.
குறள் எண் 697
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
வேட்பன சொல்லி, வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும், சொல்லா விடல்.
குறள் எண் 698
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
இளையர், இன முறையர் என்று இகழார், நின்ற
ஔதயொடு ஒழுகப்படும்.
குறள் எண் 699
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
கொளப்பட்டேம் என்று எண்ணி, கொள்ளாத செய்யார்-
துளக்கு அற்ற காட்சியவர்.
குறள் எண் 700
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்
பழையம் எனக் கருதி, பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
குறள் எண் 701
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
அஃதாவது, அமைச்சர் முதலியோர் அரசரது உள்ளக்குறிப்பை அவர் முகக் குறிப்பால் அறிந்துகொள்ளுதல், இது மன்னரைச் சேர்ந்தொழுகற்கு இன்றியமையாத தாதலின், அதன் பின் வைக்கப்பட்டது. இதனால், அமைச்சர் முகக்குறிநூலும் (Physiognomy) கற்றிருக்கவேண்டுமென்பது குறிப்பாய்ப் பெறப்படும்.
கூறாமை நோக்கி, குறிப்பு அறிவான், எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி.
குறள் எண் 702
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்.
குறள் எண் 703
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
குறிப்பின் குறிப்பு உணர்வாரை, உறுப்பினுள்
யாது கொடுத்தும், கொளல்.
குறள் எண் 704
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு, ஏனை
உறுப்பு ஓரனையரால், வேறு.
குறள் எண் 705
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
குறிப்பின் குறிப்பு உணராஆயின், உறுப்பினுள்
என்ன பயத்தவோ, கண்.
குறள் எண் 706
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம்
கடுத்தது காட்டும், முகம்.
குறள் எண் 707
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ -உவப்பினும்
காயினும், தான் முந்துறும்.
குறள் எண் 708
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
முகம் நோக்கி நிற்க அமையும்-அகம் நோக்கி,
உற்றது உணர்வார்ப் பெறின்.
குறள் எண் 709
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும்-கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
குறள் எண் 710
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 71. குறிப்பறிதல்
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல், காணுங்கால்,
கண் அல்லது, இல்லை பிற.
குறள் எண் 711
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
அஃதாவது, அமைச்சரும் தூதரும் அரசனோடிருக்கும் அவையின் இயல்பை அறிதல். தம் அரசனோடுள்ள அவையை ஏற்கனவே அறிநதிருப்பராதலால், இது சிறப்பாக வேற்றரசரின் அவையியல்பை அறிதலைப் பற்றியதாம்.
அவையினர் ஒற்றரல்லாத ஐம்பெருங் குழுவினரும் புலவரும் நண்பருமாவர். நல்லவை அல்லது நிறையவையென்றும், புல்லவை அல்லது குறையவை யென்றும், அவை இருதிறப்படும். அவற்றுள் முன்னது பேரறிஞர் கூட்டமும் பின்னது சிற்றறிஞர் கூட்டமுமாகும் . நல்லவைக்கு வல்லமை, நுண்ணவை என்றும் பெயர். இனி, சொல்வரொடு ஒப்புநோக்கி உயர்வு, ஒப்பு, தாழ்வு எனவும் அவை முத்திறப்படும்.
வேற்றரசனிடத்தில் ஒன்றைச் சொல்வோர்க்கு அவன் குறிப்பறிதலேயன்றி அவன் அவையின் இயல்பை அறிதலும் வேண்டுதலின், இது குறிப்பறிதலின் பின் வைக்கப்பட்டது.
அவை அறிந்து, ஆராய்ந்து, சொல்லுக-சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்.
குறள் எண் 712
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
இடை தெரிந்து, நன்கு உணர்ந்து, சொல்லுக- சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர்.
குறள் எண் 713
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார்; வல்லதூஉம் இல்.
குறள் எண் 714
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
ஔதயார்முன் ஔளியர் ஆதல்! வௌதயார்முன்
வான் சுதை வண்ணம் கொளல்.
குறள் எண் 715
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
நன்று என்றவற்றுள்ளும் நன்றே-முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
குறள் எண் 716
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
ஆற்றின் நிலைதளர்ந்தற்றே-வியன் புலம்
ஏற்று, உணர்வார்முன்னர் இழுக்கு.
குறள் எண் 717
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
கற்று அறிந்தார் கல்வி விளங்கும்-கசடு அறச்
சொல் தெரிதல் வல்லார் அகத்து.
குறள் எண் 718
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
உணர்வது உடையார்முன் சொல்லல்-வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்தற்று.
குறள் எண் 719
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க-நல் அவையுள்
நன்கு செலச் சொல்லுவார்.
குறள் எண் 720
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 72. அவையறிதல்
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால்-தம் கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்.
குறள் எண் 721
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
அஃதாவது, அவையின் திறத்தையறிந்து அதற்கேற்ப ஒன்றைச் சொல்லுங்கால், அதற்கு (அவ்வவைக்கு) அஞ்சாமை. அஞ்சினாற் சொற்பொழிவாற்றல் இயலாதாதலின், அதை விலக்குதற்கு இது அவையறிதலின் பின் வைக்கப்பட்டது.
வகை அறிந்து, வல் அவை, வாய்சோரார்-சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்.
குறள் எண் 722
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்றார்முன்
கற்ற செலச் சொல்லுவார்.
குறள் எண் 723
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர்
அவையகத்து அஞ்சாதவர்.
குறள் எண் 724
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
கற்றார்முன் கற்ற செலச் சொல்லி, தாம் கற்ற,
மிக்காருள், மிக்க கொளல்.
குறள் எண் 725
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
ஆற்றின், அளவு அறிந்து கற்க-அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தற்பொருட்டு.
குறள் எண் 726
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
வாளொடு என், வன்கண்ணர் அல்லார்க்கு?-நூலொடு என்,
நுண் அவை அஞ்சுபவர்க்கு.
குறள் எண் 727
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
பகையகத்துப் பேடி கை ஔ வாள்-அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்.
குறள் எண் 728
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
பல்லவை கற்றும், பயம் இலரே-நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்.
குறள் எண் 729
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
கல்லாதவரின் கடை என்ப- கற்று அறிந்தும்,
நல்லார் அவை அஞ்சுவார்'.
குறள் எண் 730
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 73. அவையஞ்சாமை
உளர் எனினும், இல்லாரொடு ஒப்பர்-களன் அஞ்சி,
கற்ற செலச் சொல்லாதார்.
குறள் எண் 731
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
அஃதாவது, அரசனும் அமைச்சருள்ளிட்ட குடிகளும் இருந்து வாழ்வதற்கு இன்றியமையாத ஆள்நிலத்தைப்பற்றிக் கூறுவது.
தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச்
செல்வரும், சேர்வது- நாடு.
குறள் எண் 732
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி, அருங் கேட்டால்,
ஆற்ற விளைவது-நாடு.
குறள் எண் 733
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது-நாடு.
குறள் எண் 734
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும்,
சேராது இயல்வது-நாடு.
குறள் எண் 735
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
பல் குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது-நாடு.
குறள் எண் 736
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
கேடு அறியா, கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை.
குறள் எண் 737
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
இரு புனலும், வாய்ந்த மலையும், வரு புனலும்,
வல் அரணும்-நாட்டிற்கு உறுப்பு.
குறள் எண் 738
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்-
அணி என்ப, நாட்டிற்கு-இவ் ஐந்து.
குறள் எண் 739
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
நாடு என்ப, நாடா வளத்தன; நாடு அல்ல,
நாட, வளம் தரும் நாடு.
குறள் எண் 740
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 74. நாடு
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே-
வேந்து அமைவு இல்லாத நாடு.
குறள் எண் 741
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
அஃதாவது, பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிகப்படாவாறும், அழிக்கப்படாவாறும், நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. இது நாட்டின் சிறந்த வுறுப்புக்களுள் ஒன்றாதலாலும், 'வல்லரணும் நாட்டிற் குறுப்பு' என்று முந்தின அதிகாரத்தில் தோற்றுவாய் செய்யப்பட்டதினாலும், நாட்டின் பின் வைக்கப்பட்டது.
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள்; அஞ்சித் தற்
போற்றுபவர்க்கும் பொருள்.
குறள் எண் 742
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
மணி நீரும், மண்ணும், மலையும், அணி நிழல்
காடும், உடையது-அரண்.
குறள் எண் 743
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
உயர்வு, அகலம், திண்மை, அருமை, இந் நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல்.
குறள் எண் 744
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி, உறு பகை
ஊக்கம் அழிப்பது-அரண்.
குறள் எண் 745
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
கொளற்கு அரிதாய், கொண்ட கூழ்த்து ஆகி, அகத்தார்
நிலைக்கு எளிது ஆம் நீரது-அரண்.
குறள் எண் 746
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
எல்லாப் பொருளும் உடைத்தாய், இடத்து உதவும்
நல் ஆள் உடையது-அரண்.
குறள் எண் 747
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
முற்றியும், முற்றாது எறிந்தும், அறைப்படுத்தும்,
பற்றற்கு அரியது-அரண்.
குறள் எண் 748
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
முற்று ஆற்றி முற்றியவரையும், பற்று ஆற்றி,
பற்றியார் வெல்வது-அரண்.
குறள் எண் 749
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
முனை முகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து
வீறு எய்தி மாண்டது-அரண்.
குறள் எண் 750
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 75. அரண்
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும், வினை மாட்சி
இல்லார்கண் இல்லது-அரண்.
குறள் எண் 751
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
அஃதாவது, அரசன் அமைச்சரோடு கூடித் தன் நாட்டை அரணாற் காத்து, தனக்கும் தன் ஆட்சிக்கும் இன்றியமையாத பொருளைத் தன் குடிகளிடத்தும் பகைவரிடத்தும் நண்பரிடத்தும் தேடும் வழிகள். இவற்றுள், அரசன் பாதுகாப்பின் கீழ்க் குடிகள் பல்வேறு தொழில் செய்து பொருளீட்டுதலும் அடங்கும்.
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது, இல்லை பொருள்.
குறள் எண் 752
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை
எல்லாரும் செய்வர், சிறப்பு.
குறள் எண் 753
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
பொருள் என்னும் பொய்யா விளக்கம், இருள் அறுக்கும்-
எண்ணிய தேயத்துச் சென்று.
குறள் எண் 754
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
அறன் ஈனும்; இன்பமும் ஈனும்;-திறன் அறிந்து,
தீது இன்றி வந்த பொருள்.
குறள் எண் 755
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
அருளொடும், அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்
புல்லார், புரள விடல்.
குறள் எண் 756
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
உறு பொருளும், உல்கு பொருளும், தன் ஒன்னார்த்
தெறு பொருளும்,-வேந்தன் பொருள்.
குறள் எண் 757
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும்
செல்வச் செவிலியால், உண்டு.
குறள் எண் 758
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
குன்று ஏறி, யானைப் போர் கண்டற்றால்-தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை.
குறள் எண் 759
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
செய்க பொருளை! செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்.
குறள் எண் 760
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 76. பொருள்செயல் வகை
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, எண் பொருள்-
ஏனை இரண்டும் ஒருங்கு.
குறள் எண் 761
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
அஃதாவது, அரசன் நல்வழியில் ஈட்டிய பொருளைக்கொண்டு அமைப்பதும், அவனாட்சிக்கும் பகைவரினின்று நாட்டைக் காத்தற்கும் இன்றியமையாததுமான, படையின் சிறப்பு.
உறுப்பு அமைந்து, ஊறு அஞ்சா, வெல் படை-வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
குறள் எண் 762
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண், தொலைவு இடத்து,
தொல் படைக்கு அல்லால், அரிது.
குறள் எண் 763
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
ஒலித்தக்கால் என் ஆம், உவரி எலிப்பகை?
நாகம் உயிர்ப்ப, கெடும்.
குறள் எண் 764
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
அழிவு இன்று, அறைபோகாது ஆகி, வழிவந்த
வன்கணதுவே-படை.
குறள் எண் 765
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
கூற்று உடன்று மேல்வரினும், கூடி, எதிர் நிற்கும்
ஆற்றலதுவே-படை.
குறள் எண் 766
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
மறம், மானம், மாண்ட வழிச் செலவு, தேற்றம்,
என நான்கே ஏமம், படைக்கு.
குறள் எண் 767
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
தார் தாங்கிச் செல்வது தானை-தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து.
குறள் எண் 768
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
அடல்தகையும், ஆற்றலும், இல் எனினும், தானை
படைத் தகையான் பாடு பெறும்.
குறள் எண் 769
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும்,
இல்லாயின் வெல்லும், படை.
குறள் எண் 770
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 77. படைமாட்சி
நிலை மக்கள் சால உடைத்துஎனினும், தானை
தலைமக்கள் இல்வழி இல்.
குறள் எண் 771
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
அஃதாவது, படையின் மறமிகுதி. அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
என்னை முன் நில்லன்மின்-தெவ்விர்! பலர், என்னை
முன் நின்று கல் நின்றவர்.
குறள் எண் 772
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
கான முயல் எய்த அம்பினில், யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.
குறள் எண் 773
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
பேர் ஆண்மை என்ப, தறுகண்; ஒன்று உற்றக்கால்,
ஊராண்மை மற்று அதன் எஃகு.
குறள் எண் 774
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா, நகும்.
குறள் எண் 775
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
விழித்த கண் வேல் கொண்டு எறிய, அழித்து இமைப்பின்,
ஓட்டு அன்றோ, வன்கணவர்க்கு.
குறள் எண் 776
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும், தன் நாளை எடுத்து.
குறள் எண் 777
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
சுழலும் இசை வேண்டி, வேண்டா உயிரார்
கழல் யாப்புக் காரிகை நீர்த்து.
குறள் எண் 778
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
உறின், உயிர் அஞ்சா மறவர், இறைவன்
செறினும், சீர் குன்றல் இலர்.
குறள் எண் 779
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே,
பிழைத்தது ஒறுக்கிற்பவர்.
குறள் எண் 780
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 78. படைச்செருக்கு
புரந்தார் கண் நீர் மல்கச் சாகிற்பின், சாக்காடு
இரந்து கோள்-தக்கது உடைத்து.
குறள் எண் 781
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
அஃதாவது, படைபோல அரசனுக்கு வினையிடத்துதவும் நட்பரசர் துணையும், குடிகட்குத் துன்பக்காலத்தில் உதவும் நண்பர் உறவும்.
ஆசிரியர் இதை நட்பும் பகையும் என்றும் அவைபோன்ற குணங்களும் செயல்களும் நிலைமைகளும் என்றும் இரண்டாக வகுத்துக்கொண்டு: வௌதப்படையாகவுள்ள முன்னதை ஐயதிகாரங்களாலும் குறிப்பாகவுள்ள பின்னதைப் பன்னீரதிகாரங்களாலுங் கூறுகின்றார்.
வௌதப்படையான முற்பகுதியில் முதலதிகாரமான நட்பு என்பது இவ்வதிகாரம்.
செயற்கு அரிய யா உள, நட்பின்?-அதுபோல்
வினைக்கு அரிய யா உள, காப்பு.
குறள் எண் 782
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
நிறை நீர, நீரவர் கேண்மை, பிறை; மதிப்
பின் நீர, பேதையார் நட்பு.
குறள் எண் 783
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
நவில்தொறும் நூல் நயம் போலும்-பயில்தொறும்,
பண்பு உடையாளர் தொடர்பு.
குறள் எண் 784
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
நகுதற்பொருட்டு அன்று, நட்டல்; மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு.
குறள் எண் 785
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
புணர்ச்சி, பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பு ஆம் கிழமை தரும்.
குறள் எண் 786
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
முகம் நக, நட்பது நட்பு அன்று; நெஞ்சத்து
அகம் நக, நட்பது-நட்பு.
குறள் எண் 787
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
அழிவினவை நீக்கி, ஆறு உய்த்து, அழிவின்கண்
அல்லல் உழப்பது ஆம்-நட்பு.
குறள் எண் 788
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே
இடுக்கண் களைவது ஆம்-நட்பு.
குறள் எண் 789
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
நட்பிற்கு வீற்றிருக்கை யாது? எனின், கொட்பு இன்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
குறள் எண் 790
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 79. நட்பு
இனையர், இவர் எமக்கு; இன்னம் யாம் என்று
புனையினும், புல்லென்னும்-நட்பு.
குறள் எண் 791
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
அஃதாவது, நட்பிற்குத் தகுந்தவரை ஆராய்ந்தறிதல், மணவுறவு போன்று நட்புறவும் வாழ்நாள் முழுதும் நீடிப்பதாகையாலும், மெய்ந்நட்பால் ஆக்கமும் தீநட்பால் அழிவும் நேர்வதாலும், மலர்ந்த முகத்தையும் இனிய சொல்லையுமே சான்றாகக் கொண்டு எவரையும் நம்பிவிடாமல், எல்லா வகையாலும் ஆராய்ந்து பார்த்து உண்மையான அன்பரையே நண்பராகக் கொள்ளவேண்டுமென்று கூறியவாறாம். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
நாடாது நட்டலின் கேடு இல்லை; நட்டபின்,
வீடு இல்லை, நட்பு ஆள்பவர்க்கு.
குறள் எண் 792
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,
தான் சாம் துயரம் தரும்.
குறள் எண் 793
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
குணனும், குடிமையும், குற்றமும், குன்றா
இனனும், அறிந்து யாக்க நட்பு.
குறள் எண் 794
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
குடிப் பிறந்து, தன்கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும், நட்பு.
குறள் எண் 795
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
அழச் சொல்லி, அல்லது இடித்து, வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்.
குறள் எண் 796
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
கேட்டினும் உண்டு, ஓர் உறுதி-கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல்.
குறள் எண் 797
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
குறள் எண் 798
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
உள்ளற்க, உள்ளம் சிறுகுவ! கொள்ளற்க,
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
குறள் எண் 799
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
கெடும் காலைக் கைவிடுவார் கேண்மை, அடும் காலை
உள்ளினும், உள்ளம் சுடும்.
குறள் எண் 800
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 80. நட்பாராய்தல்
மருவுக, மாசு அற்றார் கேண்மை! ஒன்று ஈத்தும்
ஒருவுக, ஒப்பு இலார் நட்பு.
குறள் எண் 801
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
அஃதாவது, பழைமையான நட்பின் சிறப்புரிமை. அது நட்டாரின் பழமை பற்றி அவர் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள்ளுதல். இடம் நோக்கிக் குறிப்பாற்றல் கொண்டு தலைப்புக்குறுகி நின்றது. குற்றமே யில்லா முற்றுந் தூயார் உலகிலொருவரும் இல்லாமையானும், பொறையுடைமையும் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய அறமாதலானும், நீண்ட காலமாகப் பழகிய நண்பர் அப்பழக்கம் பற்றி ஏதேனும் பொறுக்கக்கூடிய தவறு செய்யின் அதை மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்வதும் நண்பர் கடமையென்பதை அறிவித்தற்கு, இது நட்பாராய்தலின் பின் வைக்கப்பட்டது.
பழமை எனப்படுவது யாது?ஒ எனின், யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
குறள் எண் 802
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்.
குறள் எண் 803
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
பழகிய நட்பு எவன் செய்யும்-கெழுதகைமை
செய்தாங்கு அமையாக்கடை.
குறள் எண் 804
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
விழைதகையான் வேண்டியிருப்பர்-கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்.
குறள் எண் 805
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
பேதைமை ஒன்றோ, பெருங்கிழமை என்று உணர்க-
நோ தக்க நட்டார் செயின்.
குறள் எண் 806
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
எல்லைக்கண் நின்றார் துறவார்-தொலைவிடத்தும்,
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
குறள் எண் 807
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
அழிவந்த செய்யினும், அன்பு அறார்-அன்பின்
வழிவந்த கேண்மையவர்.
குறள் எண் 808
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள், இழுக்கம் நட்டார் செயின்.
குறள் எண் 809
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
கெடாஅர், வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும், உலகு.
குறள் எண் 810
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 81. பழைமை
விழையார் விழையப்படுப-பழையார்கண்
பண்பின் தலைப்பிரியாதார்.
குறள் எண் 811
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
அஃதாவது, பொறுக்கப்படாத குற்றமுள்ளதாயும் எப்போதும் தீமையே செய்வதாயுமுள்ள தீயோர் நட்பு. நட்பாராய்தலில் ' பேதையார் கேண்மை ' என்றும், ' அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு ' என்றும், ' கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை ' என்றும், ' ஒப்பிலார் நட்பு ' என்றும், பொதுப்படவும் சுருக்கமாகவுஞ் சொல்லிய தீநட்பைச் சிறப்பாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் கூறவேண்டியிருத்தலின், இது பொறுக்கப்படும் குற்றமுள்ள பழமையின் பின் வைக்கப்பட்டது.
பருகுவார் போலினும், பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
குறள் எண் 812
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
உறின் நட்டு, அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும், இழப்பினும், என்.
குறள் எண் 813
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது
கொள்வாரும், கள்வரும் நேர்.
குறள் எண் 814
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின், தனிமை தலை.
குறள் எண் 815
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
செய்து ஏமம் சாரா, சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
குறள் எண் 816
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
பேதை பெருங் கெழீஇ நட்பின், அறிவு உடையார்
ஏதின்மை கோடி உறும்.
குறள் எண் 817
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
நகை வகையர் ஆகிய நட்பின், பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும்.
குறள் எண் 818
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார், சோரவிடல்.
குறள் எண் 819
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
கனவினும் இன்னாது மன்னோ-வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு.
குறள் எண் 820
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 82. தீ நட்பு
எனைத்தும் குறுகுதல் ஓம்பல்-மனைக் கெழீஇ,
மன்றில் பழிப்பார் தொடர்பு.
குறள் எண் 821
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
அஃதாவது, உண்மையிற் பகைவராயிருந்து தமக்கேற்றகாலம் வரும்வரை நண்பர்போல் நடிக்கும் பொய்ந்நட்பு. இது புறத்திற்கூடியிருந்தும் அகத்திற் கூடாதிருத்தலால் கூடாநட்பெனப்பட்டது. இது தீநட்பின் மற்றொரு வகையாதலால் அதன்பின் வைக்கப்பட்டது.
சீர் இடம் காணின், எறிதற்குப் பட்டடை-
நேரா நிரந்தவர் நட்பு.
குறள் எண் 822
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை, மகளிர்
மனம் போல, வேறுபடும்.
குறள் எண் 823
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
பல நல்ல கற்றக்கடைத்தும், மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.
குறள் எண் 824
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும்.
குறள் எண் 825
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
மனத்தின் அமையாதவரை, எனைத்து ஒன்றும்,
சொல்லினான் தேறற்பாற்று அன்று.
குறள் எண் 826
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்.
குறள் எண் 827
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க-வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்.
குறள் எண் 828
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார்
அழுத கண்ணீரும், அனைத்து.
குறள் எண் 829
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
மிகச் செய்து, தம் எள்ளுவாரை நகச் செய்து,
நட்பினுள் சாப் புல்லற்பாற்று.
குறள் எண் 830
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 83. கூடாநட்பு
பகை நட்பு ஆம் காலம் வருங்கால், முகம் நட்டு,
அகம் நட்பு ஒரீஇவிடல்.
குறள் எண் 831
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
இனி, நட்பும் அதன் மறுதலையாகிய பகையும் அவை போன்ற குணங்களும் செயல்களும் நிலைமைகளும் பற்றிப் பன்னீரதிகாரங்களாற் கூறத்தொடங்கி, முதற்கண் தற்பகையாகிய பேதைமையைப் பற்றிக் கூறுகின்றார். பேதைமை பேதையின் தன்மை. பேதை நல்லதை விட்டுத் தீயதைத் தெரிந்துகொள்பவனும் அறிவித்தாலும் அறியாதவனுமாகிய அறிவிலி.
"பூத்தாலுங் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார் தாமும் நனியுளர் பாத்தி
விதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்
குரைத்தாலுந் தோன்றா துணர்வு." ( பழமொழி. 63)
பேதைமை என்பது ஒன்று; யாது?ஒ எனின், ஏதம் கொண்டு,
ஊதியம் போகவிடல்.
குறள் எண் 832
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை
கை அல்லதன்கண் செயல்.
குறள் எண் 833
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
நாணாமை, நாடாமை, நார் இன்மை, யாது ஒன்றும்
பேணாமை,-பேதை தொழில்.
குறள் எண் 834
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
ஓதி உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்.
குறள் எண் 835
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
ஒருமைச் செயல் ஆற்றும், பேதை-எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு.
குறள் எண் 836
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
பொய்படும் ஒன்றோ; புனை பூணும்;-கை அறியாப்
பேதை வினை மேற்கொளின்.
குறள் எண் 837
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
ஏதிலார் ஆர, தமர் பசிப்பர்-பேதை
பெருஞ் செல்வம் உற்றக்கடை.
குறள் எண் 838
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
மையல் ஒருவன் களித்தற்றால்-பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின்.
குறள் எண் 839
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
பெரிது இனிது, பேதையார் கேண்மை-பிரிவின்கண்
பீழை தருவது ஒன்று இல்.
குறள் எண் 840
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 84. பேதைமை
கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால்-சான்றோர்
குழா அத்துப் பேதை புகல்.
குறள் எண் 841
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
அஃதாவது, சிற்றறிவுடையராயிருந்து அதை ஆளுந்தன்மை. ஆளுதல் பயன்படுத்துதல். பேதமைபோல இதுஉம் ஒரு தற்பகைக் குணமாதலின், பேதமையின் பின் வைக்கப்பட்டது.
அறிவு இன்மை, இன்மையுள் இன்மை, பிறிது இன்மை
இன்மையா வையாது, உலகு.
குறள் எண் 842
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல், பிறிது யாதும்
இல்லை, பெறுவான் தவம்.
குறள் எண் 843
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
குறள் எண் 844
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
வெண்மை எனப்படுவது யாது? எனின், ஒண்மை
உடையம் யாம்!ஒ என்னும் செருக்கு.
குறள் எண் 845
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடு அற
வல்லதூஉம், ஐயம் தரும்.
குறள் எண் 846
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
அற்றம் மறைத்தலோ புல்லறிவு-தம்வயின்
குற்றம் மறையாவழி.
குறள் எண் 847
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
அரு மறை சோரும் அறிவு இலான் செய்யும்,
பெரு மிறை, தானே தனக்கு.
குறள் எண் 848
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய்.
குறள் எண் 849
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
காணாதாற் காட்டுவான் தான் காணான்; காணாதான்
கண்டான் ஆம், தான் கண்ட ஆறு.
குறள் எண் 850
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 85. புல்லறிவாண்மை
உலகத்தார், உண்டுஒ என்பது இல்ஒ என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்.
குறள் எண் 851
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
அஃதாவது, இருவர் ஒரு பொருள் பற்றி அல்லது அன்பின்மை கரணியமாகத் தம்முட் பொருது அல்லது போராடித் தோற்றற்கும் அழிக்கும் ஏதுவான மாறுபாடு. பேதைமையும் புல்லறிவாண்மையும் ஆகிய தற்பகைக் குணங்களின் பின் மற்பகைக் குணத்தைக் கூறூகின்றாராதலின், இது புல்லறிவாண்மையின்பின் வைக்கப்பட்டது. மன்-மற்ற. மற்பகை பிறரைப் பகைத்தல்: "தன்னுயிர் போல் மன்னுயிரையும் நினைக்க வேண்டும்" என்னும் பழமொழியை நோக்குக.
மக்களெல்லாரும் ஒற்றுமையாய் அன்புற்றும் இன்புற்றும் வாழவேண்டுமென்பது ஆசிரியர் நோக்கமாதலின், அதற்குத் தடையாயுள்ள பகைமைக் குணத்தை இங்கு இகல் என்றது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் பொதுவான மாறுபாட்டுக் குணத்தை என அறிக. ஒருவன் இன்புற்று வாழ்தற்கு இன்றியமையாத பொருளை அமைதியாய் ஈட்டுதற்கு இகல் தடையாயிருத்தலின்; இது இப்பொருட்பாலில் விலக்கப்பட்டது.
இகல் என்ப-எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்புஇன்மை பாரிக்கும் நோய்.
குறள் எண் 852
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
பகல் கருதிப் பற்றா செயினும், இகல் கருதி,
இன்னா செய்யாமை தலை.
குறள் எண் 853
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின், தவல் இல்லாத்
தா இல் விளக்கம் தரும்.
குறள் எண் 854
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இன்பத்துள் இன்பம் பயக்கும்-இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
குறள் எண் 855
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை, யாரே,
மிகல் ஊக்கும் தன்மையவர்.
குறள் எண் 856
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
குறள் எண் 857
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
மிகல் மேவல் மெய்ப் பொருள் காணார்-இகல் மேவல்
இன்னா அறிவினவர்.
குறள் எண் 858
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம்; அதனை
மிகல் ஊக்கின், ஊக்குமாம் கேடு.
குறள் எண் 859
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகல்காணான், ஆக்கம் வருங்கால்; அதனை
மிகல் காணும், கேடு தரற்கு.
குறள் எண் 860
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 86. இகல்
இகலான் ஆம், இன்னாத எல்லாம்; நகலான் ஆம்,
நல் நயம் என்னும் செருக்கு.
குறள் எண் 861
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
அஃதாவது, அறிவின்மை , சூழ்ந்து செப்பாமை, சுற்றந்தழுவாமை, துணையின்மை முதலிய குற்றங்குறைகளாற் பகையைச் சிறப்பித்தல், அஃதாவது மிகுதிப்படுத்தல். சிறப்பென்பது இங்கு மிகுதி. முன்பு பொதுவகையால் விலக்கப்பட்ட இகலை இங்குச் சிறப்புவகையால் ஏவுகின்றாராதலின், இது அதன்பின் வைக்கப்பட்டது.
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக! ஓம்பா,
மெலியார்மேல் மேக, பகை.
குறள் எண் 862
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
அன்பு இலன்; ஆன்ற துணை இலன்; தான் துவ்வான்;-
என் பரியும், ஏதிலான் துப்பு.
குறள் எண் 863
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
அஞ்சும்; அறியான்; அமைவு இலன்; ஈகலான்;-
தஞ்சம் எளியன், பகைக்கு.
குறள் எண் 864
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
நீங்கான் வெகுளி; நிறை இலன்;- எஞ்ஞான்றும்,
யாங்கணும், யார்க்கும், எளிது.
குறள் எண் 865
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
வழி நோக்கான்; வாய்ப்பன செய்யான்; பழி நோக்கான்;
பண்பு இலன்;- பற்றார்க்கு இனிது.
குறள் எண் 866
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
காணாச் சினத்தான், கழி பெருங் காமத்தான்,-
பேணாமை பேணப்படும்.
குறள் எண் 867
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற- அடுத்து இருந்து,
மாணாத செய்வான் பகை.
குறள் எண் 868
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
குணன் இலனாய், குற்றம் பலஆயின், மாற்றார்க்கு,
இனன் இலன் ஆம்; ஏமாப்பு உடைத்து.
குறள் எண் 869
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
செறுவார்க்குச் சேண், இகவா, இன்பம்-அறிவு இலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
குறள் எண் 870
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 87. பகைமாட்சி
கல்லான் வெகுளும் சிறு பொருள், எஞ்ஞான்றும்,
ஒல்லானை ஒல்லாது, ஔத.
குறள் எண் 871
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
அஃதாவது பகைபற்றிய பல்வேறு கூறுகளையும் ஆராய்ந்தறிதல். அவை பகையின் இயல்பும்., பகைப்படத்தக்கவர் யாரென்பதும், பகைக்கும் நிலைமையும். பகையையும் நட்பாக்குந் திறனும். பகைவரிடத்து நடந்துகொள்ளும் முறையும், பகைகளைய வேண்டிய பருவமும் பிறவுமாம். பகைபற்றி இகலிலும் பகைமாட்சியிலுங் கூறப்படாத பல்வெறு செய்திகளைக் கூறுதலின், இது அவற்றின் பின் வைக்கப்பட்டது.
பகை என்னும் பண்புஇலதனை, ஒருவன்
நகையேயும், வேண்டற்பாற்று அன்று.
குறள் எண் 872
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
வில் ஏர் உழவர் பகை கொளினும், கொள்ளற்க-
சொல் ஏர் உழவர் பகை.
குறள் எண் 873
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
ஏமுற்றவரினும் ஏழை-தமியனாய்ப்
பல்லார் பகை கொள்பவன்.
குறள் எண் 874
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமைக்கண் தங்கிற்று, உலகு.
குறள் எண் 875
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
தன் துணை இன்றால்; பகை இரண்டால்; தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க, அவற்றின் ஒன்று.
குறள் எண் 876
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
தேறினும், தேறாவிடினும், அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
குறள் எண் 877
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
நோவற்க, நொந்தது அறியார்க்கு! மேவற்க,
மென்மை, பகைவரகத்து.
குறள் எண் 878
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
வகை அறிந்து, தற் செய்து, தற் காப்ப, மாயும்-
பகைவர்கண் பட்ட செருக்கு.
குறள் எண் 879
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
இளைதாக முள்மரம் கொல்க- களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து.
குறள் எண் 880
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 88. பகைத்திறந் தெரிதல்
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற-செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார்.
குறள் எண் 881
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
அஃதாவது, அகத்தாரே தன்னலம் நோக்கியும் கலாம் பற்றியும் தம் இனத்தாரைப் புறத்தாரான பகைவர்க்குக் காட்டிக்கொடுத்தல். இதுவும் ஒரு பகைத்திறமாதலின், பகைத்திறந் தெரிதலின் பின் வைக்கப்பட்டது.
நிழல் நீரும் இன்னாத இன்னா-தமர் நீரும்,
இன்னா ஆம், இன்னா செயின்.
குறள் எண் 882
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
வாள்போல் பகைவரை அஞ்சற்க! அஞ்சுக,
கேள்போல் பகைவர் தொடர்பு.
குறள் எண் 883
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
உட்பகை அஞ்சித் தற் காக்க! உலைவு இடத்து,
மட்பகையின் மாணத் தெறும்.
குறள் எண் 884
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
மனம் மாணா உட்பகை தோன்றின், இனம் மாணா
ஏதம் பலவும் தரும்.
குறள் எண் 885
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
உறல் முறையான் உட்பகை தோன்றின், இறல் முறையான்
ஏதம் பலவும் தரும்.
குறள் எண் 886
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
ஒன்றாமை ஒன்றியார்கண் படின், எஞ்ஞான்றும்,
பொன்றாமை ஒன்றல் அரிது.
குறள் எண் 887
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே-
உட்பகை உற்ற குடி.
குறள் எண் 888
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
அரம் பொருத பொன் போல, தேயும் உரம், பொருது-
உட்பகை உற்ற குடி.
குறள் எண் 889
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
எட் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும்,
உட்பகை, உள்ளது ஆம், கேடு.
குறள் எண் 890
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 89. உட்பகை
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள்
பாம்போடு உடன் உறைந்தற்று.
குறள் எண் 891
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
அஃதாவர், அறிவாலும் ஆற்றலாலும் பெரியாரை இகழ்ந்து தவறு செய்யாமை -அறிவாற் பெரியார் வரும் புலவர்; ஆற்றலாற் பெரியார் பேரரையர்; இரண்டிலும் பெரியார் முற்றத் துறந்த முழு முனிவர்.புலவராற்றல் சூழ்ச்சி வலிமை யென்றும், அரையராற்றல் படைவலிமை யென்றும், முனிவராற்றல் தவவலிமை யென்றும், வேறுபாடறிக.பெரியார் பகை பிறர் பகையினும் கொடியதாதலால், அது நேராமற் காத்தல் பிறபகைகளின் பின் வைக்கப்பட்டது.
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை; போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
குறள் எண் 892
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
குறள் எண் 893
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
கெடல்வேண்டின், கேளாது செய்க-அடல் வேண்டின்,
ஆற்றுபவர்கண் இழுக்கு.
குறள் எண் 894
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்-ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
குறள் எண் 895
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்-வெந் துப்பின்
வேந்து செறப்பட்டவர்.
குறள் எண் 896
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
எரியான் சுடப்படினும், உய்வு உண்டாம்; உய்யார்,
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.
குறள் எண் 897
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
வகை மாண்ட வாழ்க்கையும், வான் பொருளும் என் ஆம்-
தகை மாண்ட தக்கார் செறின்.
குறள் எண் 898
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
குன்று அன்னார் குன்ற மதிப்பின், குடியொடு,
நின்றன்னார் மாய்வர், நிலத்து.
குறள் எண் 899
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
ஏந்திய கொள்கையார் சீறின், இடை முரிந்து,
வேந்தனும் வேந்து கெடும்.
குறள் எண் 900
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை
இறந்து அமைந்த சார்புஉடையர் ஆயினும், உய்யார்-
சிறந்து அமைந்த சீரார் செறின்.
குறள் எண் 901
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
அஃதாவது,காமவின்பக் கழிபேராசைபற்றி,தனக்கு அடங்கி நடக்க வேண்டிய தன் மனைவிக்குத் தான் அடங்கி நடத்தல். இதனாற் கடமை தவறுதலும் அறஞ்செய்யாமையும் வீண் செலவுந் தீவினையுஞ் செய்தலும் நேர்தலால்,இது பகையோடொத்ததாகவும் பெரியாரைப் பிழைத்தலின்பின் வைக்கப்பட்டது.சேறல் செல்லுதல்.அஃது இங்கு நடத்தலைக் குறித்தது.
"ஆவதும் பெண்ணாலே,அழிவதும் பெண்ணாலே." என்னும் பழமொழிக்கேற்ப, பெண்டிருள் நல்லமைச்சர் போன்றவரும் தீயமைச்சர் போன்றவரு மிருப்பினும், ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியால், இங்குப் பெண் என்றது தீயமைச்சர் போன்ற பெண்டிரையே என அறிந்துகொள்க.
மனை விழைவார் மாண் பயன் எய்தார்; வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது.
குறள் எண் 902
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக, நாணுத் தரும்.
குறள் எண் 903
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை, எஞ்ஞான்றும்,
நல்லாருள் நாணுத் தரும்.
குறள் எண் 904
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
மனையாளை அஞ்சும் மறுமைஇலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று.
குறள் எண் 905
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
இல்லாளை அஞ்சுவான், அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்,
நல்லார்க்கு நல்ல செயல்.
குறள் எண் 906
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
இமையாரின் வாழினும், பாடு இலரே-இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர்.
குறள் எண் 907
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின், நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
குறள் எண் 908
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
நட்டார் குறை முடியார்; நன்று ஆற்றார்;-நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர்.
குறள் எண் 909
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
அறவினையும், ஆன்ற பொருளும், பிற வினையும்,-
பெண் ஏவல் செய்வார்கண் இல்.
குறள் எண் 910
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 91. பெண்வழிச்சேறல்
எண் சேர்ந்த நெஞ்சத்து, இடன் உடையார்க்கு, எஞ்ஞான்றும்,
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்.
குறள் எண் 911
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
அஃதாவது.இல்லறம் புகாதும், கற்பைக் காவாதும், அழகு, துப்புரவு, புனைவு, முத்தமிழ்க் கலை முதலியவற்றால் ஆடவரை மயக்கி, வௌதப்படையான கொடிய நோயும் துப்புரவில்லாது தீநாற்றம் வீசும் அருவருப்பான தோற்றமு மில்லாத ஆடவர்க் கெல்லாம், குலமத பருவ நிலைமை வேறுபாடின்றித் தம் நலத்தைப் பொருட்கு விற்கும் பொது மகளிர் தொடர்பு.பலரொடும் வரையாது கூடுதலால் வரைவின் மகளிர் எனப்பட்டனர்.இத்தொடர்பும் பொருளீட்டுதற்குத் தடையாய்ப் பகைபோல்வதாலும், மணந்தமனைவிக்கு அடங்கி நடப்பதினுங் கேடு விளைத்தலாலும், பெண்வழிச் சேறலின் பின்வைக்கப்பட்டது.
அன்பின் விழையார், பொருள் விழையும் ஆய்தொடியார்
இன் சொல் இழுக்குத் தரும்.
குறள் எண் 912
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி, நள்ளா விடல்.
குறள் எண் 913
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம்-இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇயற்று.
குறள் எண் 914
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
பொருட்பொருளார் புன் நலம் தோயார்-அருட் பொருள்
ஆயும் அறிவினவர்.
குறள் எண் 915
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
பொது நலத்தார் புன் நலம் தோயார்-மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்.
குறள் எண் 916
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
தம் நலம் பாரிப்பார் தோயார்- தகை செருக்கி,
புன் நலம் பாரிப்பார் தோள்.
குறள் எண் 917
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர்-பிற நெஞ்சில்
பேணி, புணர்பவர் தோள்.
குறள் எண் 918
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப-
மாய மகளிர் முயக்கு'.
குறள் எண் 919
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
வரைவு இலா மாண் இழையார் மென் தோள்-புரை இலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
குறள் எண் 920
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 92. வரைவின் மகளிர்
இரு மனப் பெண்டிரும், கள்ளும், கவறும்.-
திரு நீக்கப்பட்டார் தொடர்பு.
குறள் எண் 921
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
அஃதாவது, நீராகவோ கட்டியாகவோ புகையாகவோ இருந்து வெறியினால் உணர்வை மறைக்கும் பொருட்களையுண்ணாமை. கள்ளுதல் மறைத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. கள்-கள்ளம் = மறைப்பு. கள் - களவு= மறைப்பு.
கள் என்னும் பெயர் முந்நிலைப் பொருட்கும் பொதுவேனும், பெருவழக்குப் பற்றி நீர்வடிவான பொருளையே குறிக்கும். அது இயற்கையுஞ் செயற்கையும் என இருவகைத்து; முன்னது பனை தென்னை முதலிய மரங்களின்று இறக்குவது; பின்னது அரிசி காய்கனி முதலியவற்றைப் புளிக்க வைத்தும் காய்ச்சியும் எடுப்பது.
விலைமகளிர் கூட்டம் போன்ற கட்குடியும் பொருளீட்டற்குத் தடையாயும் விளைவளவிற் பகை போன்றும் இருத்தலால், விலக்கப்பட்டு வரைவின் மகளிரின் பின் வைக்கப்பட்டது.
உட்கப் படாஅர், ஔத இழப்பர், எஞ்ஞான்றும்-
கள்-காதல் கொண்டு ஒழுகுவார்.
குறள் எண் 922
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
உண்ணற்க, கள்ளை! உணில், உண்க, சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்.
குறள் எண் 923
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என், மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
குறள் எண் 924
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-கள் என்னும்
பேணாப் பெருங் குற்றத்தார்க்கு.
குறள் எண் 925
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
கை அறியாமை உடைத்தே-பொருள் கொடுத்து,
மெய் அறியாமை கொளல்.
குறள் எண் 926
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்ல;-எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்.
குறள் எண் 927
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர்-எஞ்ஞான்றும்
கள் ஒற்றிக் கண் சாய்பவர்.
குறள் எண் 928
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
களித்து அறியேன் என்பது கைவிடுக-நெஞ்சத்து
ஔதத்ததூஉம் ஆங்கே மிகும்.
குறள் எண் 929
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
களித்தானைக் காரணம் காட்டுதல்-கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇயற்று.
குறள் எண் 930
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
கள் உண்ணாப் போழ்தில், களித்தானைக் காணுங்கால்,
உள்ளான்கொல், உண்டதன் சோர்வு.
குறள் எண் 931
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
அஃதாவது, கள்ளூண் போன்றே அறம் பொரு ளின்பங்கட்குத் தடையாய் நின்ற பகைபோல் தீங்கு விளைக்கும் கவறாட்டு. சூது என்பது ஒருவகைக்காய். அதன் பெயர் இங்கு அதைக் கருவியாகக் கொண்டு ஆடும் கவறாட்டைக் குறித்தது ஆகுபெயர். கள்ளூண் போல் சூதாட்டமும் விலக்கப்படுவதாதலின், இவ்வதிகாரம் கள்ளுண்ணாமையின் பின் வைக்கப்பட்டது.
வேண்டற்க, வென்றிடினும் சூதினை! வென்றதூஉம்,
தூண்டில்-பொன் மீன் விழுங்கியற்று.
குறள் எண் 932
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
ஒன்று எய்தி, நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்-
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு.
குறள் எண் 933
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
உருள் ஆயம் ஓவாது கூறின், பொருள் ஆயம்
போஒய்ப் புறமே படும்.
குறள் எண் 934
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
சிறுமை பல செய்து, சீர் அழிக்கும் சூதின்,
வறுமை தருவது ஒன்று இல்.
குறள் எண் 935
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
கவறும், கழகமும், கையும், தருக்கி
இவறியார்-இல்லாகியார்.
குறள் எண் 936
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
அகடு ஆரார்; அல்லல் உழப்பர்;-சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார்.
குறள் எண் 937
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்-
கழகத்துக் காலை புகின்.
குறள் எண் 938
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
பொருள் கெடுத்து, பொய் மேற்கொளீஇ, அருள் கெடுத்து,
அல்லல் உழப்பிக்கும்- சூது.
குறள் எண் 939
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
உடை, செல்வம், ஊண், ஔத, கல்வி என்று ஐந்தும்
அடையாவாம்-ஆயம் கொளின்.
குறள் எண் 940
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 94. சூது
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல், துன்பம்
உழத்தொறூஉம் காதற்று, உயிர்.
குறள் எண் 941
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
அஃதாவது, அறம்பொருளின்பத்திற்குத் தடையாய்ப்பகை போல் நின்று வருத்தும் பல்வகை நோய்களையுந் தடுப்பனவும் தீணப்பனவுமான பல்வேறு நலப்பொருள் தொகுதி.
நோய் வரும் வழிகள் அல்லது கரணியங்கள் பழவினை, முன்னோர் தொடர்பு, இயற்கை, ஒட்டுவாரொட்டு, ஊண், உடை, நஞ்சு , உறுப்பறை, வறுமை, பஞ்சம், செய்வினை, அச்சம், போர், இறைவன் முதலியன. தாக்கும் பகுதிபற்றி அகக்கரண நோய், புறக்கரணநோய் என நோய்கள் இருபாற்படும்.
நோய்நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அறுப்பு , மந்திரம், மந்திரத்தூக்கம்,(Hypnotism), வழிபாடு,இறும்பூது(miracle). நம்பகம்(Faith) முதலியவனவாகப் பல திறப்படும். பழவினையால் வந்த நோய்க்கு மருந்தில்லையென்பர். இறைவனால் வந்தநோய் இறைவழி பாட்டால் நீங்கும். இவ்விரு வகையுமல்லாத பிறவகை நோய்ப் பண்டுவமே (Treatment) இவ்வதிகாரத்தில் ஆசிரியராற் கூறப்பட்டுள்ளது.
மருந்து இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேருந் தழையும் போல்வன இயற்கை; மாத்திரையும் பாம்புணிக் கருங்கல்லும் போல்வன செயற்கை; தமிழ மருத்துவத்தில் இயற்கை மருந்துகளே பெரும்பான்மையாம். "வேர்பார், தழைபார்; மெல்ல மெல்லச் செந்தூர நீறு(பற்பம்) பார்."என்பது தமிழ மருத்துவப் பழமொழி. மருத்துவ வேருந்தழையும் அவற்றாற்செய்யப்பட்ட கலவைகளும், பொதுவாகச் சிறப்பான நறுமணமுடைமையால் மருந்து எனப் பெயர் பெற்றன. மரு என்பது நன்மணம். மருக்கொழுந்து என்னும் உலக வழக்கையும் "மருவார் கொன்றை" (தேவா, 530.1) என்னும் செய்யுள் வழக்கையும் நோக்குக; மரு-மருந்து. சிறந்த மருந்துத் தழைகளெல்லாம் மலைகளிலிருப்பதாலும், மலைகளில் வாழும் சித்தரே அவற்றைப் பற்றிய அறிவில் தேர்ச்சி பெற்றிருந்ததினாலும், தமிழக மருத்துவ அகர முதலி மலையகராதியென்றும்; தமிழ மருத்துவம் சித்த மருத்துவம் என்றும். பெயர் பெற்றன.
பெரியாரைப் பிழைத்தல், கள்ளுண்டல் என்னும் பகைகள் பெரியாரைப் பிழையாமையென்றும், கள்ளுண்ணாமையென்றும் எதிணமறைவடிவிற் கூறப்பட்டதுபோன்றே, நோய் என்னும் பகையும் இங்கு மருந்து என்னும் மாற்றுப்பெயராற் கூறப்பட்டதென்க. மற்றப் பகைகளைப் போலாது இஃது அம்மையின்மை யும்மையென்னும் மும்மையுந் தழுவுவதால், இறுதியில் வைக்கப்பட்டது.
மிகினும் குறையினும், நோய் செய்யும்-நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று.
குறள் எண் 942
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு- அருந்தியது,
அற்றது போற்றி உணின்.
குறள் எண் 943
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
அற்றால், அளவு அறிந்து உண்க! அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு.
குறள் எண் 944
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல
துய்க்க, துவரப் பசித்து.
குறள் எண் 945
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்,
ஊறுபாடு இல்லை, உயிர்க்கு.
குறள் எண் 946
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், நிற்கும்,
கழி பேர் இரையான்கண் நோய்.
குறள் எண் 947
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்,
நோய் அளவு இன்றிப் படும்.
குறள் எண் 948
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும்
வாய் நாடி, வாய்ப்பச் செயல்.
குறள் எண் 949
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
உற்றான் அளவும், பிணி அளவும், காலமும்,
கற்றான், கருதிச் செயல்.
குறள் எண் 950
பொருட்பால்
உறுப்பியல்
அதிகாரம் 95. மருந்து
உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று
அப் பால் நாற் கூற்றே-மருந்து.
குறள் எண் 951
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
இனி , அரசியலுறுப்புக்கள் ஏழுள் இறுதியான குடியைப்பற்றிப் பதின்மூன்றதிகாரங்களாற் கூறத் தொடங்கி; முதற்கண் குடிமை கூறுகின்றார்.
குடிமை
அஃதாவது, அரசனுடைய குடிகளுள் அறிவாலும் ஒழுக்கத்தாலும் உயர்ந்த சாவடியில் அல்லது குடும்பத்திற் பிறந்தாரது தன்மை. 'சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்' என்னும் முறைமையாலும், பிறருங் கண்டு பின்பற்றற் பொருட்டும், இது முன் வைக்கப்பட்டது.
"உயர்ந்த குடிப்பிறப்பு நால்வகை வருணத்தார்க்கும் இன்றியமையாததாகலின், அச்சிறப்புப் பற்றி இது முன்வைக்கப்பட்டது. என்று வேண்டாதும் முரண்படவும் கூறியுள்ளார் பரிமேலழகர். ஆரியப் குலப்பாகுபாடு தமிழ்ப் பாகுபாட்டின் திரிப்பேயாயினும், நிறத்தை அடிப்படையாகக் கொண்டதும் ஏற்றத்தாழ் வுறுத்தப்பட்டது மாகும். ஆதலால் உயர்குடிப்பிறப்பு நாலாம் வருணத்தானான சூத்திரனுக்கு இருக்க முடியாது. தமிழ்க் குலப்பாகுபாடு கல்வி, காவல், வணிகம், உழவு என்னும் பரந்த தொழிற்பகுப்புப் பற்றிய அந்தணர், அரசர்,வணிகர், வேளாளர், என்னும் நாற்பெரும்பால் அல்லது வகுப்பே யாகும். "வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்" என்று (புறம்183) ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் கூறியது இக்கருத்துப்பற்றியே.
"கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே."
என்று கூறியதும், செல்வத்தாலும் அதிகாரத்தாலும் உயாந்த அரசனும் அவற்றில் தாழ்ந்த அல்லது அவையில்லாத வேளாளன் அல்லது தொழிலாளி மகனான புலவனிடம் அல்லது ஆசிரியனிடம் கற்பது பற்றியே. "தோணி யியக்குவான்" என்னும் நாலடியார்ச் செய்யுளையும் நோக்குக
.
இற் பிறந்தார்கண் அல்லது இல்லை-இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
குறள் எண் 952
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
ஒழுக்கமும், வாய்மையும், நாணும், இம் மூன்றும்
இழுக்கார்-குடிப் பிறந்தார்.
குறள் எண் 953
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
நகை, ஈகை, இன் சொல், இகழாமை, நான்கும்
வகை என்ப-வாய்மைக் குடிக்கு.
குறள் எண் 954
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
அடுக்கிய கோடி பெறினும், குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
குறள் எண் 955
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
வழங்குவது உள்வீழ்ந்தக்கண்ணும், பழங்குடி
பண்பின் தலைப் பிரிதல் இன்று.
குறள் எண் 956
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
சலம் பற்றிச் சால்பு இல செய்யார்-'மாசு அற்ற
குலம் பற்றி வாழ்தும்' என்பார்.
குறள் எண் 957
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
குடிப்பிறந்தார்கண்-விளங்கும்-குற்றம், விசும்பின்
மதிக்கண் மறுப்போல், உயர்ந்து.
குறள் எண் 958
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின், அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்.
குறள் எண் 959
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்;-காட்டும்,
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்.
குறள் எண் 960
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 96. குடிமை
நலம் வேண்டின், நாண உடைமை வேண்டும்; குலம் வேண்டின்,
வேண்டுக, யார்க்கும் பணிவு.
குறள் எண் 961
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
அஃதாவது , உயர்குடிப் பிறப்பிற்குரிய பண்புகளுள் ஒன்றானதன் மதிப்பு. அது ஒருபோதுந் தன் நிலைமையினின்று தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துவிட்டது வாழாமையுமாம். இது உயர் குடிப் பண்புகட்கு அடிப்படையாதலின் முற்கூறப்பட்டது.
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்,
குன்ற வருப விடல்.
குறள் எண் 962
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
சீரினும், சீர் அல்ல செய்யாரே-சீரொடு
பேராண்மை வேண்டுபவர்.
குறள் எண் 963
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
பெருக்கத்து வேண்டும், பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும், உயர்வு.
குறள் எண் 964
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
தலையின் இழிந்த மயிர் அனையர்-மாந்தர்
நிலையின் இழிந்தக்கடை.
குறள் எண் 965
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
குன்றின் அனையாரும் குன்றுவர்-குன்றுவ
குன்றி அனைய செயின்.
குறள் எண் 966
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
புகழ் இன்றால்; புத்தேள் நாட்டு உய்யாதால்; என் மற்று,
இகழ்வார்பின் சென்று நிலை.
குறள் எண் 967
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின், அந் நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
குறள் எண் 968
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
மருந்தோ, மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை-பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து.
குறள் எண் 969
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர், மானம் வரின்.
குறள் எண் 970
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 97. மானம்
இளி வரின், வாழாத மானம் உடையார்
ஔத தொழுது ஏத்தும், உலகு.
குறள் எண் 971
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
அஃதாவது,அறிவாற்ற லொழுக்கங்களால் மக்கள் அல்லது குடிகள் அடையக்கூடிய உயர்வு; படிப்படியாக மேன்மேலுயரக் கூடிய நிலைமை மானத்தின் வழிப்பட்டதாகையால், இஃது அதன் பின் வைக்கப்பட்டது.
ஔத, ஒருவற்கு உள்ள வெறுக்கை; இளி ஒருவற்கு,
அஃது இறந்து வாழ்தும்ஒ எனல்.
குறள் எண் 972
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா,
செய்தொழில் வேற்றுமையான்.
குறள் எண் 973
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
மேல் இருந்தும், மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும்,
கீழ் அல்லார், கீழ் அல்லவர்.
குறள் எண் 974
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
ஒருமை மகளிரே போல, பெருமையும்,
தன்னைத்தான் கொண்டு ஒழுகின், உண்டு.
குறள் எண் 975
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
பெருமை உடையவர் ஆற்றுவார்-ஆற்றின்
அருமை உடைய செயல்.
குறள் எண் 976
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை-'பெரியாரைப்
பேணிக் கொள்வேம்' என்னும் நோக்கு.
குறள் எண் 977
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்பும்தான்
சீர் அல்லவர்கண் படின்.
குறள் எண் 978
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
பணியுமாம், என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம், தன்னை வியந்து.
குறள் எண் 979
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல்.
குறள் எண் 980
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 98. பெருமை.
அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்.
குறள் எண் 981
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
அஃதாவது, பல நற்குணங்களாலும் நிறைந்து அவற்றை யாளுந்தன்மை, சாலுதல் நிறைதல்; பல நற்குணங்களாலும் என்பது அவாய்நிலையால் வந்தது. ஆண்மை ஆளுதல், அவற்றை என்னும் செயப்படு பொருட் சுட்டுப் பெயரும் அவாய்நிலையால் வந்ததே, மானமும் பெருமையும் அல்லாத நற்குணங்கள் பலவற்றையும் தொகுத்துக்கொண்டு நிற்றலால், இது அவற்றின்பின் வைக்கப்பட்டது, சான்றாண்மை சால்பு எனவும் படும்.
கடன் என்ப, நல்லவை எல்லாம்-கடன் அறிந்து,
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு.
குறள் எண் 982
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
குண நலம், சான்றோர் நலனே; பிற நலம்
எந் நலத்து உள்ளதூஉம் அன்று.
குறள் எண் 983
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையொடு
ஐந்து-சால்பு ஊன்றிய தூண்.
குறள் எண் 984
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
கொல்லா நலத்தது, நோன்மை;-பிறர் தீமை
சொல்லா நலத்தது, சால்பு.
குறள் எண் 985
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
குறள் எண் 986
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
சால்பிற்குக் கட்டளை யாது? எனின், தோல்வி
துலை அல்லார்கண்ணும் கொளல்.
குறள் எண் 987
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்,
என்ன பயத்ததோ, சால்பு.
குறள் எண் 988
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
இன்மை ஒருவற்கு இளிவு அன்று-சால்பு என்னும்
திண்மை உண்டாகப்பெறின்.
குறள் எண் 989
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
ஊழி பெயரினும், தாம் பெயரார்-சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்.
குறள் எண் 990
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 99. சான்றாண்மை.
சான்றவர் சான்றாண்மை குன்றின், இரு நிலம்தான்
தாங்காது மன்னோ, பொறை.
குறள் எண் 991
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
அஃதாவது, சான்றாண்மையை மேற்கொண்டு நின்றே அவரவர்பண்பறிந்து அறிதற்கேற்றவாறு ஒழுகுதல், "பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்", என்றார் நல்லந்துவனார் (கலித் 133), அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
எண் பதத்தால், எய்தல் எளிது என்ப, யார்மாட்டும்,
பண்பு உடைமை என்னும் வழக்கு.
குறள் எண் 992
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ் இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு.
குறள் எண் 993
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்; வெறுத்தக்க
பண்பு ஒத்தல், ஒப்பது ஆம் ஒப்பு.
குறள் எண் 994
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும், உலகு.
குறள் எண் 995
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
நகையுள்ளும் இன்னாது, இகழ்ச்சி; பகையுள்ளும்
பண்பு உள, பாடு அறிவார் மாட்டு.
குறள் எண் 996
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
பண்பு உடையார்ப் பட்டு, உண்டு உலகம்; அது இன்றேல்,
மண் புக்கு மாய்வதுமன்.
குறள் எண் 997
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
அரம் போலும் கூர்மையரேனும், மரம் போல்வர்,
மக்கள் பண்பு இல்லாதவர்.
குறள் எண் 998
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
நண்பு ஆற்றார் ஆகி, நயம் இல செய்வார்க்கும்,
பண்பு ஆற்றாராதல் கடை.
குறள் எண் 999
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்,
பகலும், பாற் பட்டன்று, இருள்.
குறள் எண் 1000
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 100. பண்புடைமை.
பண்பு இலான் பெற்ற பெருஞ் செல்வம்-நன் பால்
கலம் தீமையால் திரிந்தற்று.
குறள் எண் 1001
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
அஃதாவது ,ஈட்டியவனுக்கும் பிறருக்கும் பயன்படாத செல்வத்தின் தன்மை உடையவனது குற்றம் உடமையின் மேலேற்றப்பட்டது. 'பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் ' என்று மேலதிகார ஈற்றில் இதற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதே , இதன் அதிகார முறைமையைக் காட்டும்.
வைத்தான், வாய் சான்ற பெரும் பொருள்; அஃது உண்ணான்
செத்தான், செயக்கிடந்தது இல்.
குறள் எண் 1002
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
பொருளான் ஆம், எல்லாம் என்று, ஈயாது இவறும்
மருளான், ஆம், மாணாப் பிறப்பு.
குறள் எண் 1003
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
ஈட்டம் இவறி, இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
குறள் எண் 1004
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ-ஒருவரால்
நச்சப் படாஅதவன்.
குறள் எண் 1005
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய
கோடி உண்டாயினும், இல்.
குறள் எண் 1006
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
ஏதம், பெருஞ் செல்வம்-தான் துவ்வான், தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்.
குறள் எண் 1007
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்- மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்தற்று.
குறள் எண் 1008
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
நச்சப்படாதவன் செல்வம்-நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று.
குறள் எண் 1009
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
அன்பு ஒரீஇ, தற் செற்று, அறம் நோக்காது, ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார், பிறர்.
குறள் எண் 1010
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 101. நன்றியில் செல்வம்.
சீருடைச் செல்வர் சிறு துனி-மாரி
வறம் கூர்ந்தனையது உடைத்து.
குறள் எண் 1011
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
அஃதாவது உயர்குடிப்பிறந்து மானம் பெருமை சால்பு பண்பு ஆகிய குணங்ளையுடையோர் தமக்குப் பொருந்தாத கருமங்களைச் செய்ய நாணுந்தன்மை. அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
கருமத்தான் நாணுதல், நாணு; திருநுதல்
நல்லவர் நாணு, பிற.
குறள் எண் 1012
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
ஊண், உடை, எச்சம், உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல;
நாண் உடைமை மாந்தர் சிறப்பு.
குறள் எண் 1013
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
ஊனைக் குறித்த, உயிர் எல்லாம்; நாண் என்னும்
நன்மை குறித்தது, சால்பு.
குறள் எண் 1014
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
அணி அன்றோ, நாண் உடைமை சான்றோர்க்கு! அஃது இன்றேல்
பிணி அன்றே, பீடு நடை.
குறள் எண் 1015
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும், உலகு.
குறள் எண் 1016
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
நாண் வேலி கொள்ளாது, மன்னோ, வியல் ஞாலம்
பேணலர்-மேலாயவர்.
குறள் எண் 1017
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார்;-நாண் ஆள்பவர்.
குறள் எண் 1018
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்,
அறம் நாணத் தக்கது உடைத்து.
குறள் எண் 1019
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
குலம் சுடும், கொள்கை பிழைப்பின், நலம் சுடும்,
நாண் இன்மை நின்றக்கடை.
குறள் எண் 1020
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 102. நாணுடைமை.
நாண் அகத்து இல்லார் இயக்கம்-மரப்பாவை
நாணால் உயிர் மருட்டியற்று.
குறள் எண் 1021
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
அஃதாவது , ஒருவன்தான் பிறந்த குடியை மேன்மே லுயரச் செய்தலின் திறம்.இது தாழ்வு பற்றி நாணுடையார்க்கே உள்ளதாதலின்,நாணுடைமையின் பின் வைக்கப்பட்டது.
இங்குக் குடியென்றது சேரசோழ பாண்டியர் குடிகளும் சேக்கிழார் குடியும் போலக் கொடிவழியையுஞ் சரவடியையுமேயன்றி, இற்றைக் குலங்களை யன்று.
ஆரியத்தால் தாழ்த்தப்பட்ட தமிழ இனத்தை முன்னேற்றிய நயன்மைக்கட்சி (Lustice party) யாட்சியும் , அதன் வழிப்பட்ட இற்றைத் திராவிடர் முன்னேற்றக் கழக ஆட்சி, விரிவுபட்ட குடிசெயல் வகைகளே. ஆயின், தமிழ இனத்தின் ஒற்றுமையைச் சிதைப்பதும், ஆரியவழி நின்று குலத்தைப் பிறப்போடு தொடர்பு படுத்துவதுமான; சில தமிழ் வகுப்புகளின் தனித்தனி முன்னேற்ற முயற்சி திருவள்ளுவர் போலும் அறிஞர் போற்றத்தக்கதன்று.
பரந்த நோக்கொடு விரிந்தவகையில் குடிசெயல் தொண்டாற்றிய தனிப்பட்ட தமிழத் தலைவர் திருவள்ளுவர் ஒருவரே.
கருமம் செய-ஒருவன்-ஒகைதூவேன்ஒ என்னும்
பெருமையின், பீடு உடையது இல்.
குறள் எண் 1022
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
ஆள்வினையும், ஆன்ற அறிவும், என இரண்டின்
நீள் வினையான், நீளும் குடி.
குறள் எண் 1023
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
குடி செய்வல் என்னும் ஒருவற்கு, தெய்வம்
மடி தற்று, தான் முந்துறும்.
குறள் எண் 1024
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
சூழாமல் தானே முடிவு எய்தும்-தம் குடியைத்
தாழாது உஞற்றுபவர்க்கு.
குறள் எண் 1025
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
குற்றம் இலனாய், குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும், உலகு.
குறள் எண் 1026
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
நல் ஆண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கிக்கொளல்.
குறள் எண் 1027
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
அமரகத்து வன்கண்ணர் போல, தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே, பொறை.
குறள் எண் 1028
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
குடி செய்வார்க்கு இல்லை, பருவம்; மடி செய்து,
மானம் கருத, கெடும்.
குறள் எண் 1029
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
இடும்பைக்கே கொள்கலம்கொல்லோ-குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு.
குறள் எண் 1030
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 103. குடிசெயல்வகை
இடுக்கண் கால் கொன்றிட, வீழும்-அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி.
குறள் எண் 1031
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
அஃதாவது அரசனுக்கும் அவனுடைய குடிகட்கும் அல்லது ஒரு நாட்டு மாந்தர்க்கெல்லாம் இன்றியமையாத உணவை விளைப்பதும், கைத்தொழிற்கும் வாணிகத்திற்கும் ஒரளவு கரணிமாயிருப்பதும், அரசியல் நடத்தற்கு வேண்டும் இறையிற் பெரும் பகுதியை நல்குவதும். குடிகளுட் சிறந்த வேளாளர் என்னும் வகுப்பார்க் குரியதும், ஆன பயிர்த்தோழில். அது உழுதலாகிய அதன் முதல் வினை பற்றி உழவு எனப்பட்டது. உழவுத் தொழிலைப் பாண்டியம் என்பது இலக்கிய வழக்கு. பாண்டி- எருது. பண்டியின் துணையாற் செய்யப்படுவது பாண்டியம். "பகடு நடந்த கூழ்" என்று நாலடியார் (2) கூறுதல் காண்க. அரசர்குடி உட்பட எல்லாக்குடிகளும் வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் இன்றியமையாதாதலின், இது குடிசெயல் வகையின்பின் வைக்கப்பட்டது.
"சிறுபான்மை வாணிகர்க்கும் பெரும்பான்மை வேளாளர்க்கு முரித்தாய உழுதற்றொழில் சய்விக்குங்கால் ஏனையோர்க்கு முரித்து இது மேற்குடியுயர்தற் கேதுவென்ற ஆள்வினை வகையாதலின், குடி செயல் வகையின் பின் வைக்கப்பட்டது" என்னும் பரிமேலழகர் அதிகாரப் பாயிரம், ஆரிய முறை தழுவியதும் பொருளொடு பொருந்தாதது மாதலின், ஈண்டைக்கு ஏற்கா தென்க.
சுழன்றும் ஏர்ப் பின்னது, உலகம்; அதனால்,
உழந்தும் உழவே தலை.
குறள் எண் 1032
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
உழுவார் உலகத்தார்க்கு ஆணி-அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
குறள் எண் 1033
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
உழுது, உண்டு, வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம்
தொழுது, உண்டு, பின் செல்பவர்.
குறள் எண் 1034
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
பல குடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர்-
அலகு உடை நீழலவர்.
குறள் எண் 1035
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
இரவார்; இரப்பார்க்கு ஒன்று ஈவர்-கரவாது
கை செய்து ஊண் மாலையவர்.
குறள் எண் 1036
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
உழவினார் கைம்மடங்கின், இல்லை-'விழைவதூஉம்
விட்டேம்' என்பார்க்கு நிலை.
குறள் எண் 1037
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
தொடிப் புழுதி கஃசா உணக்கின், பிடித்து எருவும்
வேண்டாது, சாலப் படும்.
குறள் எண் 1038
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
ஏரினும் நன்றால், எரு இடுதல்; கட்டபின்,
நீரினும் நன்று, அதன் காப்பு.
குறள் எண் 1039
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
செல்லான் கிழவன் இருப்பின், நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்.
குறள் எண் 1040
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 104. உழவு
இலம்! என்று அசைஇ இருப்பாரைக் காணின்,
நிலம் என்னும் நல்லாள் நகும்.
குறள் எண் 1041
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
அஃதாவது, நுகர்வன யாவு மில்லாமை. நல்கூர்வது நல்குரவு. தல் நன்மை; கூர்தல் மிகுதல். நன்மையின்மையை நன்மை மிகுதி என்றது மங்கல வழக்கு, வெறுமையாகிய வறுமை நிரப்பு என்றது போல். இனி, நல்கு + ஊர்தல் என்று பகுத்து, பிறர் கொடுப்பதன் மேல் ஊர்ந்து செல்லுதல் என்று கூறினுமாம். உழவுத்தொழிலின் றேல் சோம்பேறிகள் மட்டுமின்றி ஒருநாடும் வறுமையடையும் என்னும் கருத்துப்பற்றி, இது உழவின்பின் வைக்கட்பட்டது.
நல்குரவுண்டாகும் வழிகள்; முன்னோர் தேட்டின்மை, பெற்றேரின்மை, உழைப்பின்மை, மதிநுட்பமின்மை, பொருளாசையின்மை, தாயத்தாருங் கள்வருங் கொள்ளைக் கார்ருங் கவர்தல், குடியுஞ் சூதும் விலைமகளிருறவுமாகிய தீயவொழுக்கம். இயற்கைப் பேரழிவு நேர்மை என்பனவாம்.
இன்மையின் இன்னாதது யாது? எனின், இன்மையின்
இன்மையே இன்னாதது.
குறள் எண் 1042
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
இன்மை என ஒரு பாவி, மறுமையும்
இம்மையும் இன்றி, வரும்.
குறள் எண் 1043
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக-
நல்குரவு என்னும் நசை.
குறள் எண் 1044
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும்.
குறள் எண் 1045
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
குறள் எண் 1046
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
நற் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார்
சொல் பொருட் சோர்வு படும்.
குறள் எண் 1047
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும்,
பிறன் போல நோக்கப்படும்.
குறள் எண் 1048
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
இன்றும் வருவது கொல்லோ-நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
குறள் எண் 1049
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது.
குறள் எண் 1050
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 105. நல்குரவு
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
குறள் எண் 1051
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
அஃதாவது, உழைக்க இயலாதவரும் களைகண் இல்லாத வருமான குருடர், கூனர், சப்பாணியர், நொண்டியர், முடவர், நோயாளியர், முதியர் முதலியோர் இரந்துண்டல். இது முன்னோர் தேட்டும் உறவினருதவியும் இல்லாத வறுமையால் நேர்தலின், நல்குரவின் பின் வைக்கப்பட்டது.
எச்சப் பிறவியரும் இறைவனாற் படைக்கப்பட்டுக் குடிகளாயிருத்தலாலும, அவரையும் நோயாளியரையும் முதியோரையும் கொல்லுதல் கொலையாதலாலும், அவருக்கு வாழ்க்கை வழி இரத்தலேயென்று அறநூலார் நெறி வகுத்துள்ளனர். இது மானத் தீரா இரவு. இது இக்காலத்தில் பின் தங்கிய நாடுகள் முன்னேறிய நாடுகளிடம் உதவிபெறுவது போல்வது.
இரக்க, இரத்தக்கார்க் காணின்! கரப்பின்,
அவர் பழி தம் பழி அன்று.
குறள் எண் 1052
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
இன்பம் ஒருவற்கு இரத்தல்-இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
குறள் எண் 1053
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து.
குறள் எண் 1054
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
இரத்தலும் ஈதலே போலும்-கரத்தல்
கனவினும் தேற்றாதார்மாட்டு.
குறள் எண் 1055
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
கரப்பு இலார் வையகத்து உண்மையான், கண் நின்று,
இரப்பவர் மேற்கொள்வது.
குறள் எண் 1056
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின், நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
குறள் எண் 1057
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
குறள் எண் 1058
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
இரப்பாரை இல்லாயின், ஈர்ங்கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தற்று.
குறள் எண் 1059
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
ஈவார்கண் என் உண்டாம், தோற்றம்-இரந்து கோள்
மேவார் இலாஅக்கடை.
குறள் எண் 1060
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 106. இரவு
இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி.
குறள் எண் 1061
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
அஃதாவது, உழைக்கக் கூடியவர் மானந்தீர இரப்பிற்கு அஞ்சுதல், வேண்டியதாதல். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
கரவாது, உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும்
இரவாமை கோடி உறும்.
குறள் எண் 1062
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து
கெடுக, உலகு இயற்றியான்.
குறள் எண் 1063
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.
குறள் எண் 1064
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இடம் எல்லாம் கொள்ளாத் தகைத்தே-இடம் இல்லாக்
காலும், இரவு ஒல்லாச் சால்பு.
குறள் எண் 1065
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
தௌ நீர் அடு புற்கை ஆயினும், தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்.
குறள் எண் 1066
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
ஆவிற்கு நீர் என்று இரப்பினும், நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்.
குறள் எண் 1067
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இரப்பன், இரப்பாரை எல்லாம்-ஒஇரப்பின்,
கரப்பார் இரவன்மின்ஒ என்று.
குறள் எண் 1068
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி, கரவு என்னும்
பார் தாக்க, பக்கு விடும்.
குறள் எண் 1069
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
இரவு உள்ள, உள்ளம் உருகும்; கரவு உள்ள,
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
குறள் எண் 1070
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 107. இரவச்சம்
கரப்பவர்க்கு யாங்கு ஔதக்கும்கொல்லோ-இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
குறள் எண் 1071
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
அஃதாவது, குடிகளுள் கடைப்பட்டவரும் ஐம்பெருங் குற்றங்களையும் துணிந்து செய்பவரும் தண்டிக்கும் அரசனுக்கன்றி வேறு யார்க்கும் அஞ்சாதவருமான கீழ்மக்களின் தன்மை. அதனால், இது இறுதியிற் கூறப்பட்டது.
மக்களே போல்வர், கயவர்; அவர் அன்ன
ஒப்பார் யாம் கண்டது இல்.
குறள் எண் 1072
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்-
நெஞ்சத்து அவலம் இலர்.
குறள் எண் 1073
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
தேவர் அனையர், கயவர்-அவரும் தாம்
மேவன செய்து, ஒழுகலான்.
குறள் எண் 1074
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
அகப் பட்டி ஆவாரைக் காணின், அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும், கீழ்.
குறள் எண் 1075
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
அச்சமே கீழ்களது ஆசாரம்; எச்சம்
அவா உண்டேல், உண்டாம் சிறிது.
குறள் எண் 1076
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
அறை பறை அன்னர் கயவர்-தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்.
குறள் எண் 1077
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
ஈர்ங் கை விதிரார் கயவர்-கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.
குறள் எண் 1078
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
சொல்ல, பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்ல, பயன்படும் கீழ்.
குறள் எண் 1079
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின், பிறர்மேல்
வடுக் காண வற்று ஆகும், கீழ்.
குறள் எண் 1080
பொருட்பால்
உறுப்பியல்-குடி
அதிகாரம் 108. கயமை.
எற்றிற்கு உரியர் கயவர்-ஒன்று உற்றக்கால்,
விற்றற்கு உரியர் விரைந்து.
குறள் எண் 1081
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
அறவழியி லீட்டப்பெற்ற பொருளைக்கொண்டு இன்பந் துய்க்கும் வகையைப் பற்றிக் கூறும் பெரும்பகுதி இன்பத்துப்பாலாம். அது அகப்பொரு ளிலக்கணத்திற் சொல்லப்பட்ட 'மூன்றன் பகுதி' யின் (தொல்.அகத்,41) முடிவுநிலை பற்றியதாம்.அறம்பொருளின்பம்(வீடு) என்று கூறுவதே மரபாதலானும், இப்பொருட் பாகுபாடு தமிழர் கண்டதே யாதலானும், இப்பகுதிக்கு இன்பத்துப்பால் என்பதே ஆசிரியர் இட்டபெயராம்.
"அறம்பொரு லின்பம்வீ டென்னுமந் நான்கின்
றிறந்நெரிந்து செப்பிய தேவை"
"வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றொன்றூழ் - கூடுபொரு
ளௌளி லெழுப திருபதிற் தைந்தின்பம்"
"இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்"
"அறமுப்பத் தெட்டுப் பொருளெழுப தின்பத்
திறமிருபத் தைந்தாற் றௌதய"
"அறந்தகளி யான்ற பொருடிரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொற்றீத் தண்டு"
அதனறிந்தே மான்ற பொருளறிந்தே மின்பின்
றிறனறிந்தேம் வீடு தௌதந்தேம்"
எனத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களுள் ஆறு இன்பம் அல்லது இன்பு என்றே குறித்தலையும், இரண்டே எதுகை நோக்கிக் காமம் என்னுஞ் சொல்லை ஆளுதலையுங் காண்க. பரிமேலழகர் காமம் என்னுஞ் சொல்லை ஆண்டதற்கு அவரது வடமொழி வெறியே கரணியம் என்பதையும் அறிக. ஆயினும், அச்சொல்லுந் தென்சொல்லே யென்பதை அவர் அறியார். காமம் ஆசையாகிய கரணியம்; இன்பம் விளையாகிய துய்ப்பு.
உலக இன்பங்களுள் தலை சிறந்ததும் ஐம்புல இன்பங்களையும் ஒருங்கே கொண்டதும் பெண்ணின்பமே. இவ்வின்பம் ஆடவர்க்குப் போன்றே பெண்டிர்க்கும் ஐம்புல வின்பந் தருவதால் இருபாற் பொதுவாம்.ஆயினும், ஆண்பாலின் வலிமை மேம்பாடும் உரிமைச் சிறப்பும் வலியத் துய்ப்பும் துய்ப்பாற்றலும் அடக்கக் குறைவும்பற்றி ஆண்பாலின்பமாகவே பொதுவாகக் கருதவுஞ் சொல்லவும்படும்.
களவியல்
மாந்தருள் இருபாலுங் கூடி இன்பந் துய்த்து அறஞ்செய்து ஒழுகும் இல்லற வாழ்க்கை, களவாகத் தொடங்குவதும் கற்பென்னும் வௌதப்படையாகத் தொடங்குவதும் என இருவகைப்படும். கூடி இன்பந்துய்க்கும் ஓர் இளைஞனும், ஓர் இளைஞையும் பிறர் இல்லாத இடத்தில் தற்செயலாகத் தலைக்கூடிக் காதலொருமித்துப் புணர்ந்து, பின்பு வௌதப்படையாகக் கூடி வாழத் தொடங்கும்வரை, குறித்த இடத்திற் சிறிது காலம் பெற்றோர்க்கும் மற்றோர்க்குந் தெரியாது நாள்தொறும் அல்லது அடிக்கடி மறைவாகக் கூடியொழுகும் ஒழுக்கம் களவாம்; அதன்பின் வௌதப்படையாகக் கூடிவாழும் வாழ்க்கை கற்பாம்.
ஆணும்பெண்ணும் பிறர்க்குத் தெரியாது மறைவாகக் கூடிப் புணர்தல் பலவகையில் நிகழுமேனும், மணமாகாத எதிர்ப்பா லினத்தையர் இருவர், தெய்வ ஏற்பாட்டின்படி தமியராக ஒருவரையொருவர் கண்டவுடன் காதலித்து மெய்ம்மறந்து புணர்ந்து, அன்றே நிலையான வாழ்க்கைத் துணையராவதும், அடுத்தோ சிறிதுகாலம் இடையிட்டோ கற்பாக மாறுவதும், அதற்குத் தடையேற்படின் இருவரும் உயிர் துறப்பதுமான உயரிய மறைவொழுக்கமே, தமிழ் நூல்களிற் களவெனச் சிறப்பித்துச் சொல்லப்படுவதாம். கனவென்பது மறைவு. களவாக வொழுகும் ஒழுக்கம் கனவெனப்பட்டது; ஆதலால் யாதொரு சமையத்து ஒரோவோரிணையரிடத்தன்றி, எவ்விடத்தும் எக்காலும் எல்லோரிடத்தும் நிகழ்வதன்று. ஆதலாற் கோவைக் பனுவல்களிலும் இத்திருக்குறளின் பத்துப் பாலிலும் களவுங் கற்பும் ஒரே தொடர்ச்சியாகக் கூறப்பட்டிருப்பது பற்றி, கற்பெல்லாங் களவொடு தொடங்குவனவாகக் கருதற்க.
மாந்தன் பெறக்கூடிய பேறுகள் என்னும் வகையில் எல்லாப் பொருள்களையும் அறம் பொருளின்பம் வீடேன நான்காக வகுத்து, அவற்றை மீண்டும் உள்ளத்தொடு நெருக்கமுண்மையும் இன்மையும் பற்றி அகம் (இன்பம்) புறம் (அறமும் பொருளும் வீடும்) என இரண்டாகப் பகுத்து, அவ்விரண்டையும் எவ்வேழுதிணையாக விரித்து, அகத்திணைகளைத் தொகுத்து, அவ்வைந்திணையைக் களவு கற்பென இருவகைக் கைகோட்படுத்தி அவற்றைப் பல்வேறு பகுதிகளாகவும் பதிற்றுக்கணக்கான கிளவிக்கொத்துகளாகவும் நூற்றுக்கணக்கான துறைகளாகவும் பாகுபாடு செய்தும் கூறுபடுத்தியும், மேலையர் திங்களையுஞ் செவ்வாயையும் அடையும் இக்காலத்தும் ஏனைமொழியெதிலுமில்லாத பொருளிலக்கணத்தை, குமரிநாட்டுத் தலைக்கழகக் காலத்திலேயே தமிழ் முனிவர் தமிழில் அறிவியல் முறையில் அமைத்திருக்கவும், இது (காமவின்பம்) புணர்ச்சி பிரிவென விருவகைப்படும். ஏனை இருத்தல் இரங்கல் ஊடலென்பன வோவெனின், இவர் பொருட்பாகுபாட்டினை அறம்பொருளின்பமென வடநூல் வழக்குப்பற்றி யோதுதலான், அவ்வாறே யவற்றைப் பிரிவின்கணடக்கினாரென்க. என்று பரிமேலழகர் வரைந்திருப்பது, எத்துணைப் பொய்யும் புரட்டுமான செய்தியாகும்! புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னும் ஐந்தும் ஒன்றனுனொன்று அடங்காத தனித்தனியுரிப்பொருளென்றும், அவற்றுள் ஊடலொழிந்த ஏனை நான்கும் இரு கைகோட்கும் பொதுவென்றும், அவர் அறிந்திலர் போலும்.
தமிழரின் இன்ப வாழ்க்கை தொன்றுதொட்டுக் களவு கற்பு என்றே பிரிக்கப் பட்டிருந்தமையை, திருக்குறட்கு ஐந்நூற்றாண்டுகட்கு முன்பே தோன்றிய தொல்காப்பியம் என்னும் சார்பு நூலில் உள்ள களவியல்கற்பியல் என்னும் ஈரியல்களைக் கண்டுதௌதக.
இக்களவியலை ஆசிரியர் ஏழதிகாரத்தாற் கூறத்தொடங்கி, முதற்கண் தகையணங் குறுத்துதல் கூறுகின்றார்.
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
அஃதாவது, மருத நிலத்தினின்று குறிஞ்சி நிலத்திற்கு வேட்டையாடச் சென்ற இளவரசனான தலைமகன், தன் பக்கத்துணைவரினின்றும் நீங்கித் தனியனாய் ஒரு மானைத் துரத்திச் சென்றவிடத்து அங்குச் சோலை விளையாட்டிற்குத் தன் தோழியர் கூட்டத்துடன் வந்து தற்செயலாய் அவரினின்று நீங்கித் தனித்து நின்ற, அம்மலை நாட்டரசன் மகளாகிய கன்னிகையைக் கண்டு, அவள் கழிபெருங் கட்டழகு தன்னைத் துன்புறுத்தலைச் சொல்லுதல். இது கண்டவுடன் நிகழ்தலால், இத்துறை இப்பெயர் பெற்றது. இதிற் காட்சி ஐயம், தௌததல் என்னும் மூன்றும் அடங்கும். குறிப்பறிதலுங் கருதப்பெறும். ஆதலால், இது ஆசிரியரே அமைத்துக்கொண்ட கலவைத் துறையாம்.
உலகிற் காமவின்பத்தை உயர்ந்த அளவில் நுகர்தற்கு, அவ்வவ்விடத்தில் ஒப்புயர்வற்ற பதவியும் மாபெருஞ்செல்வமுங் கழிபெருங்கட்டழகும் வேண்டியிருத்தலின், இலக்கண நூலார் கிழவன், வேள், மன்னன், கோ, வேந்தன், என்று ஏறுவரிசையில் ஐவகைப்பட்ட அரசவகுப்பாருள் ஒருவனையும் ஒருத்தியையுமே காதலனும் காதலியுமாகக் கொண்டிருக்கின்றனர். இது கிழவன் கிழத்தி, தலைவன் தலைவி, தலைமகன் தலைமகள் என்று காதலரைக் குறித்தலாலும்; ஊர, (குறும்பொறை) நாட, வெற்ப, துறைவ, தோன்றல் என்று தலைவனை விளித்தலாலும்; காதலர் தேரும் யானையும் குதிரையும் ஊர்வதாகச் சொல்லப்படுவதாலும், அறியப்படும். இங்ஙனம் உயர்ந்தோரையே காதலராகக் கொண்டாலும், உலகியற்கொத்த உண்மைத்தன்மையும் ஊட்டுவதற்குத் தாழ்ந்தோர்குரிய செய்திகளும் இடையிடை விரவிக் கூறப்படும். இது,
"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்".
எனப்படும்(தொல்.அகத்.53)
இனி,காதல காதலியர் இருவரும் குடியுங் குணமும் உருவுந் திருவும் அன்பும் அறிவும் ஒத்திருப்பதும், இன்பச் சிறப்பிற்கும் நீடிப்பிற்கும் வேண்டப்படும். ஆயினும், காதலனுக்குப் பதினாறாட்டைப்பருவமும் காதலிக்குப் பன்னீராட்டைப்பருவமுமாக , அகவையில் மட்டும் ஒவ்வாமை கொள்வர்.உருவுங் குணமும் அன்புமொழிந்த மற்றவகைகளிலும் காதலன் உயர்ந்தவனாயிருக்கலாம். இவையும் புலனெறி வழக்கம்.
"ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே"
<div align='right'>(தொல்.கள.2) </div>
"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு நிறுத்த கம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே".
<div align='right'>(தொல்.மெய்ப்.25)
</div>
அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-
மாதர்கொல்! மாலும், என் நெஞ்சு.
குறள் எண் 1082
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.
குறள் எண் 1083
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
பண்டு அறியேன், கூற்றுஒ என்பதனை; இனி அறிந்தேன்;
பெண்தகையான் பேர் அமர்க் கட்டு.
குறள் எண் 1084
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்
பேதைக்கு, அமர்த்தன கண்.
குறள் எண் 1085
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
கூற்றமோ! கண்ணோ! பிணையோ!- மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து.
குறள் எண் 1086
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்
செய்யலமன், இவள் கண்.
குறள் எண் 1087
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்.
குறள் எண் 1088
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
ஔ நுதற்கு, ஓஒ! உடைந்ததே-ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு.
குறள் எண் 1089
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
பிணை ஏர் மட நோக்கும், நாணும் உடையாட்கு
அணி எவனோ, ஏதில தந்து.
குறள் எண் 1090
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 109. தகையணங்குறுத்தல்
உண்டார்கண் அல்லது, அடு நறா, காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.
குறள் எண் 1091
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
அஃதாவது, தலைமகன் தலைமகளின் காதற்குறிப்பை அவள் பார்வையினின்றும் செயல்களினின்றும் உய்த்துணர்தல். இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழ்வதும் நிகழக்கூடியதும் இஃதொன்றேயாயினும், பொருளொப்புமை பற்றியும் சுருக்கம் பற்றியும், பாங்கியிற் கூடடத்திற்குமுன் தலைமகன் தோழிகுறிப்பினையறிதலும், அவள் தலைமக்களிருவர் குறிப்பினையுமறிதலும், இங்குச் சேர்த்துக் கூறப்பட்டுள என அறிக.
தகையணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுதற்கு அவள் குறிப்பறிதல் இன்றியமையாதலின் , இது தகையணங்குறுத்தலின் பின்னும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னும் வைக்கப்பட்டது.
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது; ஒரு நோக்கு
நோய் நோக்கு; ஒன்று அந் நோய் மருந்து.
குறள் எண் 1092
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று; பெரிது.
குறள் எண் 1093
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
குறள் எண் 1094
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும்; நோக்காக்கால்,
தான் நோக்கி, மெல்ல நகும்.
குறள் எண் 1095
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்.
குறள் எண் 1096
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
உறாஅதவர்போல் சொலினும், செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்.
குறள் எண் 1097
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
செறாஅச் சிறு சொல்லும், செற்றார்போல் நோக்கும்,-
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு.
குறள் எண் 1098
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
அசையியற்கு உண்டு, ஆண்டு ஓர் ஏஎர்; யான் நோக்க,
பசையினள், பைய நகும்.
குறள் எண் 1099
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
குறள் எண் 1100
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 110. குறிப்பறிதல்
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல.
குறள் எண் 1101
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
அஃதாவது, தலைமகள் குறிப்பறிந்து புணர்ந்த தலைமகள் கழிபெருமகிழ்ச்சியுற்று அப்புணர்ச்சி யின்பத்தினை யெடுத்துக் கூறல். அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
இஃது இயற்கை புணர்ச்சி.கொடுப்பாரும் அடுப்பாருமின்றியும் முன்னறிவும் முயற்சியுமின்றியும், காதலரிருவரும் தாமே தமியராய் எதிர்ப்பட்டு இயற்கையாகப் புணரும் புணர்ச்சியாதலின், இப்பெயர் பெற்றது. இது தெய்வத்தாலேற்படுவதால் தெய்வப் புணர்ச்சியென்றும், காதலால் நிகழ்வதாற் காமப் புணர்ச்சியென்றும் பெயர்பெறும். முதன் முதலாகப் புணர்வதால் முன்னுறு புணர்ச்சியென்றும் பெயர் பெறும
நாகரிகம் முதிர்ந்த நிலையில் நிகழ்ந்த இப்பேரின்பக்களவொழுக்கத்தை, பிறழவுணர்ந்த புல்லறிவாளரும், காக்கை வௌததென்னுங் காட்டிக் கொடுக்கியரும், கட்டுப் பாடாகத் தமிழைப் பழிக்குங் கடும்பகைவரும். மேனோக்காகத் தமிழைக் கற்ற மேலையறிஞரும். இல்லற வாழ்க்கை யேற்படாத தொன்மைக்காலத்தில் அநாகரிக மாந்தர் ஆடுமாடுகள் போற் கண்டகண்ட விடத்திற் காமத்தாற் புணர்ந்து திரிந்ததாகக் கருதுவர். அரையாடையுமின்றி அடவியில் தன்னந்தனியாய்த் திரிபவன், கூர்வேலிளைஞர் ஆயிரவர் புடைசூழத் தேருர்ந்து செல்வனோ? தன்னுணவிற்குந்தானே இயற்கைவிளைவைத் தேடித் திரிபவள், நற்றாயொடு செவிலித்தாயும் பேண ஆயிழைத் தோழியர் ஆயிரவலொடு கூடி வாழ்வளோ? கண்ணிற்கினிய வண்ணமும் வடிவுமின்றிக் கருங்காலிக் கட்டைபோல் தோன்றுங் காட்டுப் பெண்ணையும் கண்டவன், அணங்குகொல்! ஆய்மயில் கொல்! என்ன வியப்பனோ? களவொழுக்கம் கற்பாக மாறுவதும், கற்பு வாழ்க்கையிற் கணவர் காவலுந் தூதும் போரும் வாணிகமும் பற்றி, காலினுங் கலத்தினும் சேணேடுந்தேயமும் செல்லுதல் அநாகரிகக் காலத்திலுண்டோ ? இனி அகப்பொருள் பற்றிய தனித்துறைச் செய்யுட்களும் கோவைப் பனுவல்களும், காதல் வாழ்க்கையைத் தொகுத்தும் வகுத்தும் விரித்தும், அறிவியல் முறையிலும் அழகிய பாவடிவிலுங் கூறுவதும், அநாகரிக நிலையைக் காட்டுமோ? இத்தகைய மடமைக் கருத்துக்கள் இக்காலத்தும் எழுந்துபரவற்கு, இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே முதற் கரணியம் என அறிக.
இனி, தமிழக் களவிற்கும் ஆரியக் காந்தருவத்திற்கு முள்ள மறைவென்னும் ஒருபுடை யொப்புமைபற்றி.
"அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே."
என்ற தொல்காப்பியர்(கள.1) கூறியுள்ளது கொண்டு, தமிழ் நூற் காதல் முறைகளை ஆரியநூல் மண முறைகளொடு தொடர்ப்பு படுத்தி, களவொழுக்கமுங் காந்தருவமும் ஒன்றென்று கூறுவர் உரையாசிரியன்மார். கந்தருவரை வானவர் வகையினரென்று வடநூல்கள் குறிப்பதனாலும் "கந்தருவர்க்குக் கற்பின்றியமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே யமையாது." (தொல்.கள.1.உரை) என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பதனாலும், காந்தருவ வொழுக்கம் நெறிப்படாததும் காமவின்ப மொன்றைஅய கருதியதும் மகக்ளைந்திணைக் களவொழுக்கத்தினின்றும் வேறுபட்டது மாகுமென்று துணியப்படும். வெம்பாவிலும்(mist) மஞ்சிலும் தோன்றும் நகர நிழலை(mirage)க் கந்தருப்ப நகரம் என்பதனாலும், காந்தருவ வொழுக்கத்தின் கருதியற்றன்மை அறியப்படும்.
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.
குறள் எண் 1102
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
குறள் எண் 1103
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
தாம் வீழ்வார் மென் தோள்-துயிலின் இனிதுகொல்-
தாமரைக்கண்ணான் உலகு.
குறள் எண் 1104
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
நீங்கின் தெறூஉம், குறுகுங்கால் தண்ணென்னும்,
தீ யாண்டுப் பெற்றாள், இவள்.
குறள் எண் 1105
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே-
தோட்டார் கதுப்பினாள் தோள்.
குறள் எண் 1106
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான், பேதைக்கு
அமிழ்தின் இயன்றன, தோள்.
குறள் எண் 1107
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
தம் இல் இருந்து, தமது பாத்து உண்டற்றால்-
அம் மா அரிவை முயக்கு.
குறள் எண் 1108
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
வீழும் இருவர்க்கு இனிதே-வளி இடை
போழப் படாஅ முயக்கு.
குறள் எண் 1109
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
ஊடல், உணர்தல், புணர்தல் இவை-காமம்
கூடியார் பெற்ற பயன்.
குறள் எண் 1110
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல்
அறிதோறு அறியாமை கண்டற்றால்-காமம்
செறிதோறும் சேயிழைமாட்டு.
குறள் எண் 1111
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
அஃதாவது , தலைமகன் தலைமகள் அழகைப் பாராட்டிக் கூறுதல் . இது புணர்ச்சியின்பம் பெற்ற பின்பு அளவில்லா மகிழ்ச்சியொடும் அடக்க வொண்ணா வுணர்ச்சியொடும் நிகழ்வதாகலின் , புணர்ச்சி மகிழ்தலின் பின் வைக்கப்பட்டது .
நல்நீரை! வாழி!-அனிச்சமே!-நின்னினும்
மெல் நீரள், யாம் வீழ்பவள்.
குறள் எண் 1112
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
மலர் காணின் மையாத்தி-நெஞ்சே!-'இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும்!' என்று.
குறள் எண் 1113
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
முறி, மேனி, முத்தம், முறுவல்; வெறி, நாற்றம்;
வேல், உண்கண்;-வேய்த்தோளவட்கு.
குறள் எண் 1114
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்-
மாணிழை கண் ஒவ்வேம்!ஒ என்று.
குறள் எண் 1115
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
அனிச்சப்பூக் கால் களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு
நல்ல படாஅ, பறை.
குறள் எண் 1116
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
மதியும் மடந்தை முகனும் அறியா,
பதியின் கலங்கிய, மீன்.
குறள் எண் 1117
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ , மாதர் முகத்து.
குறள் எண் 1118
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
மாதர் முகம்போல் ஔதவிட வல்லையேல்,
காதலை-வாழி, மதி.
குறள் எண் 1119
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்திஆயின்,
பலர் காணத் தோன்றல்!-மதி.
குறள் எண் 1120
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 112. நலம்புனைந்துரைத்தல்
அனிச்சமும் அன்னத்தின் தூவியும், மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
குறள் எண் 1121
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
அஃதாவது , தலைமகன் தன்காதன் மிகுதி கூறுதலும் , தலைமகள் தன் காதன் மிகுதி கூறுதலுமாம் . இது புணர்ச்சியும் உறுப்பு நலனும் பற்றி நிகழ்வதாகலின் புணர்ச்சி மகிழ்தல் , நலம்புனைந்துரைத்தல் என்பவற்றின் பின் வைக்கப்பட்டது . இவ்வதிகாரக் குறள்களுள் முன்னைந்தும் தலைமகன் கூற்றும் பின்னைந்தும் தலைமகள் கூற்றுமாகும் .
பாலொடு தேன் கலந்தற்றே-பணிமொழி
வால் எயிறு ஊறிய நீர்.
குறள் எண் 1122
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
உடம்பொடு உயிரிடை என்ன, மற்று அன்ன-
மடந்தையொடு எம்மிடை நட்பு.
குறள் எண் 1123
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
கருமணியின் பாவாய்! நீ போதாய்-யாம் வீழும்
திருநுதற்கு இல்லை, இடம்.
குறள் எண் 1124
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
வாழ்தல் உயிர்க்கு அன்னள், ஆயிழை; சாதல்
அதற்கு அன்னள், நீங்கும் இடத்து.
குறள் எண் 1125
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
உள்ளுவன்மன், யான் மறப்பின்; மறப்பு அறியேன்,
ஔ அமர்க் கண்ணாள் குணம்.
குறள் எண் 1126
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
கண்ணுள்ளின் போகார்; இமைப்பின் பருவரார்;
நுண்ணியர் எம் காதலவர்.
குறள் எண் 1127
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
கண் உள்ளார் காதலவராக, கண்ணும்
எழுதேம், கரப்பாக்கு அறிந்து.
குறள் எண் 1128
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
நெஞ்சத்தார் காதலவராக, வெய்து உண்டல்
அஞ்சுதும், வேபாக்கு அறிந்து.
குறள் எண் 1129
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
இமைப்பின், கரப்பாக்கு அறிவல்; அனைத்திற்கே,
ஏதிலர்ஒ என்னும், இவ் ஊர்.
குறள் எண் 1130
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல்
உவந்து உறைவர், உள்ளத்துள் என்றும்;ஒ இகந்து உறைவர்;
ஏதிலர்ஒ என்னும், இவ் ஊர்.
குறள் எண் 1131
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
அஃதாவது , சேட்படுத்தப்பட்டு ஆற்றானாகிய தலைமகன்தோழிக்குத்தன் நாண்டுவுரைத்தலும் , தோழியை அறத்தொடுநிற்பிக்கலுற்ற தலைமகள் அவளுக்குத் தன் நாண்டுறவுரைத்தலுமாம் . இது காதல் மிகுந்த விடத்து நிகழ்வதாகலின் , காதற் சிறப்புரைத்தலின் பின்வைக்கப்பட்டது . இவ்வதிகாரத்தின் முதலேழ் குறளும் தலைமகன் கூற்று ; இறுதி மூன்றும் தலைமகள் கூற்று .
அறத்தொடு நிற்றலாவது , களவொழுக்கம் தடைப்பட்டவிடத்தும் , தலைமகளின் காமநோயை அவள் பெற்றோர் பிறழவுணர்ந்து வேலன் வெறியாட்டு நிகழ்த்து மிடத்தும் , மறுத்த விடத்தும் , தலைமகள் தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்குமாக , தலைமக்கள் காதலொழுக்கம் பற்றி நடந்த வுண்மையைக் குறிப்பாகக் கூறுதல் . கற்பாகிய அறத்தைக் காத்து நிற்றலால் இது அறத்தொடு நிற்றல் எனப் பெயர்பெற்றது .
காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏம
மடல் அல்லது இல்லை, வலி.
குறள் எண் 1132
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
நோனா உடம்பும் உயிரும், மடல் ஏறும்-
நாணினை நீக்கி நிறுத்து.
குறள் எண் 1133
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன்; இன்று உடையேன்,
காமுற்றார் ஏறும் மடல்.
குறள் எண் 1134
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
காமக் கடும் புனல் உய்க்குமே-நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை.
குறள் எண் 1135
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு
மாலை உழக்கும் துயர்.
குறள் எண் 1136
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற;-
படல் ஒல்லா, பேதைக்கு என் கண்.
குறள் எண் 1137
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
கடல் அன்ன காமம் உழந்தும், மடல் ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்.
குறள் எண் 1138
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
நிறை அரியர்; மன் அளியர் என்னாது, காமம்
மறை இறந்து, மன்று படும்.
குறள் எண் 1139
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
அறிகிலார், எல்லாரும் என்றே, என் காமம்
மறுகில் மறுகும், மருண்டு.
குறள் எண் 1140
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 114. நாணுத்துறவுரைத்தல்
யாம் கண்ணின் காண நகுப, அறிவு இல்லார்-
யாம் பட்ட தாம் படாவாறு.
குறள் எண் 1141
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
அஃதாவது, களவொழுக்கத்தை விரும்பிய தலைமகன் பிறர் கூறும் அலர் தனக்கு நன்மையாக முடிவதைத் தோழிக்கு அறிவுறுத்தலும் வரைவேனும் உடன்போக்கேனும் வேண்டிய தலைமகளும் தோழியும் அவ்வலரைத் தலைமனுக்கு அறிவுறுத்தலுமாம். இது நாணுத் துறந்த விடத்து நிகழ்வதாகலின் நாணுத்துறவுரைத்தலின் பின்வைக்கப்பட்டது.
அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப்
பலர் அறியார், பாக்கியத்தால்.
குறள் எண் 1142
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது,
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர்.
குறள் எண் 1143
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
உறாஅதோ, ஊர் அறிந்த கௌவை? அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
குறள் எண் 1144
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல்,
தவ்வென்னும், தன்மை இழந்து.
குறள் எண் 1145
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால்-காமம்
வௌதப்படும்தோறும் இனிது.
குறள் எண் 1146
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
கண்டது மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று.
குறள் எண் 1147
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
ஊரவர் கௌவை எருவாக,அன்னை சொல்
நீராக, நீளும்-இந் நோய்.
குறள் எண் 1148
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்றால்-'கௌவையான்
காமம் நுதுப்பேம்' எனல்.
குறள் எண் 1149
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
அலர் நாண ஒல்வதோ-'அஞ்சல் ஓம்பு!' என்றார்
பலர் நாண நீத்தக்கடை.
குறள் எண் 1150
இன்பத்துப் பால்
களவியல்
அதிகாரம் 115. அலரறிவுறுத்தல்
தாம் வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும்
கௌவை எடுக்கும், இவ் ஊர்.
குறள் எண் 1151
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
கற்பியலாவது, களவொழுக்கும் ஒழுகிய மெய்யுறு புணர்ச்சியாரும் அஃதில்லா உள்ளப் புணர்ச்சியரும், வௌதப்படையாகக் கூடிவாழும் இல்லற வாழ்க்கையைப் பற்றிக் கூறும் பாற்பகுதி. கற்பாவது ஒருவரையுங் காதலியாமையும் காதலிப்பின் எதிர்ப்பாலருள் ஒருவரையே காதலிப்பதும் ஆகும். அது கற்போல் திண்ணிய பண்பாதலின் கற்பெனப்பட்டது.
"கற்பென்னுந் -திண்மையுண்டாகப் பெறின்"<div align=right>(குறள். 54)</div>
"கல்லொடு தொடர்ந்த நெஞ்சங் கற்பின்மேற் கண்டதுண்டோ "<div align=right>(கம்ப. சுந்தர.நிந்தனை.39)</div>
கற்பு றுத்திய கற்புடை யாடனை<div align=right>( அயோத்தி. நகர்நீங்கு. 16)</div>
என்று கம்பர் கூறுதல் காண்க. கற்பென்பது இருபாற்கும் பொதுவாதலாலும் மணஞ்செய்யு முன்பே அமைந்திருத்தலாலும், "கொண்டானிற் சிறந்த தெய்வம் இன்றெனவும் அவனை இன்னவாறே வழிபடுகவெனவும் இருமுது குரவர் கற்பித்தலானும், 'அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும்' 'ஐயர் பாங்கினு அமரர்ச் சுட்டியும்' (தொல், பொ. 146) ஒழுகும் ஒழுக்கந் தலைமகன் கற்பித்தலாலுங் கற்பாயிற்று. இனித் தலைவனுங் களவின்கண் ஓரையும் நாளுந் தீதென்றதனைத் துறந்தொழுகினாற்போல ஒழுகாது ஓத்தினுங் கரணத்தினும் யாத்த சிறப்பிலக்கணங்களைக் கற்பித்துக் கொண்டு துறவறத்திற் செல்லுந் துணையும் இல்லற நிகழ்த்துதலிற் கற்பாயிற்று. "(தொ.கற், 1,உரை) என்று நச்சினார்க்கினியர் கூறியிருப்பது ஆரியக் கருத்தேயன்றித் தமிழக்கருத்தன்று. மண மகளுக்கு பணிவிடை பற்றிக் கற்பிப்பதெல்லாம் அறிவுரையே யன்றிக் கற்புரை யன்று. இல்லறத்தாரெல்லாரும் இறுதியில் துறவறஞ் செல்லவேண்டுமென்பதும் தமிழர்க்குரியதன்று.
கற்பொழுக்கம் என்னும் இல்லற வாழ்க்கை களவின்வழிப்பட்டதும் வழிப்படாததும் எனும் இருதிறத்தது. களவின் வழிப்பட்டதும், காதலியை வரைந்து கொண்டதும் உடன் கொண்டு சென்றதும் என இருவகைத்து. வரைந்து கொண்டதும், வௌதப்படு முன் வரைந்ததும் வௌதப்பட்டபின் வரைந்ததும் என இரு நிலைமைத்து, இனி, இல்லற வாழ்க்கையும் , கரணம் என்னும் ஒப்பந்த அல்லது வாழ்த்துச்சடங்கொடு தொடங்குவதும் அஃதின்றித் தொடங்குவதும் என இரு மரபினதாம். கரணச்சடங்கு அவரவர் பொருளாட்சி நிலைமைக்கேற்ப விழாவொடு கூடியதும் கூடாததுமாக விருக்கும். இவற்றுள் முன்னது கொட்டுத் திருமணம் என்றும், பின்னது கட்டுத்தாலி யென்றும் சொல்லப்பெறும்.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே<div align=right>(தொல், கற். 1)</div>
"கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான."
<div align=right>(தொல், கற் 2)</div>
திருவள்ளுவர் சொற்களை மட்டுமன்றிப் பொருள்களையுஞ் சுருங்கச் சொல்கின்றாராதலின், பெற்றோர்க்குச் சிறிதுகாலம் பெருந்துயர் விளைக்கும் உடன்போக்கையும், இடை வகுப்பார்க்கும் எளியார்க்கும் கைக்கு மிஞ்சிய செலவையுங் கடனையும் நேர்விக்குங் கரண விழாவையும், ஆங்காங்குக் குறிப்பாகவன்றி வௌதப்படையாகச் சொல்லியிலர்.
இனி, தமிழக் களவுமணம் ஆரியக் காந்தருவத்தை யொக்கு மென்று தொல்காப்பியர் கூறியதைப் பற்றுக் கோடாகக் கொண்டு,
"முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே"<div align=right>(தொல், கள. 14)</div>என்னுந் தொல்காப்பிய நூற்பாவிற் குறிக்கப்பட்டுள்ள 'முன்னைய மூன்றும்' அசுரம் இராக்கதம் பைசாசம் என்றும், 'பின்னர் நான்கும்' பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் என்றும், உரையாசிரிய ரெல்லாரும் மயங்கி யுரைப்பாராயினர். அசுரம் என்பது கைக்கிளை யாகத் தொடங்கினும் இருதலைக்காமமாகவும் மாறலாமாதலானும், இராக்கதமும் பைசாசமும் பெருந்திணையாதலானும், பிரமம் முதலிய நான்கும் கைக்கிளையாகவோ இருதலைக் காமமாகவோதா னிருக்க முடியுமாதலின் ஒரு வகையினும் பெருந்திணையாகாமையானும், தமிழ மணமுறையை ஆரியமணமுறையொடு ஒப்புநோக்குவது ஒரு சிறிதும் பொருந்தாதொனக் கூறி விடுக்க.
இக்கற்பியலை ஆசிரியர் பதினெண்ணதிகாரத்தாற் கூறத் தொடங்கி, முதற்கண் பிரிவாற்றாமை கூறுகின்றார்.
அஃதாவது, காதலன் காதலியை வரைந்துகொண்ட பின், தலைமகள் இல்லத்திலிருக்கத் தலைமகன் அறம்பொருள் பற்றித் தன் தொழிற்கேற்ப ஒரு வினைமேற்கொண்டு ஆயிடையுஞ் சேயிடையும் பிரிந்து செல்லுங்கால், அவள் அப்பிரிவைப் பொறாதிருத்தல். அது பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழிகூறல், அவளுக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பறிந்து கூறல், பிரிவுணர்த்திய விடத்துக்கூறல், பின் ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறல் என நால்வகையாற் கூறப்படும்.
இஃது அறநூலாதலால், இலக்கண நூல்களிலுங் கோவைகளிலுங் கூறப்படும் பரத்தையிற் பிரிவு இங்கு விலக்கப்பட்டதாம். இதையறியாது "அறம் பொருளின்பங்களின் பொருட்டு "என இன்பத்தையுஞ் சேர்த்துக் கூறினார் பரிமேலழகர். கற்பொடு பொருந்தாத பிறனில் விழைதல் அறத்துப்பாலிலும், வரைவின் மகளிர் தொடர்பு பொருட்பாலிலும் , கூறி விலக்கப்பட்டமை காண்க. புலவிமுதலிய மூன்றதிகாரங்களிலுங் கூறப்பட்டுள்ள பரத்தைமைக் குறிப்புக்களெல்லாம், தலைமகள் தன் மடமையால் தலைமகன் மீது ஏற்றிக்கூறிய இட்டேற்றமேயன்றி வேறல்லவென்க.
பிரிவு: தூது, போர், சந்துசெய்தல், நாடுகாவல், பொருளீட்டல் என நோக்கம்பற்றிப் பலதிறப்படும். ஆரிய வேதமும் அதன் வழிப்பட்ட நூல்களுங் கற்கச்செல்லும் ஓதற்பிரிவு தமிழருக்குரிய தன்று. 'வேந்தற்குற்றுழி' என்னும் வேளாண் தலைவர் வேளிர் பிரிவும், 'வேந்துவிடுதொழில்' என்னும் வேளாளர் பிரிவும், போருள் அடங்கும்.
செல்லாமை உண்டேல், எனக்கு உரை; மற்று நின்
வல்வரவு, வாழ்வார்க்கு உரை.
குறள் எண் 1152
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
இன்கண் உடைத்து அவர் பார்வல்; பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால், புணர்வு.
குறள் எண் 1153
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
அரிதுஅரோ, தேற்றம்-அறிவுடையார்கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான்.
குறள் எண் 1154
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
அளித்து, அஞ்சல்!ஒ என்றவர் நீப்பின், தௌதத்த சொல்
தேறியார்க்கு உண்டோ , தவறு.
குறள் எண் 1155
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
ஓம்பின், அமைந்தார் பிரிவு ஓம்பல்! மற்று அவர்
நீங்கின், அரிதால், புணர்வு.
குறள் எண் 1156
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிது, அவர்
நல்குவர்ஒ என்னும் நசை.
குறள் எண் 1157
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
துறைவன் துறந்தமை தூற்றாகொல்-முன்கை
இறை இறவாநின்ற வளை.
குறள் எண் 1158
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
இன்னாது, இனன் இல் ஊர் வாழ்தல்; அதனினும்
இன்னாது, இனியார்ப் பிரிவு.
குறள் எண் 1159
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
தொடின் சுடின் அல்லது, காமநோய் போல,
விடின் சுடல் ஆற்றுமோ, தீ.
குறள் எண் 1160
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 116. பிரிவாற்றாமை
அரிது ஆற்றி, அல்லல் நோய் நீக்கி, பிரிவு ஆற்றி,
பின் இருந்து, வாழ்வார் பலர்.
குறள் எண் 1161
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
அஃதாவது , பிரிவாற்றாளாகிய தலைமகள் , தானுறுகின்ற துன்பத்தை இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தலால் வருந்துதல் , படர்தல் - உள்ளுதல் .
'படரே யுள்ளல் செலவு மாகும்.'
<div align=right>(தொல்.உரி.42)
</div>
மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை-இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
குறள் எண் 1162
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
குறள் எண் 1163
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும், என்
நோனா உடம்பினகத்து.
குறள் எண் 1164
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
காமக் கடல் மன்னும் உண்டே;அது நீந்தும்
ஏமப் புணை மன்னும் இல்.
குறள் எண் 1165
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
துப்பின் எவன் ஆவர்மன்கொல்-துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர்.
குறள் எண் 1166
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
இன்பம் கடல் மற்றுக் காமம்; அஃது அடுங்கால்,
துன்பம் அதனின் பெரிது.
குறள் எண் 1167
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்,
யாமத்தும், யானே உளேன்.
குறள் எண் 1168
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
மன் உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா!-
என் அல்லது இல்லை, துணை.
குறள் எண் 1169
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
கொடியார் கொடுமையின் தாம் கொடிய-இந் நாள்
நெடிய கழியும் இரா.
குறள் எண் 1170
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்
உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின்,வௌளநீர்
நீந்தல மன்னோ, என் கண்.
குறள் எண் 1171
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
அஃதாவது, தலைமகளின் கண்கள் தலைமகனை விரைந்து காணும் விருப்பத்தால் வருந்துதல், விதுப்புக் காண்டற்கு விரைதல். இது இடைவிடாது நினைத்து மெலிந்த விடத்து நிகழ்வதாகலின், படர் மெலிந்திரங்களின் பின் வைக்கப்பட்டது
கண்டாங் கலுழ்வது எவன்கொலோ-தண்டா நோய்,
தாம் காட்ட, யாம் கண்டது.
குறள் எண் 1172
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா,
பைதல் உழப்பது எவன்.
குறள் எண் 1173
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத்தக்கது உடைத்து.
குறள் எண் 1174
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
பெயல் ஆற்றா நீர் உலந்த, உண்கண்-உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என்கண் நிறுத்து.
குறள் எண் 1175
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
படல் ஆற்றா, பைதல் உழக்கும்-கடல் ஆற்றாக்
காம நோய் செய்த என் கண்.
குறள் எண் 1176
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
ஓஒ, இனிதே!-எமக்கு இந் நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது.
குறள் எண் 1177
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
உழந்து உழந்து உள்நீர் அறுக-விழைந்து இழைந்து
வேண்டி அவர்க் கண்ட கண்.
குறள் எண் 1178
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க்
காணாது அமைவு இல கண்.
குறள் எண் 1179
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்.
குறள் எண் 1180
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 118. கண்விதுப்பழிதல்
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால்-எம்போல்
அறை பறை கண்ணார் அகத்து.
குறள் எண் 1181
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
அஃதாவது, பிரிவாற்றாமையால் தலைமகளின் மேனியிற் பசலை யென்னும் நிறவேறுபாடு தோன்றற் கேதுவாகிய வருத்தம். இது தலைமகனை நீண்ட நாளாகக் காணப்பெறாவிடத்து நிகழ்வதாகலின், கண்விதுப்பழி தலின் பின் வைக்கப்பட்டது.
பசப்பு அல்லது பசலை யென்பது பைம்பொன்னொத்த பசுமஞ்சள் நிறம் கொண்டது. அது சணங்கு, தேமல் என்றும் பெயர் பெறும். மோனியழகினாலும் தேமல் படர்வதுண்டு. அது அழகு தேமல் எனப்படும்.
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்; பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்கோ, பிற.
குறள் எண் 1182
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து, என்
மேனிமேல் ஊரும், பசப்பு.
குறள் எண் 1183
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
சாயலும் நாணும் அவர் கொண்டார்-கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
குறள் எண் 1184
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
உள்ளுவன்மன் யான்; உரைப்பது அவர்திறமால்;
கள்ளம் பிறவோ, பசப்பு.
குறள் எண் 1185
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
உவக்காண், எம் காதலர் செல்வார்; இவக்காண், என்
மேனி பசப்பு ஊர்வது.
குறள் எண் 1186
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும், பசப்பு.
குறள் எண் 1187
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
புல்லிக் கிடந்தேன், புடைபெயர்ந்தேன்; அவ் அளவில்,
அள்ளிக்கொள்வற்றே, பசப்பு.
குறள் எண் 1188
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
பசந்தாள் இவள் என்பது அல்லால், இவளைத்
துறந்தார் அவர்ஒ என்பார் இல்.
குறள் எண் 1189
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
பசக்கமன் பட்டாங்கு, என் மேனி-நயப்பித்தார்
நல் நிலையர் ஆவர் எனின்.
குறள் எண் 1190
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 119. பசப்புறு பருவரல்
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே-நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எ!னின்.
குறள் எண் 1191
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
அஃதாவது, பிரிவின்கண் தனித்திருந்து நினைதல் மிகுதியைத் தலைமகள் தன்கண்ணதேயாகக் கூறுதல். தலைமகன் அறமும் பொருளும் நோக்கிப் பிரிதலின், அவன்கண் அஃது இல்லாதாயிற்று. இது பசப்
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே,
காமத்துக் காழ் இல் கனி.
குறள் எண் 1192
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்-வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
குறள் எண் 1193
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே,
வாழுநம்ஒ என்னும் செருக்கு.
குறள் எண் 1194
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
வீழப்படுவார், கெழீஇயிலர், தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின்.
குறள் எண் 1195
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக்கடை.
குறள் எண் 1196
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
ஒருதலையான் இன்னாது, காமம்; காப் போல
இருதலையானும் இனிது.
குறள் எண் 1197
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
பருவரலும் பைதலும் காணான்கொல்-காமன்
ஒருவர்கண் நின்று ஒழுகுவான்.
குறள் எண் 1198
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது, உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
குறள் எண் 1199
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு
இசையும் இனிய, செவிக்கு.
குறள் எண் 1200
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்-கடலைச்
செறாஅஅய்!-வாழிய நெஞ்சு.
குறள் எண் 1201
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
அஃதாவது, முன் கூடிப்பெற்ற இன்பத்தால் ஒருவரையொருவர் நினைந்து தலைமகள் தன் இல்லத்திலும் தலைமகன் தொலைவான அயவிடத்திலும் தனித்தனி கூற்று நிகழ்த்துதல். இஃது இருவர்க்கும் பொதுவ
உள்ளினும், தீராப் பெரு மகிழ் செய்தலால்,
கள்ளினும் காமம் இனிது.
குறள் எண் 1202
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
எனைத்து ஒன்று இனிதேகாண் காமம்; தாம் வீழ்வார்
நினைப்ப, வருவது ஒன்று இல்.
குறள் எண் 1203
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
நினைப்பவர் போன்று நினையார்கொல்-தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
குறள் எண் 1204
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
யாமும் உளேம்கொல், அவர் நெஞ்சத்து?-எம் நெஞ்சத்து,
ஓஒ! உளரே அவர்.
குறள் எண் 1205
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார்கொல்-
எம் நெஞ்சத்து ஓவா வரல்.
குறள் எண் 1206
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
மற்று யான் என் உளேன் மன்னோ! அவரொடு யான்
உற்ற நாள் உள்ள, உளேன்.
குறள் எண் 1207
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
மறப்பின், எவன் ஆவன் மன்கொல்-மறப்பு அறியேன்,
உள்ளினும் உள்ளம் சுடும்.
குறள் எண் 1208
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
எனைத்தும் நினைப்பினும் காயார்; அனைத்து அன்றோ,
காதலர் செய்யும் சிறப்பு.
குறள் எண் 1209
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
விளியும், என் இன் உயிர்-'வேறு அல்லம்' என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து.
குறள் எண் 1210
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 121. நினைந்தவர் புலம்பல்
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி-வாழி மதி.
குறள் எண் 1211
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலை யுரைத்தல்
அஃதாவது, தலைமகள் தலைமகனைப்பற்றித் தான்கண்ட கனவுகளைத் தோழிக்குச் சொல்லுதல். கனவு பொதுவாக நனவின்கண் நிகழும் நினைவுமிகுதியாற் காண்பதாகலின், இது நினைந்தவர் புலம்பலின் பின் வைக்கப்பட்டது.
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்கொல், விருந்து.
குறள் எண் 1212
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்மன்.
குறள் எண் 1213
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு, என் உயிர்.
குறள் எண் 1214
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம்-நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
குறள் எண் 1215
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவினான் கண்டதூஉம், ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.
குறள் எண் 1216
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவு என ஒன்று இல்லைஆயின், கனவினான்
காதலர் நீங்கலர்மன்.
குறள் எண் 1217
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவினான் நல்காக் கொடியார் கனவினான்,
என், எம்மைப் பீழிப்பது.
குறள் எண் 1218
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி, விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர், விரைந்து.
குறள் எண் 1219
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவினான் நல்காரை நோவர்-கனவினான்
காதலர்க் காணாதவர்.
குறள் எண் 1220
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 122. கனவுநிலையுரைத்தல்
நனவினான், நம் நீத்தார் என்பர்; கனவினான்
காணார்கொல், இவ் ஊரவர்.
குறள் எண் 1221
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
அஃதாவது, மாலைப் பொழுது வந்தவிடத்து அது துணையில்லா மகளிர்க்குத் துன்பந் தருவது கண்டு வருந்துதல். மாலை என்பது இரவின் முதற்பத்து நாழிகை, கணவரைப் பிரிந்த மகளிர்க்குப் பிரிவுத் துன்பம் இரு வேளைக்கும் பொதுவேனும், பகலிற்போற் பல பொருள்களைக் கண்டும் பல வினைகளைச் செய்தும் பலரொடு பேசியும் காலம்போக்கும் வாய்ப்பு இரவிலின்மையானும், மக்களைப்போன்றே விலங்குபறவைகளும் அடங்கித் துணையொடு கண்படை கொள்ளுங் காட்சி துன்பந்தருதலானும், ஆயர் புல்லாங்குழலிசை அத்துன்பத்தை மிகுத்தலானும், மாலைப் பொழுது வருந்துவதற்கிடமாயிற்று. காதலரைப் பிரிந்த மகளிர்க்குப் பொதுவாக இரவில் தூக்கம் வராமையானும், அரிதில் வருந் தூக்கத்திற் காணுங்கனவும் மெய்யான இன்பந்தராமையானும், அப்போலியின்பக் கனவும் இடைவிழிப்பால் துன்பத்தை மிகுத்தலானும், கனவுநிலையால் நீண்ட காலம் பிரிவாற்றியிருக்க இயலாமையானும், அவற்றின் விளைவான பொழுதுகண்டிரங்கல் கனவுநிலையுரைத்தலின் பின் வைக்கப்பட்டது.
மாலையோ அல்லை; மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ;-வாழி, பொழுது.
குறள் எண் 1222
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
புன்கண்ணை-வாழி, மருள் மாலை!-எம் கேள்போல்
வன்கண்ணதோ, நின் துணை.
குறள் எண் 1223
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
பனி அரும்பிப் பைதல் கொள் மாலை, துனி அரும்பித்
துன்பம் வளர, வரும்.
குறள் எண் 1224
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
காதலர் இல் வழி, மாலை, கொலைக்களத்து
ஏதிலர் போல, வரும்.
குறள் எண் 1225
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
காலைக்குச் செய்த நன்று என்கொல்? எவன்கொல், யான்
மாலைக்குச் செய்த பகை.
குறள் எண் 1226
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
மாலை நோய் செய்தல், மணந்தார் அகலாத
காலை அறிந்ததிலேன்.
குறள் எண் 1227
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
காலை அரும்பி, பகல் எல்லாம் போது ஆகி,
மாலை மலரும்-இந் நோய்.
குறள் எண் 1228
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
அழல் போலும் மாலைக்குத் தூது ஆகி, ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
குறள் எண் 1229
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
பதி மருண்டு, பைதல் உழக்கும்-மதி மருண்டு,
மாலை படர்தரும் போழ்து.
குறள் எண் 1230
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 123. பொழுதுகண்டிரங்கல்
பொருள் மாலையாளரை உள்ளி, மருள் மாலை
மாயும், என் மாயா உயிர்.
குறள் எண் 1231
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
அஃதாவது, பிரிவாற்றாத தலைமகளின் கண்ணும் தோளும் நெற்றியும் முதலிய உறுப்புக்கள் தம் அழகிழத்தல். இது மன வருத்தம் மிக்க விடத்து நிகழ்வ தாகலின், பொழுதுகண் டிரங்கலின் பின் வைக்கப்பட்டது.
சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி,
நறு மலர் நாணின, கண்.<a name='1'></a>
குறள் எண் 1232
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்-
பசந்து பனி வாரும் கண்.
குறள் எண் 1233
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
தணந்தமை சால அறிவிப்ப போலும்-
மணந்த நாள் வீங்கிய தோள்.
குறள் எண் 1234
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
பணை நீங்கிப் பைந் தொடி சோரும்-துணை நீங்கித்
தொல் கவின் வாடிய தோள்.
குறள் எண் 1235
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
கொடியார் கொடுமை உரைக்கும்-தொடியொடு
தொல் கவின் வாடிய தோள்.
குறள் எண் 1236
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
தொடியொடு தோள் நெகிழ நோவல்-அவரை,
கொடியர்ஒ எனக் கூறல் நொந்து.
குறள் எண் 1237
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
பாடு பெறுதியோ-நெஞ்சே!-கொடியார்க்கு என்
வாடு தோட் பூசல் உரைத்து.
குறள் எண் 1238
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
முயங்கிய கைகளை ஊக்க, பசந்தது-
பைந் தொடிப் பேதை நுதல்.
குறள் எண் 1239
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
முயக்கிடைத் தண் வளி போழ, பசப்பு உற்ற-
பேதை பெரு மழைக்கண்.
குறள் எண் 1240
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 124. உறுப்பு நலனிழத்தல்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே-
ஔ நுதல் செய்தது கண்டு.
குறள் எண் 1241
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
அஃதாவது, ஆற்றாமை மீதூரத் தனக்கொரு பற்றுக்கோடு காணாத தலைமகள், செய்வ தறியாது தன் நெஞ்சொடு பலவாறு.சொல்லுதல் . இது உறுப்புக்கள் தம் அழகிழந்த விடத்து நிகழ்வதாகவின் , உறுப்பு நலனழிதலின் பின் வைக்கப்பட்டது .
நினைத்து ஒன்று சொல்லாயோ-நெஞ்சே!-எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து.
குறள் எண் 1242
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
காதல் அவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை-வாழி, என் நெஞ்சு.
குறள் எண் 1243
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
இருந்து உள்ளி, என் பரிதல்?-நெஞ்சே!-பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்கண் இல்.
குறள் எண் 1244
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
கண்ணும் கொளச் சேறி-நெஞ்சே!-இவை என்னைத்
தின்னும், அவர்க் காணல் உற்று.
குறள் எண் 1245
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
செற்றார் எனக் கைவிடல் உண்டோ -நெஞ்சே!-யாம்
உற்றால் உறாஅதவர்.
குறள் எண் 1246
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
கலந்து உணர்த்தும் காதலர்க் கண்டால், புலந்து உணராய்;
பொய்க் காய்வு காய்தி-என் நெஞ்சு.
குறள் எண் 1247
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
காமம் விடு, ஒன்றோ; நாண் விடு-நல் நெஞ்சே!-
யானோ பொறேன், இவ் இரண்டு.
குறள் எண் 1248
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
பரிந்து அவர் நல்கார் என்று, ஏங்கி, பிரிந்தவர்-
பின் செல்வாய்; பேதை-என் நெஞ்சு.
குறள் எண் 1249
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
உள்ளத்தார் காதலவர் ஆக, உள்ளி நீ
யாருழைச் சேறி?- என் நெஞ்சு.
குறள் எண் 1250
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 125. நெஞ்சோடு கிளத்தல்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா,
இன்னும் இழத்தும், கவின்.
குறள் எண் 1251
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
அஃதாவது, தலைமகள் தன் மனத்து அடக்கவேண்டிய பல செய்திகளைத் தன் வேட்கை மிகுதியால் வௌதவிட்டுச்சொல்லுதல். "நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை". என்றார் நல்லந்துவனார் (கலி. 123). நிறையழிதற்குக் கரணியம் மேலதிகார ஈற்றுக் குறளிற் கூறப்பட்டதனால், இது நெஞ்சொடு கிளத்தலின் பின் வைக்கப் பட்டது.
காமக் கணிச்சி உடைக்கும்-நிறை என்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு.
குறள் எண் 1252
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
காமம் என ஒன்றோ கண் இன்று! என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும், தொழில்.
குறள் எண் 1253
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பு இன்றித்
தும்மல்போல் தோன்றிவிடும்.
குறள் எண் 1254
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
நிறை உடையேன் என்பேன்மன், யானோ; என் காமம்,
மறை இறந்து, மன்றுபடும்.
குறள் எண் 1255
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று.
குறள் எண் 1256
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
செற்றவர்பின் சேறல் வேண்டி,-அளித்துஅரோ!-
எற்று, என்னை உற்ற துயர்.
குறள் எண் 1257
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
நாண் என ஒன்றோ அறியலம்-காமத்தான்,
பேணியார் பெட்ப செயின்.
குறள் எண் 1258
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ-நம்
பெண்மை உடைக்கும் படை.
குறள் எண் 1259
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
புலப்பல் எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
குறள் எண் 1260
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 126. நிறையழிதல்
நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ -
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்.
குறள் எண் 1261
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
அஃதாவது, தொலைவிடைப் பிரிவின்கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கைமிகுதியினால் ஒருவரையொருவர் காண்டற்கு விரைதல். இதனுள் தலைமகள் கூற்று நிறையழிவால் நிகழ்ந்ததாகலின், நிறை யழிதலின் பின் வைக்கப்பட்டது.
"தலைமகன் பிரிவும் தலைமக ளாற்றாமையும் அதிகாரப்பட்டு வருகின்றமையின், இருவரையுஞ் சுட்டிப் பொதுவாகிய பன்மைப் பாலாற் கூறினார். பிறரெல்லாம் இதனைத் தலைமகனை நினைந்து தலைமகள் விதுப்புற லென்றார். சுட்டுப்பெயர் சொல்லுவான் குறிப்பொடு கூடிய பொருளுணர்த்துவதல்லது தானொன்றற்குப் பெயராகாமையானும், கவிகூற்றாய அதிகாரத்துத் தலைமகன் உயர்த்தற் பன்மையாற் கூறப்படாமையானும், அஃதுரையன்மை யறிக". என்று பரிமேலழகர் இவ்வதிகார முகவுரையிற் கூறியது சரியே. 'பிறர்' என்றது மணக்குடவ பரிப்பெருமாளரை. 'அவர்வயின் விரும்பல்' என்பது காலிங்கர் கொண்ட பாடம்.
வாள் அற்றுப் புற்கென்ற, கண்ணும்; அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்ந்த, விரல்.
குறள் எண் 1262
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
இலங்கிழாய்! இன்று மறப்பின், என் தோள்மேல்
கலம் கழியும், காரிகை நீத்து.
குறள் எண் 1263
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
உரன் நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ, இன்னும் உளேன்.
குறள் எண் 1264
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி,
கோடு கொடு ஏறும், என் நெஞ்சு.
குறள் எண் 1265
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
காண்கமன், கொண்கனைக் கண் ஆர; கண்டபின்,
நீங்கும், என் மென் தோட் பசப்பு.
குறள் எண் 1266
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
வருகமன், கொண்கன் ஒருநாள்; பருகுவன்,
பைதல்நோய் எல்லாம் கெட.
குறள் எண் 1267
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
புலப்பேன்கொல்-புல்லுவேன் கொல்லோ-கலப்பேன்கொல்-
கண் அன்ன கேளிர் வரின்.
குறள் எண் 1268
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
வினை கலந்து வென்றீக, வேந்தன்! மனை கலந்து
மாலை அயர்கம், விருந்து.
குறள் எண் 1269
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
ஒரு நாள் எழு நாள்போல் செல்லும்-சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு.
குறள் எண் 1270
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 127. அவர்வயின் விதும்பல்
பெறின் என் ஆம்-பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்-
உள்ளம் உடைந்து உக்கக்கால்.
குறள் எண் 1271
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
அஃதாவது, தலைமகன்,தலைமகள்,தோழியாகிய மூவரும் ஒருவர் குறிப்பை யொருவர்க்குச் சொல்லுதல். இது பிரிந்துபோன தலைமகன் திரும்பி வந்துவிடத்து நிகழ்வதாகலின்; அவர்வயின் விதும்பலின் பின் வைக்கப்பட்டது.
கரப்பினும், கையிகந்து ஒல்லா, நின் உண்கண்
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு.
குறள் எண் 1272
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
கண் நிறைந்த காரிகை, காம்பு ஏர் தோள், பேதைக்குப்
பெண் நிறைந்த நீர்மை பெரிது.
குறள் எண் 1273
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
மணியுள் திகழ்தரும் நூல்போல், மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு.
குறள் எண் 1274
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு.
குறள் எண் 1275
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
செறிதொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து.
குறள் எண் 1276
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி,
அன்பு இன்மை சூழ்வது உடைத்து.
குறள் எண் 1277
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும்
முன்னம் உணர்ந்த, வளை.
குறள் எண் 1278
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
நெருநற்றுச் சென்றார் எம் காதலர்; யாமும்
எழு நாளேம், மேனி பசந்து.
குறள் எண் 1279
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
தொடி நோக்கி, மென் தோளும் நோக்கி, அடி நோக்கி,
அஃது, ஆண்டு அவள் செய்தது.
குறள் எண் 1280
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 128. குறிப்பறிவுறுத்தல்
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப-கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு.
குறள் எண் 1281
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
அஃதாவது, தலைமகன், தலைமகள், கலவிக்கண் விரைதல். தலைமகள் பிரிவாற்றாது உடன்போக் குறிப்புணர்த்தலும் புணர்ச்சிக் கேதுவாதலின், குறிப்பறி வுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.
உள்ளக் களித்தலும், காண மகிழ்தலும்,
கள்ளுக்கு இல்; காமத்திற்கு உண்டு.
குறள் எண் 1282
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
தினைத் துணையும் ஊடாமை வேண்டும்-பனைத் துணையும்
காமம் நிறைய வரின்.
குறள் எண் 1283
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும், கொண்கனைக்
காணாது அமையல, கண்.
குறள் எண் 1284
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
ஊடற்கண் சென்றேன்மன்;-தோழி! அது மறந்து
கூடற்கண் சென்றது, என் நெஞ்சு.
குறள் எண் 1285
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல், கொண்கன்
பழி காணேன், கண்ட இடத்து.
குறள் எண் 1286
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
காணுங்கால் காணேன் தவறு ஆய; காணாக்கால்,
காணேன், தவறு அல்லவை.
குறள் எண் 1287
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல்,
பொய்த்தல் அறிந்து, என் புலந்து.
குறள் எண் 1288
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
இளித்தக்க இன்னா செயினும், களித்தார்க்குக்
கள் அற்றே-கள்வ!- நின் மார்பு.
குறள் எண் 1289
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
மலரினும் மெல்லிது காமம்; சிலர், அதன்
செவ்வி தலைப்படுவார்.
குறள் எண் 1290
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
கண்ணின் துனித்தே, கலங்கினாள், புல்லுதல்
என்னினும் தான் விதுப்புற்று.
குறள் எண் 1291
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
அஃதாவது,கரணிய முண்டாய் விட்த்தும் புலக்கக் கருதாது புணர்ச்சி விதும்பும் நெஞ்சுடன் தலைமகன் புலத்தலும் தலைமகள் புலத்தலுமாம் . அதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும், எவன்,-நெஞ்சே!-
நீ எமக்கு ஆகாதது.
குறள் எண் 1292
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
உறாஅதவர்க் கண்ட கண்ணும், அவரைச்
செறாஅர் எனச் சேறி-என் நெஞ்சு.
குறள் எண் 1293
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ-நெஞ்சே!-நீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
குறள் எண் 1294
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
இனி, அன்ன நின்னொடு சூழ்வார் யார்-நெஞ்சே!
துனி செய்து துவ்வாய்காண் மற்று.
குறள் எண் 1295
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
பெறாஅமை அஞ்சும்; பெறின், பிரிவு அஞ்சும்;
அறாஅ இடும்பைத்து-என் நெஞ்சு.
குறள் எண் 1296
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத்
தினிய இருந்தது-என் நெஞ்சு.
குறள் எண் 1297
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.
குறள் எண் 1298
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
எள்ளின், இளிவாம் என்று எண்ணி, அவர் திறம்
உள்ளும்-உயிர்க் காதல் நெஞ்சு.
குறள் எண் 1299
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
துன்பத்திற்கு யாரே துணை ஆவார்-தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி.
குறள் எண் 1300
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
தஞ்சம், தமர் அல்லர் ஏதிலார்-தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி.
குறள் எண் 1301
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
அஃதாவது, தலைமகள் புணர்ச்சி விரும்பாது புலக்கக் கருதியவிடத்துப் புலத்தல்.ஆதிகார முறைமையும் இதனால் விளங்கும்.
புலத்தல் தலைமகள் செயலேயாதலாலும், இவ்வதிகாரத் தலைப்புப் புலவி யென்றே யிருத்தலாலும், உணர்ப்புவயின் வாராவூடற்கண் தலைமகன் சொல்வதெல்லாம் கூடற்கியலாமை பற்றி நொந்து கொள்வதல்லாது கூடல் வேண்டாமென விலக்குதலன்மையாலும் "இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புக்கக் கருதியவழி ஒருவரொடொருவர் புலத்தல்." எனப் பரிமேலழகர் கூறியிருப்பது பொருந்தா தென்க.
புல்லாது இராஅப் புலத்தை; அவர் உறும்
அல்லல் நோய் காண்கம், சிறிது.
குறள் எண் 1302
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
உப்பு அமைந்தற்றால், புலவி; அது சிறிது
மிக்கற்றால், நீள விடல்.
குறள் எண் 1303
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
அலந்தாரை அல்லல் நோய் செய்தற்றால்-தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
குறள் எண் 1304
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
ஊடியவரை உணராமை-வாடிய
வள்ளி முதல் அரிந்தற்று.
குறள் எண் 1305
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், புலத் தகை,
பூ அன்ன கண்ணார் அகத்து.
குறள் எண் 1306
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
துனியும் புலவியும் இல்லாயின், காமம்
கனியும் கருக்காயும் அற்று.
குறள் எண் 1307
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் துன்பம்-'புணர்வது
நீடுவது அன்றுகொல்!' என்று.
குறள் எண் 1308
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
நோதல் எவன், மற்று-'நொந்தார்' என்று அஃது அறியும்
காதலர் இல்லாவழி.
குறள் எண் 1309
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
நீரும் நிழலது இனிதே; புலவியும்
வீழுநர்கண்ணே இனிது.
குறள் எண் 1310
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 131. புலவி
ஊடல் உணங்க, விடுவாரொடு, என் நெஞ்சம்,
கூடுவேம்ஒ என்பது அவா.
குறள் எண் 1311
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
அஃதாவது, நுண்புலவி. அது, தலைமகனும் தலைமகளும் ஓரமளிக்கண் கூடியிருந்தவிடத்து அவன்பாற் புலத்தற்குக் கரணகமான தவறில்லையாகவும் தன் காதல் மிகுதியால் ஒரு நுண்ணிய தவறிருப்பதாகவுட்கொண்டு அவனொடு அவள் புலத்தல். இது புலவியின்நுணுக்கமாதலின் புலவியின் பின்வைக்கப்பட்டது. தவறு என்னும் கரணகத்தின் நுணுக்கம் புலவி என்னும் கருமகத்தின்மேல் நின்றது.
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்;
நண்ணேன்-பரத்த!-நின் மார்பு.
குறள் எண் 1312
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
ஊடி இருந்தேமா, தும்மினார்-யாம் தம்மை,
நீடு வாழ்க!ஒ என்பாக்கு அறிந்து.
குறள் எண் 1313
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
கோட்டுப் பூச் சூடினும் காயும்-'ஒருத்தியைக்
காட்டிய சூடினீர்!' என்று.
குறள் எண் 1314
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
யாரினும் காதலம் என்றேனா, ஊடினாள்-
யாரினும்! யாரினும்!ஒ என்று.
குறள் எண் 1315
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா,
கண் நிறை நீர் கொண்டனள்.
குறள் எண் 1316
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
உள்ளினேன் என்றேன்; மற்று என் மறந்தீர்ஒ என்று என்னைப்
புல்லாள், புலத்தக்கனள்.
குறள் எண் 1317
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
வழுத்தினாள், தும்மினேனாக; அழித்து அழுதாள்,
யார் உள்ளித் தும்மினீர்?ஒ என்று.
குறள் எண் 1318
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
தும்முச் செறுப்ப, அழுதாள், நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ?ஒ என்று.
குறள் எண் 1319
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
தன்னை உணர்த்தினும் காயும், பிறர்க்கும் நீர்
இந் நீரர் ஆகுதிர்!ஒ என்று.
குறள் எண் 1320
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 132. புலவி நுணுக்கம்
நினைத்திருந்து நோக்கினும், காயும், அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர்?ஒ என்று.
குறள் எண் 1321
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
அஃதாவது, அத்தகைய வூடலால் தமக்குக் கூடலின்பஞ் சிறந்தவிடத்து, அச்சிறப்பிற் கேதுவான வூடலைத் தலைமகனுந் தலைமகளும் உவத்தல். உவத்தல் - விரும்பி மகிழ்தல். இவ்வதிகாரம் ஊடலுவகை யென்று பெயர் பெற்றிருப்பினும்.
"துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயு மற்று."
<div align=right>(1306)</div>
என்றதனால், புலவிக்கு அடுத்திருப்பதும் துன்பத்திற் கேதுவானதுமான துனியச்சம் எள்ளளவு மில்லாதிருத்தல் வேண்டுமென்பது பற்றியே, புலவியுவகையை ஊடலுவகையென்று குறித்தாரெனக் கொள்ளலாம். இனி விரைந்து பழுத்துவிடும் பழக்காய்போலப் புலவி நிலையடையும் ஊடல் முதிர்ச்சியெனக் கொள்ளினுமாம்.
இல்லை தவறு அவர்க்கு ஆயினும், ஊடுதல்
வல்லது, அவர் அளிக்குமாறு.
குறள் எண் 1322
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
ஊடலின் தோன்றும் சிறு துனி, நல் அளி
வாடினும், பாடு பெறும்.
குறள் எண் 1323
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
புலத்தலின் புத்தேள்-நாடு உண்டோ -நிலத்தொடு
நீர் இயைந்தன்னாரகத்து.
குறள் எண் 1324
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும்-என்
உள்ளம் உடைக்கும் படை.
குறள் எண் 1325
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
தவறு இலர் ஆயினும், தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின், ஆங்கு ஒன்று உடைத்து.
குறள் எண் 1326
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
உணலினும், உண்டது அறல் இனிது; காமம்
புணர்தலின், ஊடல் இனிது.
குறள் எண் 1327
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
ஊடலின் தோற்றவர் வென்றார்; அது மன்னும்
கூடலின் காணப்படும்.
குறள் எண் 1328
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
ஊடிப் பெறுகுவம்கொல்லோ-நுதல் வெயர்ப்பக்
கூடலின் தோன்றிய உப்பு.
குறள் எண் 1329
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
ஊடுக மன்னோ, ஔதயிழை! யாம் இரப்ப,
நீடுக மன்னோ, இரா.
குறள் எண் 1330
இன்பத்துப் பால்
கற்பியல்
அதிகாரம் 133. ஊடலுவகை
ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம்,
கூடி முயங்கப் பெறின்.
No comments:
Post a Comment